under review

மகிழ் ஆதன்: Difference between revisions

From Tamil Wiki
(Added First published date)
(Corrected Category:கவிஞர்கள் to Category:கவிஞர்)
 
Line 24: Line 24:




[[Category:கவிஞர்கள்]]
[[Category:கவிஞர்]]
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 14:10, 17 November 2024

மகிழ் ஆதன்

மகிழ் ஆதன் (பிறப்பு: ஏப்ரல் 16, 2012) தமிழில் எழுதிவரும் கவிஞர். ஒன்பது வயதில் 'நான்தான் உலகத்தை வரைந்தேன்’ என்ற முதல் கவிதைத்தொகுப்பை வெளியிட்டார்.

வாழ்க்கைக் குறிப்பு

மகிழ் ஆதன் ஏப்ரல் 16, 2012 அன்று சிந்து, ஆசை இணையருக்கு சென்னையில் பிறந்தார். திருவான்மியூரிலுள்ள அரசுப் பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்று வருகிறார்.

இலக்கிய வாழ்க்கை

‘நான்தான் உலகத்தை வரைந்தேன்’, ‘காலத்தைத் தாண்டி வரும் ஒருவன்’ ஆகிய கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

இலக்கிய இடம்

”ஆதனிடம் இயல்பாகக் கவித்துவ உணர்வு பீறிடுகிறது. அவன் சொற்களை எப்படிக் கையாளுவது என்று அறிந்து கொண்டிருக்கிறான். அவனது உலகில் பறவைகளும் வானமும் ஒளியும் மழைத்துளியும் பூக்களும் தானிருக்கின்றன. அன்றாட வாழ்வின் நெருக்கடிகள் எதுவுமில்லை. கண்ணாடிக் கோளம் ஒன்றில் வசிப்பவன் போல தன்னை உணருகிறான். குட்டி இளவரசன் புதிய கிரகத்தை கண்டுவியப்பதை போலவே ஆதனும் வியக்கிறான்.” என எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் மதிப்பிடுகிறார்.

நூல்கள்

கவிதைத்தொகுப்பு
  • நான்தான் உலகத்தை வரைந்தேன்
  • காலத்தைத் தாண்டி வரும் ஒருவன்

இணைப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 14-Sep-2022, 09:45:36 IST