புஷ்பதந்தர்
From Tamil Wiki
புஷ்பதந்தர் (சுவிதிநாதர்) சமண சமயத்தின் ஒன்பதாவது தீர்த்தங்கர். சமண சமய நம்பிக்கையின்படி புஷ்பதந்தர், கருமத் தளைகளிலிருந்து விடுபட்டு, சித்த புருஷராகி அருகர் நிலைக்கு உயர்ந்தார்.
புராணம்
புஷ்பதந்தர், சுக்ரீவனுக்கும் சுப்பிரியாவிற்கும் உத்தரப் பிரதேச மாநிலத்தின் தியோரியாவில் உள்ள குக்குந்தூ எனுமிடத்தில் பிறந்தவர். புஷ்பதந்தர், ஜார்க்கண்ட் மாநிலத்தின் சிகார்ஜி மலையில் முக்தி அடைந்தவர்.
அடையாளங்கள்
- உடல் நிறம்: வெண்நிறம்
- லாஞ்சனம்: முதலை
- மரம்: பவழமல்லி
- உயரம்: 100வில் (300 மீட்டர்)
- முக்தியின் போது வயது: 200000 பூர்வ வருடங்கள்
- முதல் உணவு: ஷாலிப்பூரின் புஷ்பமித்ரா வழங்கிய கீர்
- தலைமை சீடர்கள் (காந்தர்கள்): 88 (விதர்ப்)
- யட்சன்: அஜிதன்
- யட்சினி: மகாகாளி
உசாத்துணை
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.