கொடிஞாழன் மாணி பூதனார்
From Tamil Wiki
Revision as of 13:58, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
கொடிஞாழன் மாணி பூதனார் கடைச்சங்கப்புலவர்களில் ஒருவர். திருவள்ளுவமாலையில் பாயிரம் எழுதினார்.
வாழ்க்கைக் குறிப்பு
கொடிஞாழன் மாணி பூதனார் கடைச்சங்கப்புலவர்களில் ஒருவர். காசிச்செட்டியாரும், சதாசிவம்பிள்ளையாரும் கொடிஞாழன் மாணி பூதனாருக்கு திருவள்ளுவமாலையின் அடிப்படையில் இவருக்கு இடமளித்தனர்.
இலக்கிய வாழ்க்கை
கொடிஞாழன் மாணி பூதனார் திருவள்ளுவர் நூலுக்கு சிறப்புப்பாயிரம் பாடினார்.
பாடல் நடை
அறனறிந்தே மான்ற பொருளறிந்தே மின்பின்
திறனறிந்தேம் வீடு தெளிந்தே மறனறிந்த
வாளார் நெடுமாற வள்ளுவனார் தம்வாயாற்
கேளா தனவெல்லாம் கேட்டு
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
13-Aug-2023, 09:20:21 IST