under review

இணைமணி மாலை: Difference between revisions

From Tamil Wiki
(Link text corrected)
Line 5: Line 5:
பொருமா விழியாய்! இணைமணிமாலை புகல்வர்களே </poem>
பொருமா விழியாய்! இணைமணிமாலை புகல்வர்களே </poem>
- நவநீதப் பாட்டியல், பாடல் 36 </ref>
- நவநீதப் பாட்டியல், பாடல் 36 </ref>
*வெண்பாவும் அகவலும் வெண்பாவும் [[கலித்துறை (பாவின வகை)]]யுமாக இரண்டிரண்டாக இணைத்து வெண்பா அகவல் இணைமணிமாலை, வெண்பாக் கலித்துறை இணைமணிமாலை என நூறுநூறு அந்தாதித் தொடையாக வரப்பாடுவது இணைமணிமாலை என்று [[இலக்கண விளக்கம்]] குறிப்பிடுகிறது<ref><poem>வெண்பா அகவல் வெண்பாக் கலித்துறை
*வெண்பாவும் அகவலும் வெண்பாவும் [[கலித்துறை (பாவின வகை)|கலித்துறை]]யுமாக இரண்டிரண்டாக இணைத்து வெண்பா அகவல் இணைமணிமாலை, வெண்பாக் கலித்துறை இணைமணிமாலை என நூறுநூறு அந்தாதித் தொடையாக வரப்பாடுவது இணைமணிமாலை என்று [[இலக்கண விளக்கம்]] குறிப்பிடுகிறது<ref><poem>வெண்பா அகவல் வெண்பாக் கலித்துறை
பண்பால் ஈரைம் பஃதுஅந் தாதி  
பண்பால் ஈரைம் பஃதுஅந் தாதி  



Revision as of 13:12, 26 September 2024

To read the article in English: Inaimanimaalai. ‎


இணைமணிமாலை தமிழ்ச் சிற்றிலக்கிய வகைமைகளில் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். இணைமணிமாலையின் இலக்கணம் தொடர்பாக பாட்டியல் நூல்களில் வேறுபாடுகள் இருக்கின்றன:

  • வெண்பாவும் அகவலும் மாறிமாறி வர அந்தாதியாக அமையும் நூறு பாடல்கள் கொண்டதே இணைமணிமாலை என்று நவநீதப் பாட்டியல் குறிப்பிடுகிறது[1]
  • வெண்பாவும் அகவலும் வெண்பாவும் கலித்துறையுமாக இரண்டிரண்டாக இணைத்து வெண்பா அகவல் இணைமணிமாலை, வெண்பாக் கலித்துறை இணைமணிமாலை என நூறுநூறு அந்தாதித் தொடையாக வரப்பாடுவது இணைமணிமாலை என்று இலக்கண விளக்கம் குறிப்பிடுகிறது[2].

நல்லூர் முருகன் இணைமணிமாலை இலக்கண விளக்கத்தில் கூறியபடி அகவற்பா இல்லாமல் நேரிசை வெண்பாவும், கட்டளைக் கலித்துறைப் பாடல்களும் இணைந்து அந்தாதியாக அமைந்துள்ளது.

நல்லூர் முருகன் இணைமணிமாலை

நேரிசை வெண்பா

ஏத்துவே னும்பாத மெண்னுவே னுன்கீர்த்தி
சாத்துவேன் பாமாலை சண்முகா-கூத்துப்
பலபுரியு நல்லூரா பாதமலர்த் தேனை
நிலவுகந்த் துய்க்கவருள் நீ

கட்டளைக் கலித்துறை

நீயே யிருக்குநல் லூரினிற் கோயிலை நீதிமன்னன்
தாயே யெனக்கட்டு வித்தும் புதுக்கியுன் தான்பணிந்தான்
சேயே முருகா சிவகுரிவேசெந் தமிழ் சொன்னவா
வாயேன் மனத்தினு நாவினும் வாழ்விலும் வந்தருளே

உசாத்துணை

இதர இணைப்புகள்

அடிக்குறிப்புகள்

  1. வருபா (வெண்பா, கலித்துறை) இரண்டிரண்டாய்த் தம்முள் மாறின்றி நூறுவரின்
    பொருமா விழியாய்! இணைமணிமாலை புகல்வர்களே

    - நவநீதப் பாட்டியல், பாடல் 36

  2. வெண்பா அகவல் வெண்பாக் கலித்துறை
    பண்பால் ஈரைம் பஃதுஅந் தாதி

    இயலின் வகுப்பது இணைமணி மாலை

    - இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 818



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 12:07:06 IST