being created

பாவிக அணி: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "பாவிக அணி தண்டியலங்காரம் பொருளணியியலில் கூறப்படும் இறுதி அணி. மற்ற அணிகளைப்போல் தனிநிலைச் செய்யுளில் (ஒரு தனிப்பாடலில்) மட்டும் அமையாமல், ஒரு காப்பியம் முழுவதும் ஊடாடி நிற்க...")
 
Line 6: Line 6:
பாவிகம் என்பது காப்பியப் பண்பே  (தண்டி 91) எனக் குறிப்பிடுகிறது.   
பாவிகம் என்பது காப்பியப் பண்பே  (தண்டி 91) எனக் குறிப்பிடுகிறது.   


காப்பியப் பண்பு ஒரு காப்பியம்  முழுவதும் நோக்கிக் கொள்ளப்படுவது அல்லாமல், தனித்து ஒரு பாட்டால் நோக்கிக் கொள்ளப் புலப்படாதது  மற்ற அணிகள் ஒரு பாடலில் மட்டும் அமைவது போலன்றி காப்பியம் கூறும் முக்கியப் பொருளோ, தத்துவமோ, நீதியோ பாவிகம் எனப்படுகிறது.
காப்பியப் பண்பு ஒரு காப்பியம்  முழுவதும் நோக்கிக் கொள்ளப்படுவது அல்லாமல், தனித்து ஒரு பாட்டால் நோக்கிக் கொள்ளப் புலப்படாதது  மற்ற அணிகள் ஒரு பாடலில் மட்டும் அமைவது போலன்றி காப்பியம் கூறும் முக்கியப் பொருளோ, தத்துவமோ, நீதியோ பாவிகம் எனப்படுகிறது.  
 
தண்டியலங்கார உரையில் பாவிக அணிக்குச் சான்றாக [[கம்பராமாயணம்]], மகாபாரதம், [[அரிச்சந்திர புராணம்]] ஆகியவை கூறப்பட்டுள்ளன.
 
பிறன்இல் விழைவோர் கிளையொடும் கெடுப (ராமாயணம்)
 
பொறையில் சிறந்த கவசம் இல்லை; (மகாபாரதம்)
 
வாய்மையில் கடியது ஓர் வாளி இல்லை.(அரிச்சந்திர புராணம்)
 





Revision as of 00:17, 21 May 2024

பாவிக அணி தண்டியலங்காரம் பொருளணியியலில் கூறப்படும் இறுதி அணி. மற்ற அணிகளைப்போல் தனிநிலைச் செய்யுளில் (ஒரு தனிப்பாடலில்) மட்டும் அமையாமல், ஒரு காப்பியம் முழுவதும் ஊடாடி நிற்கும் கருத்தையோ, நீதியையோ குறிக்கிறது.

இலக்கணம்

பாவிகம் காப்பியமாகிய தொடர்நிலைச் செய்யுளில் கவிஞரால் கருதிச் செய்யப்படுவதோர் குணம் ஆகும். இதனைத் தண்டியலங்காரம்

பாவிகம் என்பது காப்பியப் பண்பே (தண்டி 91) எனக் குறிப்பிடுகிறது.

காப்பியப் பண்பு ஒரு காப்பியம் முழுவதும் நோக்கிக் கொள்ளப்படுவது அல்லாமல், தனித்து ஒரு பாட்டால் நோக்கிக் கொள்ளப் புலப்படாதது மற்ற அணிகள் ஒரு பாடலில் மட்டும் அமைவது போலன்றி காப்பியம் கூறும் முக்கியப் பொருளோ, தத்துவமோ, நீதியோ பாவிகம் எனப்படுகிறது.

தண்டியலங்கார உரையில் பாவிக அணிக்குச் சான்றாக கம்பராமாயணம், மகாபாரதம், அரிச்சந்திர புராணம் ஆகியவை கூறப்பட்டுள்ளன.

பிறன்இல் விழைவோர் கிளையொடும் கெடுப (ராமாயணம்)

பொறையில் சிறந்த கவசம் இல்லை; (மகாபாரதம்)

வாய்மையில் கடியது ஓர் வாளி இல்லை.(அரிச்சந்திர புராணம்)








🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.