இலக்கியப் பதிப்பகம்: Difference between revisions
(Para Added and Edited: Image Added; Link Created: Proof Checked.) |
Tamizhkalai (talk | contribs) No edit summary |
||
Line 41: | Line 41: | ||
* மருத்துவர் சித.வே. சண்முகநாதப் பிள்ளை | * மருத்துவர் சித.வே. சண்முகநாதப் பிள்ளை | ||
* நா. கனகராஜையர் | * நா. கனகராஜையர் | ||
* எஸ். வையாபுரிப்பிள்ளை | * [[எஸ். வையாபுரிப் பிள்ளை|எஸ். வையாபுரிப்பிள்ளை]] | ||
* அ.ச.ஞானசம்பந்தன் | * [[அ.ச.ஞானசம்பந்தன்|அ.ச. ஞானசம்பந்தன்]] | ||
* ராய. சொக்கலிங்கன் | * ராய. சொக்கலிங்கன் | ||
* தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் | * தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் | ||
Line 57: | Line 57: | ||
== மதிப்பீடு == | == மதிப்பீடு == | ||
இலக்கியப் பதிப்பகம் அரிய பல நூல்களை வெளியிட்டது. இலக்கியப் பதிப்பகம் வெளியிட்ட விறலிவிடு தூது நூல் பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப்பட்டது. தடை நீங்கிய பின் [[கண்ணதாசன்]] உள்ளிட்ட பலர் அந்நூலைப் பதிப்பித்தனர். அழகப்பா பல்கலைக்கழக மாணவர்களுக்குப் பல விதங்களில் உறுதுணையாக இலக்கியப் பதிப்பகம் செயல்பட்டது. இலக்கியப் பதிப்பகம் குறித்து, டாக்டர் [[ந. சுப்புரெட்டியார்]], “இலக்கியப் பதிப்பகம், இலக்கிய ஆர்வலர்களின் இலக்கிய அரங்கமாகவும், மாணவர்களின் அறிவுக்கு ஆதரவு நல்கும் வேடந்தாங்கலாகவும் விளங்கியது” என்று குறிப்பிட்டார். | இலக்கியப் பதிப்பகம் அரிய பல நூல்களை வெளியிட்டது. இலக்கியப் பதிப்பகம் வெளியிட்ட 'விறலிவிடு தூது' நூல் பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப்பட்டது. தடை நீங்கிய பின் [[கண்ணதாசன்]] உள்ளிட்ட பலர் அந்நூலைப் பதிப்பித்தனர். அழகப்பா பல்கலைக்கழக மாணவர்களுக்குப் பல விதங்களில் உறுதுணையாக இலக்கியப் பதிப்பகம் செயல்பட்டது. இலக்கியப் பதிப்பகம் குறித்து, டாக்டர் [[ந. சுப்புரெட்டியார்]], “இலக்கியப் பதிப்பகம், இலக்கிய ஆர்வலர்களின் இலக்கிய அரங்கமாகவும், மாணவர்களின் அறிவுக்கு ஆதரவு நல்கும் வேடந்தாங்கலாகவும் விளங்கியது” என்று குறிப்பிட்டார். | ||
நகரத்தார் இன மக்கள் தொடங்கி நடத்திய சக்தி காரியாலயம், குமரி மலர், [[பழனியப்பா பிரதர்ஸ்]], [[பாரி நிலையம்]], ஸ்டார் பிரசுரம் வரிசையில் இலக்கியப் பதிப்பகமும் இடம் பெறுகிறது. | நகரத்தார் இன மக்கள் தொடங்கி நடத்திய சக்தி காரியாலயம், குமரி மலர், [[பழனியப்பா பிரதர்ஸ்]], [[பாரி நிலையம்]], ஸ்டார் பிரசுரம் வரிசையில் இலக்கியப் பதிப்பகமும் இடம் பெறுகிறது. | ||
Line 67: | Line 67: | ||
* அமுதசுரபி இதழ் கட்டுரை, பழ. முத்தப்பன், ஆகஸ்ட் 2018. | * அமுதசுரபி இதழ் கட்டுரை, பழ. முத்தப்பன், ஆகஸ்ட் 2018. | ||
* நகரத்தார் கலைக்களஞ்சியம், பதிப்பாசிரியர் ச. மெய்யப்பன், இணை ஆசிரியர்கள், கரு. முத்தய்யா, சபா. அருணாசலம், மெய்யப்பன் தமிழாய்வகம், சிதம்பரம், விரிவாக்கப் பதிப்பு, மே, 2002. | * நகரத்தார் கலைக்களஞ்சியம், பதிப்பாசிரியர் ச. மெய்யப்பன், இணை ஆசிரியர்கள், கரு. முத்தய்யா, சபா. அருணாசலம், மெய்யப்பன் தமிழாய்வகம், சிதம்பரம், விரிவாக்கப் பதிப்பு, மே, 2002. | ||
{{ | {{First review completed}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 06:59, 20 February 2024
இலக்கியப் பதிப்பகம் (1946) தமிழ் இலக்கிய நூல்களை வெளியிடுவதற்காகத் தோற்றுவிக்கப்பட்ட பதிப்பக நிறுவனம். காரைக்குடியில், வெ. சோமையா இதனைத் தோற்றுவித்தார். அ.ச.ஞானசம்பந்தனின் ‘இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்' நூல் தொடங்கி பல்வேறு இலக்கிய, ஆய்வு நூல்களை இலக்கியப் பதிப்பகம் வெளியிட்டது.
தோற்றம், வெளியீடு
இலக்கிய ஆர்வமும், குமரி மலர் இதழில் பணியாற்றிய அனுபவமும் கொண்டிருந்த வெ. சோமையா, 1946-ல், காரைக்குடியில், இலக்கியப் பதிப்பகத்தைத் தோற்றுவித்தார்.
கவிதை, நாடகம், கல்வி, மருத்துவம், இலக்கிய ஆய்வுகள், மொழிபெயர்ப்புகள், காந்திய நூல்கள் எனப் எனப் பல வகைமைகளில் இலக்கியப் பதிப்பகம் நூல்களை வெளியிட்டது. வெ. சோமையாவின் அத்தை மகனான சா. கணேசன், இலக்கியப் பதிப்பக நூல்கள் வெளியீட்டிற்குப் பல வகைகளில் உறுதுணையாக இருந்தார். தனது நண்பர்களாக இருந்த பல எழுத்தாளர்களையும், கவிஞர்களையும், இலக்கியவாதிகளையும் வெ. சோமையாவுக்கு அறிமுகப்படுத்தினார்.
நா. கனகராஜையர், எஸ். வையாபுரிப்பிள்ளை, அ.ச.ஞானசம்பந்தன், ராய. சொக்கலிங்கன், தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் தொடங்கி மார்க்கபந்து சர்மா, ரெ.முத்துகணேசன் வரை பல இலக்கிய ஆளுமைகளின் நூல்களை இலக்கியப் பதிப்பகம் வெளியிட்டது.
இலக்கியப் பதிப்பக வெளியீடுகள்
- கம்பன் பிள்ளைத்தமிழ்
- கவிதைக் கதம்பம்
- விறலிவிடு தூது
- காதற்பாட்டு
- கல்லும் சொல்லும் கவி
- இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்
- சிலப்பதிகாரம் ஒரு ரசனை
- இலக்கிய மன்னன்
- கம்பனில் அவலம்
- நந்திக் கலம்பகம்
- புறத்திரட்டு
- மீனாமிர்தம்
- வைத்திய சாஸ்திரம்
- உயிர்நிலைக் கலை
- விளையாட்டுப் பள்ளிக்கூடம்
- மகாத்மா காந்தி - ரசமான சம்பவங்கள்
- பிரிட்டிஷாருக்கு எனது வேண்டுகோள்
- காந்தியவழி
- காந்திஜியுடன் சுற்றுப் பிரயாணம்
- டில்லி செங்கோட்டை விசாரணை
- வானவில்
- கமலா
மற்றும் பல
இலக்கியப் பதிப்பகம் பதிப்பித்த எழுத்தாளர்கள்
- சதாவதானம் சரவணப் பெருமாள் கவிராயர்
- மருத்துவர் சித.வே. சண்முகநாதப் பிள்ளை
- நா. கனகராஜையர்
- எஸ். வையாபுரிப்பிள்ளை
- அ.ச. ஞானசம்பந்தன்
- ராய. சொக்கலிங்கன்
- தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்
- மார்க்கபந்து சர்மா
- ரெ.முத்துகணேசன்
- கா. திரவியம்
- டி.ஆர். அருணாசலம்
- ஜீவன்
மற்றும் பலர்
ஆவணம்
இலக்கியப் பதிப்பகம் வெளியிட்ட நூல்களில் சில தமிழ் இணையக் கல்விக் கழக நூலகத்தில் சேகரிக்கப்பட்டுள்ளன.
மதிப்பீடு
இலக்கியப் பதிப்பகம் அரிய பல நூல்களை வெளியிட்டது. இலக்கியப் பதிப்பகம் வெளியிட்ட 'விறலிவிடு தூது' நூல் பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப்பட்டது. தடை நீங்கிய பின் கண்ணதாசன் உள்ளிட்ட பலர் அந்நூலைப் பதிப்பித்தனர். அழகப்பா பல்கலைக்கழக மாணவர்களுக்குப் பல விதங்களில் உறுதுணையாக இலக்கியப் பதிப்பகம் செயல்பட்டது. இலக்கியப் பதிப்பகம் குறித்து, டாக்டர் ந. சுப்புரெட்டியார், “இலக்கியப் பதிப்பகம், இலக்கிய ஆர்வலர்களின் இலக்கிய அரங்கமாகவும், மாணவர்களின் அறிவுக்கு ஆதரவு நல்கும் வேடந்தாங்கலாகவும் விளங்கியது” என்று குறிப்பிட்டார்.
நகரத்தார் இன மக்கள் தொடங்கி நடத்திய சக்தி காரியாலயம், குமரி மலர், பழனியப்பா பிரதர்ஸ், பாரி நிலையம், ஸ்டார் பிரசுரம் வரிசையில் இலக்கியப் பதிப்பகமும் இடம் பெறுகிறது.
உசாத்துணை
- இலக்கியப் பதிப்பக நூல்கள்: தமிழ் இணையக் கல்விக் கழக நூலகம்
- தினமணி இதழ் கட்டுரை
- அமுதசுரபி இதழ் கட்டுரை, பழ. முத்தப்பன், ஆகஸ்ட் 2018.
- நகரத்தார் கலைக்களஞ்சியம், பதிப்பாசிரியர் ச. மெய்யப்பன், இணை ஆசிரியர்கள், கரு. முத்தய்யா, சபா. அருணாசலம், மெய்யப்பன் தமிழாய்வகம், சிதம்பரம், விரிவாக்கப் பதிப்பு, மே, 2002.
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.