under review

சங்குப்புலவர்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 1: Line 1:
சங்குப்புலவர் (மலை சாய பாடிய புலவர்) (பொ.யு. 19-ஆம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர்.  
சங்குப்புலவர் (மலை சாய பாடிய புலவர்) (பொ.யு. 19-ஆம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். தென்காசி தேவதானத்திலுள்ள பெற்ற நாயகி அம்மன் கோயிலுக்கு மண்டபம் கட்ட தடையாக இருந்த மலை இவர் பாடிய பாடலால் சாய்ந்ததால் இப்பெயர் பெற்றார். தனிப்பாடல்கள் பல பாடினார் என்ற குறிப்பு காணப்படுகிறது.  
== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
சங்குப்புலவர் தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூரில் உள்ள எட்டிசேரியில் பிறந்தார். இவரின் மகன் [[ச. திருமலைவேற் கவிராயர்]]. ஒரே பேரன் [[தி. சங்குப்புலவர்]]. இருவருமே தமிழ்ப்புலவர்கள், அறிஞர்கள்.
சங்குப்புலவர் தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூரில் உள்ள எட்டிசேரியில் பிறந்தார். இவரின் மகன் [[ச. திருமலைவேற் கவிராயர்]]. ஒரே பேரன் [[தி. சங்குப்புலவர்]]. இருவருமே தமிழ்ப்புலவர்கள், அறிஞர்கள்.
Line 16: Line 16:
* [https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2022/Jun/12/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-3860768.html மலை சாய பாடிய கவிராயர்: தினமணி]
* [https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2022/Jun/12/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-3860768.html மலை சாய பாடிய கவிராயர்: தினமணி]


{{Being created}}
 
{{ready for review}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 16:38, 13 May 2024

சங்குப்புலவர் (மலை சாய பாடிய புலவர்) (பொ.யு. 19-ஆம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். தென்காசி தேவதானத்திலுள்ள பெற்ற நாயகி அம்மன் கோயிலுக்கு மண்டபம் கட்ட தடையாக இருந்த மலை இவர் பாடிய பாடலால் சாய்ந்ததால் இப்பெயர் பெற்றார். தனிப்பாடல்கள் பல பாடினார் என்ற குறிப்பு காணப்படுகிறது.

வாழ்க்கைக் குறிப்பு

சங்குப்புலவர் தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூரில் உள்ள எட்டிசேரியில் பிறந்தார். இவரின் மகன் ச. திருமலைவேற் கவிராயர். ஒரே பேரன் தி. சங்குப்புலவர். இருவருமே தமிழ்ப்புலவர்கள், அறிஞர்கள்.

இலக்கிய வாழ்க்கை

மலைசாய பாடியவர்

பொ.யு. 19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சேற்றூரை ஆண்ட மன்னன் ”பெற்ற நாயகியார் நச்சடை லிங்கர்” ஆலய்த்தின் முன் மண்டபம் கட்ட எண்ணினார். அதற்கு தடையாக இருந்த ஒரு மலையை சாய்க்க எண்ணி சங்குப்புலவரிடம் கூறினார். அவர் பாடல் பாடி அதை ஓர் இலையில் எழுதி அம்மன் முன் வைத்துவிட்டு அங்கேயே தூங்கினார். அன்றிரவு பெய்த மழையில் தட்டைப்பாறை நழுவி மண்டபம் எழுப்ப வழி அமைந்தது.

பாடல் நடை

சங்குப்புலவர் பாடிய பெற்றநாயகி அம்மன் பாடல்

நிலைசாயொ ணாத தவசே புரிந்து நிறையமுத
கலைசார் தவம்பெற்ற தென்சேறை நாதனைக் கண்டவளே
உலைசார் உளிவைத்துக் கற்பணி உனதருளால்
மலைசாய வேண்டும் தவம்பெற்ற நாயகி மாதங்கியே

உசாத்துணை


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.