under review

மொட்டை வேலாப் போடியார்

From Tamil Wiki

மொட்டை வேலாப் போடியார் (1804 - 1880) இலங்கை தமிழ், சைவ அறிஞர், ஈழத்து சிற்றிலக்கியப் புலவர். இவர் எழுதிய தம்பிலுவிற் பள்ளு முக்கியமான நூலாகும்.

வாழ்க்கைக் குறிப்பு

1804இல் இலங்கை மட்டக்களப்பில் சின்னத்தம்பி போடியாருக்கும், கெங்காத்தைக்கும் மகனாக மொட்டை வேலாப் போடியார் பிறந்தார். இயற்பெயர் வேலன்.

இளமைப் பருவத்தில் திண்ணைப் பள்ளிக் கூடத்தில் கல்வி கற்றார். பின்னர் பள்ளிப்ப்படிப்போடு பாடம் நின்றது. பயிற்தொழில் செய்தார்.

இலக்கிய வாழ்க்கை

பயிற்தொழில் சார்ந்த பள்ளு, ஊஞ்சல், அம்மானை, சிந்து முதலிய பாவகைகளைப் பாடினார். மட்டக்களப்பு புலவர் மன்றத்தில் நாள்தோறும் செய்யுள், சொற்பொழிவுகளாற்றினார். வசைப்பாடல்கள் பல பாடினார். நீர்பாசன அதிகாரி தவறான காதல் வழியில் விழுந்தான். அதனால் காதறுக்கப்பட்டவனுக்கு காதலி பால் மாடு தந்து உதவினாள். இந்த வரலாற்றைப் பற்றி பாடும் பாடல் தம்பிலுவிற் பள்ளு.

மறைவு

1880இல் தன் எழுபதாவது வயதில் மட்டக்களப்பையில் காலமானார்.

நூல்கள் பட்டியல்

  • தம்பிலுவிற் பள்ளு

உசாத்துணை



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.