மனீஷா பஞ்சகம்: Difference between revisions
No edit summary |
|||
| Line 13: | Line 13: | ||
== நூல் அமைப்பு == | == நூல் அமைப்பு == | ||
மனீஷா பஞ்சகம் ஐந்து பாடல்களைக் கொண்டது. தம்மை விலகிப்போ எனக் கூறிய துறவிகளையும், அவர்களது தலைவரான ஆதி சங்கரரையும் நோக்கிப் | மனீஷா பஞ்சகம் ஐந்து பாடல்களைக் கொண்டது. தம்மை விலகிப்போ எனக் கூறிய துறவிகளையும், அவர்களது தலைவரான ஆதி சங்கரரையும் நோக்கிப் சண்டாளன் கேட்ட கேள்விகள் முதலிரண்டு பாடல்களில் உள்ளன. | ||
Revision as of 19:16, 17 April 2024
மனீஷா பஞ்சகம் ஆதிசங்கரர் 'உறுதியான, நிச்சயிக்கப்பட்ட ஞானத்தைப் பற்றி ஐந்து பாடல்களிலே பாடிய நூல். அனைத்தும் பிரம்மமே என்று அத்வைதம் கூறுவதனால் உயிர்களிடையே வேறுபாடில்லை, மானுடரிடையேயும் வேறுபாடில்லை என்ற கருத்தை வலியுறுத்துகிறது.
ஆசிரியர்
மனீஷா பஞ்சகத்தை இயற்றியவர் ஆதிசங்கரர்.
பெயர்க்காரணம்
சம்ஸ்கிருத மொழியில் ‘மனீஷா’ என்றால் நிச்சயிக்கப்பட்ட அறிவு என்பது பொருள். ஐயமின்றி, முற்றிலும் ஆய்ந்து, முழுதாய் உணர்ந்து வரையப்பட்ட தீர்மானமே மனீஷா எனப்படும். ஐந்து ஸ்லோகங்களில் உறுதியான அறிவைப் பற்றிக் கூறுவதால் இப்பெயர் பெற்றது.
தோற்றம்
மனீஷா பஞ்சகம் தோன்றியதைப்பற்றிய தொன்மக்கதை:
சங்கரர் ஆற்றில் நீராடி விட்டு வரும்போது ஐந்து நாய்களுடன் தாழ்த்தப்பட்ட குலத்தைத் சேர்ந்த சண்டாளர் ஒருவர் அவர் முன்னே வந்தார். சங்கரரின் சீடர்கள் சங்கரருக்கு வழிவிட்டு ஒதுங்குமாறு அவரைக் கேட்டனர். அச்சண்டாளர் சங்கரரிடம் "என் உடல் நகர வேண்டுமா அல்லது ஆத்மா நகர வேண்டுமா?''எனக் கேட்க சங்கரர் அவர் அனைத்தும் உணர்ந்த ஞானி எனக்கண்டு அவர் காலில் விழுந்து வணங்கினார். அத்வைதத்தின் பரிபூர்ண உண்மையை உணர்த்தி அருளியதாக கூறி அச்சண்டாளரை தனது குருவாக ஏற்று சங்கரர் மனீஷா பஞ்சகம் பாடினார். இவ்வுண்மையை சங்கரருக்கு உணர்த்த சண்டாள உருவில் சிவனே வந்ததாக சங்கர விஜயம் முதலிய நூல்கள் கூறுகின்றன.
நூல் அமைப்பு
மனீஷா பஞ்சகம் ஐந்து பாடல்களைக் கொண்டது. தம்மை விலகிப்போ எனக் கூறிய துறவிகளையும், அவர்களது தலைவரான ஆதி சங்கரரையும் நோக்கிப் சண்டாளன் கேட்ட கேள்விகள் முதலிரண்டு பாடல்களில் உள்ளன.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.