under review

ஆ.முத்துத்தம்பிப் பிள்ளை: Difference between revisions

From Tamil Wiki
(changed template text)
(changed template text)
Line 65: Line 65:
== குறிப்புகள் ==
== குறிப்புகள் ==
<references />
<references />
Finalised
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 12:06, 15 November 2022

To read the article in English: A. Muthuthambi Pillai. ‎

ஆ.முத்துத்தம்பிப் பிள்ளை

ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை (ஏப்ரல் 18, 1858 - நவம்பர் 2, 1917) இலங்கையைசேர்ந்த தமிழறிஞர். இலக்கியவரலாற்றாசிரியர், சிற்றிலக்கிய ஆசிரியர். முதல் கலைக்களஞ்சியம் எனப்படும் அபிதான கோசம் நூலை எழுதியவர்.

பிறப்பு கல்வி

யாழ்ப்பாணத்து குடாநாட்டில் மானிப்பாய் எனும் ஊரில் ஆறுமுகம் பிள்ளை சீதேவிப் பிள்ளை இணையருக்கு மூத்த புதல்வராக ஏப்ரல் 18, 1858-ல் முத்துத்தம்பிப் பிள்ளை பிறந்தார். அவரது ஆரம்பக்கல்வி பி.எஸ். பேஜ் என்ற ஆசிரியரிடம் ஆசிரியரின் வீட்டிலேயே ஆரம்பமானது. இந்த வீடு பின்னாளில் மானிப்பாய் மெமோரியல் கல்லூரியாக மாறியது.பின்னர் பேர்சிவல் பாதிரியாரால் நிறுவப்பட்ட, தற்போது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி என வழங்கும் வெஸ்லியன் மத்திய பாடசாலையில் இணைந்தார். அப்பாடசாலையின் தலைமையாசிரியராயிருந்த முத்துக்குமாரர் சிதம்பரப்பிள்ளை அவர்களிடம் ஆங்கிலத்தை கற்றார்.இலக்கணக் கொட்டர் எனப் புகழ் பெற்ற குடந்தை வெண்பா முதலிய பாடல்கள் இயற்றிய சுன்னாகம் முருகேசப் பண்டிதரிடம் தமிழ் கற்றார்

தனிவாழ்க்கை

யாழ்ப்பாண வரலாறு

1876-ல் தமது பதினெட்டாவது வயதில் நாவலப்பிட்டி சென்று இலங்கை கம்பெனித்தோட்டத்து (Ceylon Company Estates) அதிகாரிக்கு முன்ஷியாக (ஆசிரியராக) தொழில் புரிந்தார் .1880-ஆம் வருடம் இந்தியாவில் திருத்துறைப் பூண்டி அழகியநாதன் செட்டியாரின் இல்லத்தில் தனியாசிரியராக அமர்ந்து அவருடைய பிள்ளைகளுக்கு கல்வி கற்பித்தார். பின்னர் நாகப்பட்டினம் சென்று ஆண்டர்சன் என்னும் நிறுவனத்தில் (Anderson & Co.) தலைமை எழுதுவினைஞராகவும் கணக்காளராகவும் பணியாற்றினார்.

பின்னர் காரைக்காலின் புரையாறு என்னும் பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்த தவசிமுத்து நாடார் என்பவர் நடத்திய சத்தியாபிமானி என்னும் வாரப் பத்திரிகைக்கு ஆசிரியராக பொறுப்பேற்றார். அவ்விதழின் ஆசிரியர் பதவியில் இருந்து விலகியபோது நாடார் சமூக மக்கள் அளித்த தொகையைக்கொண்டு சென்னையில் ஜூபிலி அச்சகம் (Jubilee Press) என்னும் நிறுவனத்தை 1885-ஆம் ஆண்டு நிறுவினார்.

1893-ஆம் வருடம் யாழ்ப்பாணம் திரும்பி வண்ணார்பண்ணையில் ஆறுமுக நாவலர் வாழ்ந்த இல்லத்தை விலைக்கு வாங்கி, அவ்வில்லத்திற்கு "நாவலர் கோட்டம்" என பெயரிட்டு அதனருகிலேயே ஒரு புத்தகசாலையையும் நாவலர் அச்சகம் என ஓர் அச்சகத்தையும் நிறுவினார். நாவலர் கோட்டம் முத்துத்தம்பிப்பிள்ளை என அழைக்கப்பட்டார். Ward & Davy என்ற பெயரில் பலசரக்கு மருந்துகள் விற்கும் ஒரு கடையும் நடத்தினார். மூன்று ஆண்டுகள் 'வைத்திய விசாரணி’ என்னும் மாத இதழை அதில் இருந்து வெளியிட்டார்

தமது 25-வது வயதில் சண்டிலிப்பாயைச் சேர்ந்த கந்தப்பர் என்பவரின் மூத்த மகளான தங்கம்மாவைத் திருமணம் செய்தார்.

இதழியல்

  • சத்தியாபிமானி (1884), வார இதழ் (தமிழ் நாடு)
  • வைத்திய விசாரணி (1897), மாத இதழ் (ஈழம்)

இலக்கியப்பணி

1898-ல் ஆறுமுகநாவலரின் மருமகனும், அவரின் பணிகளில் மிகுந்த ஈடுபாட்டுடன் பங்கு பற்றியவருமான த.கைலாசபிள்ளை அவர்களால் ஒரு தமிழ்ச் சங்கம் நிறுவப்பட்டது. இதில் ஈடுபட்டு ஒத்துழைத்தார். மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம் என்னும் அமைப்பு பாண்டித்துரைத் தேவர் முன்னெடுப்பின் உருவானதும் அச்சங்கம் நடத்திய தேர்வுகளில் தேர்வராகப் பணியாற்றினார். அவர்களின் செந்தமிழ் இதழில் எழுதினார். ஆ.முத்துத்தம்பிப் பிள்ளை நன்னூலுக்கு எழுதிய உரை தமிழில் ஒரு முன்னோடி வடிவம் எனப்படுகிறது. வினா-விடைகள் வழியாக தெளிவாக தன் தரப்பை முன்வைக்கும் உரை அது[1].

இலக்கணநூல்கள், இலக்கியவரலாற்று நூல்கள் ஆகியவற்றை எழுதிய ஆ.முத்துத்தம்பிப் பிள்ளையின் முதன்மைநூல் அபிதான கோசம் என்னும் கலைக்களஞ்சிய- அகராதி. தமிழ் மொழியில் முதன்முதலாக உருவான கலைக்களஞ்சியம் என அது கருதப்படுகிறது. 16 ஆண்டு உழைப்பில் அதை எழுதி முடித்தார். அபிதான கோசம் 1902-ல் யாழ்ப்பாணம் நாவலர் அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

மறைவு

நவம்பர் 02, 1917-ல் மறைந்தார்

இலக்கிய இடம்

முதன்மையாக தமிழ் அகராதியியலின் முன்னோடி என்றுதான் முத்துத்தம்பிப் பிள்ளை கருதப்படுகிறார். அபிதான கோசம் ஒரு முதன்மை பணி. தமிழிலக்கணநூல்களை பொருள்கொள்வதற்கான முதல்முயற்சிகளை எடுத்து வழிகாட்டிய ஆய்வாளர் என்றும் மதிக்கப்படுகிறார்.

நூல்கள்

  • இலங்கைச் சரித்திர சூசனம்
  • இலங்கைச் சரித்திர சூசனம் (1883)
  • காளிதாச சரித்திரம் (1884)
  • பிரபோத சந்திரோதய வசனம் (1889)
  • விவேகானந்த சுவாமிகள் சொற்பொழிவுகளின் சாரம் (1897)
  • அபிதானகோசம் (1902)
  • பாரதச் சுருக்கம் (1903)
  • நன்னூல் இலகுபோதம்-எழுத்ததிகாரம் (1904)
  • நன்னூல் இலகுபோதம்-சொல்லதிகாரம் (1905)
  • ஆங்கில-ஆங்கில-தமிழ் அகராதி (1907)
  • Civilian Tamil Grammar (1912)
  • நன்னூல் உதாரண விளக்கம் (1912)
  • யாழ்ப்பாணச் சரித்திரம் (1912)
  • இலங்கைப் பூமிசாத்திரம் (1914)
  • சைவ பாலபோதம் (1916)
  • தென்மொழி வரலாறு (1920)
  • ஈழமண்டலப் புலவர் சரித்திரம்
  • காளமேகப் புலவர் சரித்திரம்
  • அற்புதயோகி சரித்திரம்
  • சந்திரகாசன் கதை
  • ஸ்ரீமதி அன்னி பெசன்ட் சமய வரலாறு
  • திருவாசகம் (பதிப்பு)
  • நிகண்டு 1-5 தொகுதி (பதிப்பு)
  • புதிய இலகுபோத பிள்ளைப்பாடம் (பாடநூல்)
  • புதிய இலகுபோத பாலபாடம், 1-8 ஆம் வகுப்பு (பாடநூல்)
  • புதிய இலகுபோத இலக்கணம், 4-5 ஆம் வகுப்பு (பாடநூல்)
  • தமிழ்க்கொப்பி சட்டவெழுத்து 1-4
  • செந்தமிழ் அகராதி (வெளியிடப்படவில்லை)

உசாத்துணை

குறிப்புகள்


✅Finalised Page