under review

சிலுவைராஜ் சரித்திரம்

From Tamil Wiki
Revision as of 14:22, 3 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected text format issues)
சிலுவைராஜ் சரித்திரம்

சிலுவைராஜ் சரித்திரம் (2003 ) ராஜ் கௌதமன் எழுதிய தன்வரலாற்றுத்தன்மை கொண்ட நாவல். சிலுவைராஜ் என்னும் சிறுவனின் பிறப்பு, இளமைப்பருவத்தில் தொடங்கி அவன் வேலைதேடும் இடத்தில் முடிவடைகிறது. தமிழிலக்கியத்தின் தன்வரலாற்று நாவல்களில் குறிப்பிடத்தக்க படைப்பாக மதிப்பிடப்படுகிறது

எழுத்து, வெளியீடு

சிலுவைராஜ் சரித்திரம் பேரா. ராஜ் கௌதமன் அவர்களால் 2003 ல் எழுதப்பட்டது. முதற்பதிப்பை தமிழினி பதிப்பகம் வெளியிட்டது.

கதைச்சுருக்கம்

சிலுவைராஜ் என்பது ராஜ் கௌதமனின் இயற்பெயரான புஷ்பராஜ் என்பதற்குச் சமானமாக இந்நாவலில் வருகிறது. சிலுவைராஜின் பிறப்பு, கிராமச்சூழலில் அவனுடைய வளர்ப்பு, கல்வி, வேலைதேடி அலைதல், வேலைக்காக இட ஒதுக்கீடு பெறும்பொருட்டு இந்துவாக மதம் மாறுதல் ஆகியவை பேசப்படுகின்றன. சிலுவைராஜின் இளமைப்பருவத்தை கேலியும் விளையாட்டுமாகச் சித்தரிக்கும் ஆசிரியர் கல்விபெறச்செல்லுமிடங்களில் அவன் சந்திக்கும் ஒடுக்குமுறையையும் விவரிக்கிறார்

இலக்கிய இடம்

தமிழில் தன்வரலாற்றுத்தன்மை கொண்ட நாவல்கள் இல்லை. தன் தனிவாழ்க்கையை தமிழ் எழுத்தாளர்கள் நேரடியாக முன்வைப்பதில்லை. பாமா எழுதிய கருக்கு நாவலுக்குப்பின் சிலுவைராஜ் சரித்திரம் தமிழின் இரண்டாவது தன்வரலாற்று நாவல் என்று சொல்லத்தக்கது. ‘நிகழ்ந்தவையும் புனைந்தவையும் ஊடுகலந்த ஒரு யதார்த்தம். கூரிய அங்கதமே நாவல் முழுக்க சிலுவைராஜை நமக்கு அணுக்கமாக ஆக்குகிறது. தமிழிலக்கியத்தின் முதன்மையான இலக்கியப் படைப்புகள் சிலவற்றில் சிலுவைராஜ் சரித்திரமும் ஒன்று’ என்று ஜெயமோகன் மதிப்பிடுகிறார்.

உசாத்துணை


✅Finalised Page