நீக்கிலாஸ்பிள்ளை: Difference between revisions
From Tamil Wiki
(Reset to Stage 1) |
(Category:எழுத்தாளர்கள் சேர்க்கப்பட்டது) |
||
Line 12: | Line 12: | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:ஈழத்து ஆளுமைகள்]] | [[Category:ஈழத்து ஆளுமைகள்]] | ||
[[Category:எழுத்தாளர்கள்]] |
Revision as of 19:09, 23 December 2022
நீக்கிலாஸ்பிள்ளை (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் எழுத்தாளர்.
வாழ்க்கைக் குறிப்பு
நீக்கிலாஸ்பிள்ளை இலங்கை யாழ்ப்பாணம் சண்டிலிப்பாயில் பரமானந்தருக்கு மகனாகப் பிறந்தார். குலத் துங்கர் என்பது இயற்பெயர். கிறிஸ்து சமயத்தைத் தழுவியபின் நீக்கிலாஸ் பிள்ளை என மாற்றிக் கொண்டார். ஆங்கிலம், தமிழ் இரு மொழிகளிலும் புலமை உடையவர். அரசாங்க மொழி பெயர்ப்பு முதலியாராகச் சிலகாலம் நெடுந்தீவில் பணியாற்றினார். வட்டுக்கோட்டை செமினரி சாத்திரக் கலாசாலையில் சில காலம் ஆங்கில இலக்கணம் கற்பிக்கும் ஆசிரியராகப் பணியாற்றினார்.
இலக்கிய வாழ்க்கை
நீக்கிலாஸ்பிள்ளை கந்தரந்தாதி முதலான நூல்கள் சிலவற்றுக்குப் பொருள் சொல்வதில் திறமையுடையவர். ’எக்காலக் கண்ணி’ என்ற நூலை எழுதினார்.
நூல் பட்டியல்
- எக்காலக் கண்ணி
உசாத்துணை
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள், தென் புலோலியூர் மு. கணபதிப் பிள்ளை, 1967, பாரி நிலையம் வெளியீடு
- ஆளுமை:நீக்கிலாஸ்பிள்ளை, பரமானந்தர்: noolaham
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.