மு. சிவலிங்கம்: Difference between revisions
Line 17: | Line 17: | ||
* தமிழக அரசின் கணிபொறியியல் பாடத்திட்டக் குழு உறுப்பினர் (2004-2005) | * தமிழக அரசின் கணிபொறியியல் பாடத்திட்டக் குழு உறுப்பினர் (2004-2005) | ||
== இலக்கிய வாழ்க்கை == | == இலக்கிய வாழ்க்கை == | ||
மு. சிவலிங்கம் மரபு கவிதைகள் எழுதினார். சிற்றிதழ் நடத்தியவர். கணினித்தமிழ் சார்ந்த நூல்களை எழுதினார். | மு. சிவலிங்கம் மரபு கவிதைகள் எழுதினார். சிற்றிதழ் நடத்தியவர். கணினித்தமிழ் சார்ந்த நூல்களை எழுதினார். மு.சிவலிங்கம் சினேகலதா என்ற புனைப்பெயரில் தமிழ்க் கம்ப்யூட்டர் இதழில், டி’பேஸ் வழியாக சி-மொழி, சி-மொழியின் சிறப்புத் தன்மைகள், மொழிகளின் அரசி சி++, வருங்கால மொழி சி#, நெட்வொர்க் தொழில்நுட்பம் ஆகிய தலைப்புகளில் எளிய தமிழ்நடையில், நடைமுறை வாழ்க்கையின் எடுத்துக்காட்டுகளுடன் எழுதினார். | ||
== விருதுகள்== | == விருதுகள்== |
Revision as of 16:33, 15 February 2024
மு. சிவலிங்கம் (பிறப்பு: செப்டம்பர் 12, 1951) கணினித்தமிழ் அறிஞர், தொழில்நுட்ப வல்லுநர். கணினித்தமிழ் சார்ந்த நூல்களை எழுதினார்.
வாழ்க்கைக் குறிப்பு
மு. சிவலிங்கம் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம், வேடச்சந்தூர் வட்டம், கூவக்காப்பட்டி என்னும் ஊரில் முனியப்பன், சின்னக் கண்ணம்மாள் இணையருக்கு செப்டம்பர் 12, 1951-இல் பிறந்தார். பெற்றோருக்கு இவர் பன்னிரண்டாவது பிள்ளை. வெள்ளைய கவுண்டனூர் தொடக்கப்பள்ளியிலும், கூவக்கப்பாட்டிப் பள்ளியிலும், வேடசந்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியிலும் பள்ளிக் கல்வி பயின்றவர். சிவகாசி அய்யநாடார் கல்லூரியில் கணிதப்பாடத்தைப் பட்டடப் படிப்பிற்காகப் பயின்றவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் பட்டத்திற்காகக் கணிதத்தைப் பயின்றவர். கணிதம், தமிழ், கணினிப் பயன்பாடு, தொழிலாளர் சட்டம், மனித வள மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.
இந்திய அரசின் தொலைத்தகவல் தொடர்புத் துறையில் முப்பத்தி மூன்று ஆண்டுகள் பொறியாளராகப் பணியாற்றி 2007-இல் விருப்ப ஓய்வு பெற்றார்.
தமிழ் கணிணிக்குச் செய்த பங்களிப்புகள்
தமிழக அரசு அமைத்த பல்வேறு குழுக்களில் இருந்து கணினி, தொழில்நுட்ப மேம்பாட்டுக்குப் பணியாற்றியவர். கணினிக் கலைச்சொல் அகராதி உருவாக்கியதில் முக்கியப் பணியாற்றியவர். தமிழ் இணையக் கல்விக் கழகத்திற்காக, கணினி பற்றிய பாடங்களை எழுதியவர். கணினி தொடர்பான பருவ இதழ்களில் பல்லாண்டுகளாக எழுதித்
பொறுப்புகள்
- பாரதிதாசன் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி எம்சிஏ மாணவர்களுக்குக் கவுரவ ஆசிரியர் (1996-2003)
- தமிழக அரசு பொது நூலகப் புத்தகத் தேர்வுக்குழு உறுப்பினர் (1998)
- தமிழக அரசு சுஜாதா தலைமையில் அமைத்த கலைச்சொல்லாக்கக் குழுவில் 200 சொற்கள் உருவாக்கம் (1999)
- தமிழக அரசு முனைவர் மு. ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் அமைத்த தகவல் தொழில்நுட்பக் கலைச்சொல்லாக்கக் குழுவில் 8000 சொற்கள் உருவாக்கம் (2000)
- மணவை முஸ்தபா வெளியிட்ட கணினிக் கலைச்சொல் களஞ்சிய அகராதி தொகுதி 1, 2 உருவாக்கத்தில் முக்கிய பங்களிப்பு (1999, 2001)
- மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் விண்டோஸ், எம்எஸ் ஆஃபீஸ் தொகுப்புத் தமிழ் இடைமுகத்துக்கான கலைச்சொல்லாக்கம் (2003)
- தமிழக அரசின் கணிபொறியியல் பாடத்திட்டக் குழு உறுப்பினர் (2004-2005)
இலக்கிய வாழ்க்கை
மு. சிவலிங்கம் மரபு கவிதைகள் எழுதினார். சிற்றிதழ் நடத்தியவர். கணினித்தமிழ் சார்ந்த நூல்களை எழுதினார். மு.சிவலிங்கம் சினேகலதா என்ற புனைப்பெயரில் தமிழ்க் கம்ப்யூட்டர் இதழில், டி’பேஸ் வழியாக சி-மொழி, சி-மொழியின் சிறப்புத் தன்மைகள், மொழிகளின் அரசி சி++, வருங்கால மொழி சி#, நெட்வொர்க் தொழில்நுட்பம் ஆகிய தலைப்புகளில் எளிய தமிழ்நடையில், நடைமுறை வாழ்க்கையின் எடுத்துக்காட்டுகளுடன் எழுதினார்.
விருதுகள்
மறைவு
மு. சிவலிங்கம் பிப்ரவரி 13, 2024-இல் சென்னை மாம்பலத்தில் உள்ள தம் இல்லத்தில் மாரடைப்பால் காலமானார்.
நூல் பட்டியல்
- ஐகியூ தேர்வுகள் எழுதுவது எப்படி?
- டாஸ் கையேடு
- உள்ளங்கைக்குள் உலகம்
- டி’பேஸ் வழியாக சி-மொழி
- கம்ப்யூட்டர் இயக்க முறைகள்
- மின்னஞ்சல்
- வருங்கால மொழி சி++
- +1 கணிப்பொறியியல் பாடநூல் – தொகுதி 2
- +2 கணிப்பொறியியல் பாடநூல் – தொகுதி 2
- தகவல் தொழில்நுட்பம் – ஓர் அறிமுகம்
- நெட்வொர்க் தொழில்நுட்பம்
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.