குஞ்சித்தம்பி பண்டிதர்: Difference between revisions
Line 17: | Line 17: | ||
* ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை | * ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை | ||
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%95%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D ஆளுமை:குஞ்சித்தம்பி பண்டிதர்: noolaham] | * [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%95%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D ஆளுமை:குஞ்சித்தம்பி பண்டிதர்: noolaham] | ||
* புலவர்மணி ஏ. பெரியதம்பி பிள்ளை: arayampathy | |||
{{ready for review}} | {{ready for review}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 15:42, 17 October 2022
குஞ்சித்தம்பி பண்டிதர் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப்புலவர், நாடகக் கலைஞர்.
வாழ்க்கைக் குறிப்பு
குஞ்சித்தம்பி பண்டிதர் இலங்கை அம்பாறை, தம்பிலுவிலைச் சேர்ந்த கவிஞர். மட்டக்களப்பு தூய மிக்கேல் கல்லூரியில் ஆங்கிலத்தில் எட்டாம் வகுப்பு வரை பயின்றார். மதுரைத் தமிழ்ச் சங்கக் கலாசாலையில் கற்றார்.
ஆசிரியப்பணி
குஞ்சித்தம்பி பண்டிதர் இந்தியாவின் பல இடங்களிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். தாய்நாடு வந்து மட்டக்களப்பில் சைவமும் தமிழும் வளர்த்தார். சிலகாலம் அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரிய கலாசாலையில் தமிழ்ப்பண்டிதராகப் பணியாற்றினார். இரண்டாம் உலக யுத்தகாலத்தில் திருகோணமலைக் கடற்படையில் எழுத்தாளராகப் பணியாற்றினார். சுவாமி விபுலானந்தர் இவரின் மாணவர்.
நாடக வாழ்க்கை
குஞ்சித்தம்பி பண்டிதர் நாடக நடிகர், நாடகங்கள் பல எழுதி அரங்காற்றுகை செய்தார். சிறுத்தொண்டர் சரித்திரத் தினையும், அலாவுதீன் என்னும் அரேபியக் கதையினையும் இவர் நாடகமாக இயற்றி நடித்தார்.
இலக்கிய வாழ்க்கை
குஞ்சித்தம்பி பண்டிதர் இயற்றிய பஜனாமிர்தம், வருக்கமாலை பாடல்நூல்கள் 1953இல் வெளிவந்தன. "திருக்கோவிற் சிவசுப்பிரமணியக் கடவுள் மீது வருக்க மாலை" (1953), "கண்ணகை யம்மன் பேரிற் பஜனமிர்தம்" (1953) ஆகிய நூல்களை இயற்றினார்.
மறைவு
இவர் தமது நாற்பதாவது வயதிலே இவ் உலகை நீத்தார்.
நூல் பட்டியல்
- திருக்கோவிற் சிவசுப்பிரமணியக் கடவுள் மீது வருக்க மாலை (1953)
- கண்ணகை யம்மன் பேரிற் பஜனமிர்தம் (1953)
உசாத்துணை
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
- ஆளுமை:குஞ்சித்தம்பி பண்டிதர்: noolaham
- புலவர்மணி ஏ. பெரியதம்பி பிள்ளை: arayampathy
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.