சித்தி பரீதா: Difference between revisions
(Corrected the links to Disambiguation page) |
(Added: Category:ஈழம்) |
||
| Line 21: | Line 21: | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:ஈழம்]] | |||
Latest revision as of 01:04, 21 December 2025
- சித்தி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சித்தி (பெயர் பட்டியல்)
- பரீதா என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: பரீதா (பெயர் பட்டியல்)
சித்தி பரீதா (சித்தி பரீதா தம்பி சாஹிப்) ஈழத்துப் பெண் எழுத்தாளர். இஸ்லாம் சார்ந்த கட்டுரைகள் எழுதினார்.
வாழ்க்கைக் குறிப்பு
சித்தி பரீதா இலங்கை புத்தளம் சிலாபத்தில் பிறந்தார். ஆரம்பக் கல்வியை சிலாபம் ரோமன் கத்தோலிக்கத் தமிழ்ப் பெண்கள் பாடசாலையிலும் ஐந்தாம் தரம் முதல் எட்டாம் வகுப்பு வரை சிலாபம் நஸ்ரியா முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும் கற்றார்.
இலக்கிய வாழ்க்கை
சித்தி பரீதா தன் 63-வது வயது முதல் எழுதினார். 'குர்ஆனின் சுருக்கத்தின் கண்ணோட்டம்' என்ற இவரது முதலாவது கட்டுரை வீரகேசரி பத்திரிகையில் 2012-ல் வெளியானது. பல இஸ்லாமிய கட்டுரைகள் தினகரன் பத்திரிகையில் எழுதினார். பத்திரிகையில் வெளியான கட்டுரைகளைத் தொகுத்து 'இஸ்லாமிய தத்துவ முத்துக்கள்' என்ற பெயரிலும் 'தித்திக்கும் திருமுறையின் மகிமைகள்' என்ற பெயரிலும் இவர் இரண்டு நூல்களை வெளியிட்டார்.
நூல் பட்டியல்
கட்டுரைத் தொகுப்பு
- இஸ்லாமிய தத்துவ முத்துக்கள்
- தித்திக்கும் திருமுறையின் மகிமைகள்
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
11-Mar-2024, 03:29:14 IST