சக்தி: Difference between revisions
No edit summary |
|||
Line 2: | Line 2: | ||
சக்தி (ஆகஸ்ட் 1990) நார்வேயிலிருந்து வெளிவரும் பெண்கள் காலாண்டு இதழ். புலம்பெயர்ந்த பெண்களின் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிவந்த பெண்களுக்கான கலை, இலக்கிய, விஞ்ஞான இதழ். | சக்தி (ஆகஸ்ட் 1990) நார்வேயிலிருந்து வெளிவரும் பெண்கள் காலாண்டு இதழ். புலம்பெயர்ந்த பெண்களின் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிவந்த பெண்களுக்கான கலை, இலக்கிய, விஞ்ஞான இதழ். | ||
== வெளியீடு == | == வெளியீடு == | ||
சக்தி இதழ் ஆகஸ்ட் 1990 முதல் நார்வேயிலிருந்து வெளிவரும் காலாண்டு இதழ். | சக்தி இதழ் ஆகஸ்ட் 1990 முதல் நார்வேயிலிருந்து வெளிவரும் காலாண்டு இதழ். இதழின் ஆசிரியர் தயாநிதி. முதலாவது இதழ் மைத்ரேயியின் முயற்சியால் வந்தது. சுகிர்தா, லிட்டா இராசநாயகம் போன்றோரின் பங்களிப்புகளுடன் பின்னர் வெளிவந்தது. புலம்பெயர்ந்த பெண்கள் பலரின் பங்களிப்புகளுடன் சக்தி தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. இவ்விதழின் ஆசிரியர் தயாநிதி. | ||
== நோக்கம் == | == நோக்கம் == | ||
பெண்கள் மீதான பாகுபாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பெண்களுக்கு இடையே ஒரு ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும், நட்பை ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கோடு இந்த இதழ் வெளிவர ஆரம்பித்தது. கலை, இலக்கிய, விஞ்ஞான இதழாக வெளிவந்தது. | பெண்கள் மீதான பாகுபாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பெண்களுக்கு இடையே ஒரு ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும், நட்பை ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கோடு இந்த இதழ் வெளிவர ஆரம்பித்தது. கலை, இலக்கிய, விஞ்ஞான இதழாக வெளிவந்தது. |
Revision as of 16:59, 11 January 2023
சக்தி (ஆகஸ்ட் 1990) நார்வேயிலிருந்து வெளிவரும் பெண்கள் காலாண்டு இதழ். புலம்பெயர்ந்த பெண்களின் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிவந்த பெண்களுக்கான கலை, இலக்கிய, விஞ்ஞான இதழ்.
வெளியீடு
சக்தி இதழ் ஆகஸ்ட் 1990 முதல் நார்வேயிலிருந்து வெளிவரும் காலாண்டு இதழ். இதழின் ஆசிரியர் தயாநிதி. முதலாவது இதழ் மைத்ரேயியின் முயற்சியால் வந்தது. சுகிர்தா, லிட்டா இராசநாயகம் போன்றோரின் பங்களிப்புகளுடன் பின்னர் வெளிவந்தது. புலம்பெயர்ந்த பெண்கள் பலரின் பங்களிப்புகளுடன் சக்தி தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. இவ்விதழின் ஆசிரியர் தயாநிதி.
நோக்கம்
பெண்கள் மீதான பாகுபாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பெண்களுக்கு இடையே ஒரு ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும், நட்பை ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கோடு இந்த இதழ் வெளிவர ஆரம்பித்தது. கலை, இலக்கிய, விஞ்ஞான இதழாக வெளிவந்தது.
உள்ளடக்கம்
பெண்ணியம் சார்ந்த எழுத்துக்கள் இவ்வித்ழ் மூலம் வெளிவந்தது. பெண் விடுதலையை நோக்காக கொண்ட ஆக்கங்கள் பிரசுரமாகின. பெண்களுக்கு இழைக்கபடும் கொடுமைகள் பற்றிய விழிப்புணர்வுக் கட்டுரைகள், பெண்ணியம் பேசும் கட்டுரைகள் வெளிவந்தன. இலக்கியம், செயல்பாடுகள் சார்ந்து நார்வே, தமிழ்ப் பெண்களைப் பற்றிய கட்டுரைகள் வெளிவந்தன. நூல் அறிமுகங்கள், உலகப் பெண் படைப்பாளர்களின் மொழிபெயர்ப்புகள் போன்றவை வெளிவந்தன. அன்புள்ள தோழிக்கு என்ற பகுதி கடித உரையாடல் தளமாக பெண் வாசகர்களின் கேள்விக்கு பதில் சொல்லியது. வெளி நாடுகளில் உள்ள பெண்கள் பிரச்சனையைப் பேசியது.
இலக்கிய இடம்
புலம் பெயர்ந்த பெண்களின் பிரச்சனைகளைப் பேசும் இதழாக சக்தி இதழ் அமைந்தது. அதே சமயம் பொழுதுபோக்கு பெண் பத்திரிக்கைகளின் போக்கையும் கடிந்தது.
பங்களிப்பாளர்கள்
- சிந்து
- சமர்
- எஸ்.தர்மதேவி
- ஏ.ஆனந்தசிவகுமார்
- ஜசிந்தா
- மைத்ரேயி
- ஜெயந்தன் சிவசாமி
- சந்தியா
- ராஜினி
- மானசி
- தயாநிதி
- சந்திரவதனா செல்வகுமாரன்
ஆவணம்
1990 முதல் 2002 வரையுள்ள இதழ்கள் இலங்கையின் நூலகம் காப்பகத்தில் சேமிக்கப்பட்டுள்ளன.
இணைப்பு
உசாத்துணை
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.