ஆனந்த்குமார்: Difference between revisions
(Corrected the links to Disambiguation page) |
(Corrected Category:கவிஞர்கள் to Category:கவிஞர்) |
||
Line 50: | Line 50: | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:Spc]] | [[Category:Spc]] | ||
[[Category: | [[Category:கவிஞர்]] |
Latest revision as of 11:53, 17 November 2024
- ஆனந்த் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ஆனந்த் (பெயர் பட்டியல்)
To read the article in English: Anandkumar.
ஆனந்த்குமார் (மார்ச் 22, 1984) (ஆனந்த் குமார்) தமிழில் எழுதிவரும் கவிஞர். கோவையில் புகைப்பட நிபுணராக உள்ளார். கவிதைகள்.இன் இணைய இதழின் பொறுப்பாசிரியர்.
பிறப்பு, கல்வி
ஆனந்த்குமார் நாகர்கோயிலில் மார்ச் 22, 1984 அன்று சதானந்தன் - கனகம்மா இணையருக்கு பிறந்தார். நாகர்கோயில் தேசிகவினாயகம் மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். அஞ்சுகிராமம் கேப் பொறியியல் கல்லூரியில் 2005-ல் கணிப்பொறியியல் முடித்தார். கணிப்பொறியியலாளராக பணியாற்றினார்.
தனிவாழ்க்கை
மனைவி பெயர் ஜெயஸ்ரீ. ஜூலை 3, 2011 அன்று மணநாள். இரு குழந்தைகள் - அஜய் கிருஷ்ணா, அர்ஜூன் கிருஷ்ணா. கோவையில் புகைப்பட நிபுணராக உள்ளார்.
படைப்புலகம்
பல்வேறு பெயர்களில் தொடக்க காலத்தில் எழுதியிருந்தாலும், தீவிரமாக எழுத ஆரம்பித்தது 2020- ல் என ஆனந்த்குமார் கூறுகிறார். சொல்வனம் இதழில் வந்த 'குட்டி வீடு' கவிதையை முதல் படைப்பு என்கிறார். 2020-ல் எழுதப்பட்ட குட்டிவீடு கவிதை மார்ச், 2021-ல் வெளியாகியது.
இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகள் என அசோகமித்திரன், வைக்கம் முகமது பஷீர், அ. முத்துலிங்கம் ஆகியோரைக் குறிப்பிடுகிறார். கவிதையில் தேவதேவன், வண்ணதாசன், தேவதச்சன் ஆகியோரை முன்னோடிகளாக கருதுகிறார்.
விருதுகள், ஏற்புகள்
ஆனந்த்குமாருக்கு 2022-ம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம்- குமரகுருபரன் விருது வழங்கப்பட்டுள்ளது. ஆனந்த்குமார் கவிதைகளுக்காக கவிதை இணையதளம் ஒரு சிறப்பிதழ் வெளியிட்டுள்ளது. (இணைப்பு)
இலக்கிய இடம்
’ஆனந்த்குமாரின் கவிதைகள் எளிமையான மொழியில் நம்மிடம் உரையாடுபவை. வாசகனாக கவிதைகளின் மொழிச் சுழலுக்குள் சிக்கிக்கொள்ளாமல், அதன் மையத்தை நோக்கி எந்தவிதச் சிதறல்களும் இல்லாமல் மனதைக் குவிக்கமுடிகிறது. பல கவிதைகள் எளிமையான ஒரு சித்திரத்தை நம்முன் நிறுத்தி, சில வரிகளில் கவித்துவ உச்சத்தை அடைந்து, முழுமையான வாசிப்பனுபவம் அளிப்பவை’ என விமர்சகர் பாலாஜி ராஜு குறிப்பிடுகிறார்.
நூல்கள்
- டிப் டிப் டிப் கவிதைத்தொகுப்பு - தன்னறம் வெளியீடு 2021[1]
ஆவணப்படங்கள்
- விக்ரமாதித்யன் ஆவணப்படம், வீடும் வீதிகளும் (jeyamohan.in)
- வீடும் வீதிகளும் - ஆவணப்படம் | விக்ரமாதித்யன் 2021
உசாத்துணை
- ஆனந்த்குமார் ‘அணிலோசை’- மயிலாடுதுறை பிரபு, ஜெயமோகன்.இன், ஜனவரி 08, 2022
- குமரகுருபரன் -விஷ்ணுபுரம் விருது, ச.துரை, பார்கவி, ஆனந்த்குமார், ஜெயமோகன்.இன், ஜூன் 14, 2022
வெளி இணைப்புகள்
- ஆனந்த் குமார் ஏற்புரை | குமரகுருபரன் - விஷ்ணுபுரம் விருது 2022 | Anandh Kumar, யூடியூப்.காம், ஜூன் 12, 2022
- கவிதைகள் சிறப்பிதழ் - ஆனந்த்குமார், கவிதைகள்.இன், மே 2022
- தனிமை -ஆனந்த்குமாரின் மூன்று கவிதைகள், ஜெயமோகன்.இன், ஆகஸ்ட் 08, 2021
- பலாப்பழத்தின் மணம் – பாவண்ணன், ஜெயமோகன்.இன், ஏப்ரல் 21, 2022
- ஒரு மலரை நிமிர்த்தி வைத்தல்- சுஜய் ரகு, ஜெயமோகன்.இன், ஏப்ரல் 20, 2022
- மொக்கவிழ்தலின் தொடுகை, ஜெயமோகன்.இன், ஜூலை 17, 2021
- ஊடும்பாவுமென ஒரு நெசவு, ஜெயமோகன்.இன், ஆகஸ்ட் 19, 2021
- இறகிதழ் தொடுகை, ஜெயமோகன்.இன், ஆகஸ்ட் 15, 2021
- குழந்தைகளின் தந்தை- டி.கார்த்திகேயன், ஜெயமோகன்.இன், ஏப்ரல் 24, 2021
- நிச்சலனமாய் ஏந்திக்கொள்ளும் நீண்ட மடி: கவிஞர் ஆனந்த்குமார் கவிதைகள், எழுத்தாளர் கமலதேவி, ஏப்ரல் 20, 2022
- சுடரென எரிதல்- “கனலி’ விக்னேஷ்வரன், ஜெயமோகன்.இன், ஏப்ரல் 29, 2022
- பொன்முகக் கிண்கிணி ஆர்த்தல்- தாமரைக் கண்ணன், ஜெயமோகன்.இன், ஏப்ரல் 28, 2022
- வடுக்களும் தளிர்களும், ஜெயமோகன்.இன், ஏப்ரல் 27, 2022
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 12:06:40 IST