ஆர்.எஸ். ஜேக்கப்: Difference between revisions
No edit summary |
|||
Line 1: | Line 1: | ||
[[File:ஆர்.எஸ்.ஜேக்கப்1.png|thumb|ஆர்.எஸ்.ஜேக்கப்]] | [[File:ஆர்.எஸ்.ஜேக்கப்1.png|thumb|ஆர்.எஸ்.ஜேக்கப்]] | ||
ஆர்.எஸ். ஜேக்கப் ( | ஆர்.எஸ். ஜேக்கப் (நவம்பர் 19, 1926 - டிசம்பர் 22, 2021) தமிழ் எழுத்தாளர், ஆசிரியர், பத்திரிக்கையாசிரியர், பதிப்பாளர், அரசியல்வாதி, கள ஆய்வாளர். சிறுகதைகள், நாவல்கள் எழுதியுள்ளார். | ||
== | == பிறப்பு, கல்வி == | ||
ஆர்.எஸ். ஜேக்கப் தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சி அருகே ராஜாவின் கோயில் கிராமத்தில் 1925-ல் பிறந்தார். ஆர்.எஸ். ஜேக்கப் | ஆர்.எஸ். ஜேக்கப் தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சி அருகே ராஜாவின் கோயில் கிராமத்தில் சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு 1925-ல் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் பதினொருவர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். உள்ளூர் மிஷன் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை பயின்றார்.அருகிலுள்ள புதியம்புத்தூர் கிராமத்தில் உயர் நிலைக்கல்வி பயின்றார்.எட்டாம் வகுப்பில் தாய் இறந்ததால் பள்ளிப் படிப்பு தடைபட்டது. பின் திருநெல்வேலி அரசு போதனாமுறை பயிற்சி பள்ளியில் இரண்டாண்டுகள் பயின்றார். | ||
== தனிவாழ்க்கை == | |||
ஆர்.எஸ். ஜேக்கப் 1956-ல் வயலட் மேரி ஃப்லாரன்சை திருமணம் செய்து கொண்டார். மனைவி ஆசிரியர். | |||
== ஆசிரியப்பணி == | == ஆசிரியப்பணி == | ||
திருநெல்வேலி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பண்ணையூர் கிராமத்தில் கிறிஸ்தவ மிசினரி பள்ளிக்கூடத்தில் வாத்தியாராக பணியாற்ற அழைக்கப்பட்டார். பண்ணையூர் கிராமத்தில் ஏழை, எளிய பிள்ளைகள் படிக்க பள்ளிக்கூடம் துவங்கிட ஏற்பாடு செய்ய வேண்டுமென ஊர் ஜமீனை சந்தித்தார். ஜமீன் மறுத்ததால் ஜமீனுக்குத் தெரியாமல் தலித் மக்கள் தெருவில் கிணற்றடியில் கூரை வேய்ந்து பள்ளிக்கூடம் ஒன்றைத் துவங்கினார். வீடு, வீடாகச் சென்று குழந்தைகளை தேடிப்பிடித்து மாணவர்களாக்கினார். ஜமீன் அதைக் கண்டறிந்து அடித்ததால் பண்ணையூரிலிருந்து தப்பித்து ஸ்ரீவைகுண்டம் வந்தார். | திருநெல்வேலி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பண்ணையூர் கிராமத்தில் கிறிஸ்தவ மிசினரி பள்ளிக்கூடத்தில் வாத்தியாராக பணியாற்ற அழைக்கப்பட்டார். பண்ணையூர் கிராமத்தில் ஏழை, எளிய பிள்ளைகள் படிக்க பள்ளிக்கூடம் துவங்கிட ஏற்பாடு செய்ய வேண்டுமென ஊர் ஜமீனை சந்தித்தார். ஜமீன் மறுத்ததால் ஜமீனுக்குத் தெரியாமல் தலித் மக்கள் தெருவில் கிணற்றடியில் கூரை வேய்ந்து பள்ளிக்கூடம் ஒன்றைத் துவங்கினார். வீடு, வீடாகச் சென்று குழந்தைகளை தேடிப்பிடித்து மாணவர்களாக்கினார். ஜமீன் அதைக் கண்டறிந்து அடித்ததால் பண்ணையூரிலிருந்து தப்பித்து ஸ்ரீவைகுண்டம் வந்தார். 1956-ல் சிறையிலிருந்து வெளிவந்த பின் மீண்டும் ஆசிரியப்பணி செய்தார். கதீட்ரல், தூய யோவான் பள்ளியில் வேலை பார்த்த பின் 1985-ல் பணி ஓய்வு பெற்றார். | ||
== அரசியல் வாழ்க்கை == | == அரசியல் வாழ்க்கை == | ||
ஆர்.எஸ். ஜேக்கப்பிற்கு கம்யூனிஸ்ட் கட்சிக்காரர் பாலதண்டாயுதம் மற்றும் சில தோழர்களுடனான தொடர்பு மூலம் அரசியல் விழிப்புணர்வு பெற்றார். ஆர்.எஸ்.ஜேக்கப் இந்திய விடுதலைக்கு முன்பிருந்தே அக்காலத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிரமாக இயங்கியவர். தென் மாவட்டங்களில் ஆங்கிலேய அரசை எதிர்த்து கலகம் நடந்து கொண்டிருந்தது. ரயிலைக் கவிழ்க்க கம்யூனிஸ்ட்காரர்கள் முடிவு செய்து அதைத் தகர்த்தனர். தோழர்கள் தலைமறைவாயினர். தலைமறைவான தோழர்களுக்கு வீட்டில் தஞ்சம் கொடுத்தாகச் சொல்லி நெல்லை சதி வழக்கில் பதினெட்டாவது குற்றவாளியாக கைது செய்யப்பட்டார். சிறையில் தோழர்களுக்கு கல்வி கற்றுக்கொடுக்கும் ஆசிரியரானார். | ஆர்.எஸ். ஜேக்கப்பிற்கு கம்யூனிஸ்ட் கட்சிக்காரர் பாலதண்டாயுதம் மற்றும் சில தோழர்களுடனான தொடர்பு மூலம் அரசியல் விழிப்புணர்வு பெற்றார். ஆர்.எஸ்.ஜேக்கப் இந்திய விடுதலைக்கு முன்பிருந்தே அக்காலத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிரமாக இயங்கியவர். தென் மாவட்டங்களில் ஆங்கிலேய அரசை எதிர்த்து கலகம் நடந்து கொண்டிருந்தது. ரயிலைக் கவிழ்க்க கம்யூனிஸ்ட்காரர்கள் முடிவு செய்து அதைத் தகர்த்தனர். தோழர்கள் தலைமறைவாயினர். தலைமறைவான தோழர்களுக்கு வீட்டில் தஞ்சம் கொடுத்தாகச் சொல்லி நெல்லை சதி வழக்கில் பதினெட்டாவது குற்றவாளியாக கைது செய்யப்பட்டார். சிறையில் தோழர்களுக்கு கல்வி கற்றுக்கொடுக்கும் ஆசிரியரானார். | ||
[[File:வாத்தியார்.jpg|thumb|215x215px|வாத்தியார்]] | [[File:வாத்தியார்.jpg|thumb|215x215px|வாத்தியார்]] | ||
== இலக்கிய வாழ்க்கை == | == இலக்கிய வாழ்க்கை == | ||
ஆர்.எஸ். ஜேக்கப்பின் முதல் சிறுகதை ‘பாஞ்சைப் புலிகள்’ 1947-ல் தினசரிமடல் வார இதழில் வெளியானது. ஆர்.எஸ். கோபு என்ற பெயரில் எழுதினார். தமிழ்மணி, சிற்பி, தாமரை, ஜனசக்தி, பிரசண்ட விகடன், நிருபம், சுடரொளி போன்ற இதழ்களில் எழுதினார். முதல் சிறுகதைத் தொகுப்பு ‘மோசம்போன மோதிரம்’ 1949-ல் வெளியானது. தொடர்ந்து ‘நூறு த்ருஷ்டாந்த கதைகள்’; ’நூறு ஜீவனுள்ள கதைகள்’; ’நூறு அருளுரைக் கதைகள்’ போன்ற தொகுப்புகள் வெளிவந்தன. | |||
ஒரு கரிசல் காட்டு கிராமத்தின் அவல நிலையை மாற்றுவதற்காக எடுத்த நடவடிக்கைகளை 'வாத்தியார்' என்ற நாவலில் எழுதியுள்ளார். நெல்லைச் சதி வழக்கு சம்பவங்களை நூல்களாக அவர் எழுதியுள்ளார். மூன்றாண்டுகள் சிறைவாசத்தை 'மரண வாயிலில்' என்ற நாவலில் வெளிப்படுத்தியுள்ளார். 3 நாவல்கள், 18 சிறுகதைத் தொகுப்புகள், வரலாற்று களஆய்வுகள் உட்பட இதுவரை 104 நூல்கள் எழுதியுள்ளார். | ஒரு கரிசல் காட்டு கிராமத்தின் அவல நிலையை மாற்றுவதற்காக எடுத்த நடவடிக்கைகளை 'வாத்தியார்' என்ற நாவலில் எழுதியுள்ளார். நெல்லைச் சதி வழக்கு சம்பவங்களை நூல்களாக அவர் எழுதியுள்ளார். மூன்றாண்டுகள் சிறைவாசத்தை 'மரண வாயிலில்' என்ற நாவலில் வெளிப்படுத்தியுள்ளார். 3 நாவல்கள், 18 சிறுகதைத் தொகுப்புகள், வரலாற்று களஆய்வுகள் உட்பட இதுவரை 104 நூல்கள் எழுதியுள்ளார். | ||
== விருது == | == விருது == | ||
Line 15: | Line 19: | ||
ஆர்.எஸ். ஜேக்கப் டிசம்பர் 22, 2021-ல் காலமானார். | ஆர்.எஸ். ஜேக்கப் டிசம்பர் 22, 2021-ல் காலமானார். | ||
== நூல் பட்டியல் == | == நூல் பட்டியல் == | ||
===== சிறுகதை ===== | |||
* மரண வாயிலிலே பைபிள் | |||
* மோசம்போன மோதிரம் | |||
* நூறு த்ருஷ்டாந்த கதைகள் | |||
* நூறு ஜீவனுள்ள கதைகள் | |||
* நூறு அருளுரைக் கதைகள் | |||
* ஒலிக்கவில்லை | |||
* சொல்லும் செயலும் | |||
* பட்டுப்பாவாடை | |||
* வரவேற்கப்படாத விருந்தாளி | |||
* யானை மெழுகுவர்த்தி | |||
* அக்கா வீட்டிற்குப் போனேன் | |||
* பட்டணப் பிரவேசம் | |||
* கிறுக்கன் | |||
===== பிற ===== | |||
* தமிழில் முதல் சிறுகதை எது? | * தமிழில் முதல் சிறுகதை எது? | ||
* பனையண்ணன் | * பனையண்ணன் | ||
* வாத்தியார் | * வாத்தியார் | ||
* நெல்லை அப்போஸ்தலன் ரேனியஸ் | * நெல்லை அப்போஸ்தலன் ரேனியஸ் | ||
* உண்மைக்கதைகள் | * உண்மைக்கதைகள் | ||
* கரிசல் காட்டுக் கதைகள் | * கரிசல் காட்டுக் கதைகள் |
Revision as of 20:39, 11 September 2022
ஆர்.எஸ். ஜேக்கப் (நவம்பர் 19, 1926 - டிசம்பர் 22, 2021) தமிழ் எழுத்தாளர், ஆசிரியர், பத்திரிக்கையாசிரியர், பதிப்பாளர், அரசியல்வாதி, கள ஆய்வாளர். சிறுகதைகள், நாவல்கள் எழுதியுள்ளார்.
பிறப்பு, கல்வி
ஆர்.எஸ். ஜேக்கப் தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சி அருகே ராஜாவின் கோயில் கிராமத்தில் சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு 1925-ல் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் பதினொருவர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். உள்ளூர் மிஷன் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை பயின்றார்.அருகிலுள்ள புதியம்புத்தூர் கிராமத்தில் உயர் நிலைக்கல்வி பயின்றார்.எட்டாம் வகுப்பில் தாய் இறந்ததால் பள்ளிப் படிப்பு தடைபட்டது. பின் திருநெல்வேலி அரசு போதனாமுறை பயிற்சி பள்ளியில் இரண்டாண்டுகள் பயின்றார்.
தனிவாழ்க்கை
ஆர்.எஸ். ஜேக்கப் 1956-ல் வயலட் மேரி ஃப்லாரன்சை திருமணம் செய்து கொண்டார். மனைவி ஆசிரியர்.
ஆசிரியப்பணி
திருநெல்வேலி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பண்ணையூர் கிராமத்தில் கிறிஸ்தவ மிசினரி பள்ளிக்கூடத்தில் வாத்தியாராக பணியாற்ற அழைக்கப்பட்டார். பண்ணையூர் கிராமத்தில் ஏழை, எளிய பிள்ளைகள் படிக்க பள்ளிக்கூடம் துவங்கிட ஏற்பாடு செய்ய வேண்டுமென ஊர் ஜமீனை சந்தித்தார். ஜமீன் மறுத்ததால் ஜமீனுக்குத் தெரியாமல் தலித் மக்கள் தெருவில் கிணற்றடியில் கூரை வேய்ந்து பள்ளிக்கூடம் ஒன்றைத் துவங்கினார். வீடு, வீடாகச் சென்று குழந்தைகளை தேடிப்பிடித்து மாணவர்களாக்கினார். ஜமீன் அதைக் கண்டறிந்து அடித்ததால் பண்ணையூரிலிருந்து தப்பித்து ஸ்ரீவைகுண்டம் வந்தார். 1956-ல் சிறையிலிருந்து வெளிவந்த பின் மீண்டும் ஆசிரியப்பணி செய்தார். கதீட்ரல், தூய யோவான் பள்ளியில் வேலை பார்த்த பின் 1985-ல் பணி ஓய்வு பெற்றார்.
அரசியல் வாழ்க்கை
ஆர்.எஸ். ஜேக்கப்பிற்கு கம்யூனிஸ்ட் கட்சிக்காரர் பாலதண்டாயுதம் மற்றும் சில தோழர்களுடனான தொடர்பு மூலம் அரசியல் விழிப்புணர்வு பெற்றார். ஆர்.எஸ்.ஜேக்கப் இந்திய விடுதலைக்கு முன்பிருந்தே அக்காலத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிரமாக இயங்கியவர். தென் மாவட்டங்களில் ஆங்கிலேய அரசை எதிர்த்து கலகம் நடந்து கொண்டிருந்தது. ரயிலைக் கவிழ்க்க கம்யூனிஸ்ட்காரர்கள் முடிவு செய்து அதைத் தகர்த்தனர். தோழர்கள் தலைமறைவாயினர். தலைமறைவான தோழர்களுக்கு வீட்டில் தஞ்சம் கொடுத்தாகச் சொல்லி நெல்லை சதி வழக்கில் பதினெட்டாவது குற்றவாளியாக கைது செய்யப்பட்டார். சிறையில் தோழர்களுக்கு கல்வி கற்றுக்கொடுக்கும் ஆசிரியரானார்.
இலக்கிய வாழ்க்கை
ஆர்.எஸ். ஜேக்கப்பின் முதல் சிறுகதை ‘பாஞ்சைப் புலிகள்’ 1947-ல் தினசரிமடல் வார இதழில் வெளியானது. ஆர்.எஸ். கோபு என்ற பெயரில் எழுதினார். தமிழ்மணி, சிற்பி, தாமரை, ஜனசக்தி, பிரசண்ட விகடன், நிருபம், சுடரொளி போன்ற இதழ்களில் எழுதினார். முதல் சிறுகதைத் தொகுப்பு ‘மோசம்போன மோதிரம்’ 1949-ல் வெளியானது. தொடர்ந்து ‘நூறு த்ருஷ்டாந்த கதைகள்’; ’நூறு ஜீவனுள்ள கதைகள்’; ’நூறு அருளுரைக் கதைகள்’ போன்ற தொகுப்புகள் வெளிவந்தன.
ஒரு கரிசல் காட்டு கிராமத்தின் அவல நிலையை மாற்றுவதற்காக எடுத்த நடவடிக்கைகளை 'வாத்தியார்' என்ற நாவலில் எழுதியுள்ளார். நெல்லைச் சதி வழக்கு சம்பவங்களை நூல்களாக அவர் எழுதியுள்ளார். மூன்றாண்டுகள் சிறைவாசத்தை 'மரண வாயிலில்' என்ற நாவலில் வெளிப்படுத்தியுள்ளார். 3 நாவல்கள், 18 சிறுகதைத் தொகுப்புகள், வரலாற்று களஆய்வுகள் உட்பட இதுவரை 104 நூல்கள் எழுதியுள்ளார்.
விருது
- ஆர்.எஸ். ஜேக்கப் சான்றோருக்கான ஜீவா விருது பெற்றார்.
மறைவு
ஆர்.எஸ். ஜேக்கப் டிசம்பர் 22, 2021-ல் காலமானார்.
நூல் பட்டியல்
சிறுகதை
- மரண வாயிலிலே பைபிள்
- மோசம்போன மோதிரம்
- நூறு த்ருஷ்டாந்த கதைகள்
- நூறு ஜீவனுள்ள கதைகள்
- நூறு அருளுரைக் கதைகள்
- ஒலிக்கவில்லை
- சொல்லும் செயலும்
- பட்டுப்பாவாடை
- வரவேற்கப்படாத விருந்தாளி
- யானை மெழுகுவர்த்தி
- அக்கா வீட்டிற்குப் போனேன்
- பட்டணப் பிரவேசம்
- கிறுக்கன்
பிற
- தமிழில் முதல் சிறுகதை எது?
- பனையண்ணன்
- வாத்தியார்
- நெல்லை அப்போஸ்தலன் ரேனியஸ்
- உண்மைக்கதைகள்
- கரிசல் காட்டுக் கதைகள்
- நெல்லைச் சதிவழக்கின் தியாக தீபங்கள்
- அருமையான பிரசங்கங்கள்