under review

மயில்வாகனப் புலவர்

From Tamil Wiki
Revision as of 07:33, 13 February 2022 by Ramya (talk | contribs)
யாழ்ப்பாண வைபவ மாலை

மயில்வாகனப் புலவர் (1779 - 1816) இலங்கை தமிழ், சைவ அறிஞர், ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

இலங்கை யாழ்ப்பாணம் மதகலில் 1779இல் வையா என்னும் புலவர் மரபில் மயில்வாகனப் புலவர் பிறந்தார். மதகல் சிற்றம்பலப் புலவரது மருமகன். கூழங்கைத் தம்பிரானிடத்துத் தமிழ் இலக்கண இலக்கியங்களும் சித்தாந்த சாத்திரங்களும் கற்றார். வண்ணார்பண்ணை சிவன் கோவிலை கட்டுவித்த வைத்தியலிங்கச் செட்டியார் இவருடன் பயின்றவர்.

இலக்கிய வாழ்க்கை

ஈழத்து சிற்றிலக்கியப் புலவர். அந்தாதி, மாலை ஆகிய சிற்றீலக்கிய வகைமைகளில் பாடல்கள் பாடினார். ஞானாலங்கார ரூப நாடகம் எனும் நாடகத்தையும், காசி யாத்திரை விளக்கம் எனும் நூலையும் எழுதினார்.

நூல்கள் பட்டியல்

  • புலியூர் யமக அந்தாதி
  • யாழ்ப்பாண வைபவ மாலை
  • காசி யாத்திரை விளக்கம்
  • ஞானாலங்கார ரூப நாடகம்

உசாத்துணை


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.