சு.பசுபதி: Difference between revisions
No edit summary |
No edit summary |
||
Line 15: | Line 15: | ||
* [https://groups.google.ca/group/yAppulagam http://groups.google.ca/group/yAppulagam] | * [https://groups.google.ca/group/yAppulagam http://groups.google.ca/group/yAppulagam] | ||
* [https://s-pasupathy.blogspot.com/ பசு பதிவுகள், இணையப்பக்கம்] | * [https://s-pasupathy.blogspot.com/ பசு பதிவுகள், இணையப்பக்கம்] | ||
{{finalised}} | |||
[[Category:Tamil Content]] |
Revision as of 00:20, 7 May 2022
பேராசிரியர் சு.பசுபதி ( 21-செப்டெம்பர் 1940) தமிழ் இலக்கிய ஆவணச் சேகரிப்பாளர், கல்வியாளர், இணைய விவாதங்களில் தமிழிலக்கிய வரலாறு குறித்து எழுதுபவர்.
பிறப்பு, கல்வி
சு.பசுபதி வாங்கல் எம். சுப்பராயன் - ஜெயலக்ஷ்மி இணையருக்கு 21-செப்டெம்பர் 1940 ல் சென்னையில் பிறந்தார். சென்னை ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி ( வடகிளை, தியாகராய நகர்)ரில் பள்ளிக்கல்வியை முடித்தபின் லயோலா கல்லூரி, விவேகானந்தா கல்லூரி, கிண்டி பொறியியல் கல்லூரி. ஐ.ஐ.டி.(மதராஸ்) ஆகியவற்றில் பட்டப்படிப்பை முடித்து யேல் பல்கலைக் கழகத்தில் ( நியூ ஹேவன், கனெக்டிகட், அமெரிக்கா) முனைவர் படிப்பை முடித்தார். பள்ளியில் ஆசிரியர்கள் சாம்பமூர்த்தி ஐயர், ஸ்ரீநிவாசாச்சாரியார் ஆகியோரும் ஐ.ஐ.டியில் எம்.கே.அச்சுதன், சம்பத், வி.ஜி.கே.மூர்த்தி ஆகியோர் தனக்கு ஊக்கமளித்த ஆசிரியர்கள் என்று குறிப்பிடுகிறார். தொடர்பியல் பொறியியலில் (Communication Engineering ) , பேராரிசிய பீட்டர் ஷுல்தாய்ஸ் (Prof.Peter Schultheiss) கீழ் முனைவர்பட்டம் பெற்றார்
தனிவாழ்க்கை
பசுபதி 1980ல் ஜயாவை மணந்தார். ஒரு மகள், வாணி. ஐ.ஐ.டி(மதராஸ்), யேல் பல்கலைக் கழகம், டொராண்டோ பல்கலைக் கழகம் ( கனடா) ஆகியவற்றில் பணியாற்றினார்.
இலக்கியவாழ்க்கை
பசுபதியின் முதல் கவிதை தமிழணங்கு 1982ல் செந்தாமரை என்னும் இதழில் (டொராண்டோ, கனடா) வெளிவந்தது. உ.வே.சாமிநாதையர், சி.சுப்ரமணிய பாரதியார், கல்கி, தேவன் ஆகியோர் தனக்கு முன்னோடிகளாக உள்ளனர் என்கிறார். பசுபதி நடத்தும் பசு பக்கங்கள் என்னும் இணையப்பக்கம் இலக்கிய ஆவணங்களின் சேகரிப்பு.http://groups.google.ca/group/yAppulagam என்னும் விவாதக் குழுமத்திலும் எழுதிவருகிறார்.
நூல்கள்
- கவிதை இயற்றிக் கலக்கு
- சங்கச் சுரங்கம் – மூன்று பகுதிகள்
- சொல்லயில்
உசாத்துணை
✅Finalised Page