மா.திருநாவுக்கரசு: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 39: Line 39:


சிவநெறி வித்தகர்-சூரியனார் கோயில் ஆதீனம் (2012)
சிவநெறி வித்தகர்-சூரியனார் கோயில் ஆதீனம் (2012)
== உசாத்துணை ==
[https://muelangovan.wordpress.com/2014/06/11/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2/ சிற்றிலக்கிய வேந்தர் புலவர் மா.திருநாவுக்கரசு-மு.இளங்கோவன்-'தமிழோடு நான்']

Revision as of 22:52, 4 March 2022

மா.திருநாவுக்கரசு நவீன காலத்தில் சிற்றிலக்கியங்கL இயற்றி அம்மரபை உயிர்ப்புடன் வைத்திருக்கும் புலவர். அவர் இயற்றிய சிற்றிலக்கியங்கள் கல்லூரிகளில் பாட நூல்களாக இருந்துள்ளன. அவரது படைப்புகளைப் பலர் ஆய்வு செய்து பட்டம் பெற்றுள்ளனர். தமிழாசிரியர் மற்றும் திருமழபாடி தமிழ்ச் சங்கத் தலைவர்.திருமழபாடி ஆலயத்தில் திருமுறை வகுப்புகள் நடத்தியவர்.அப்பர் அருள்நெறிக் கழகத்தின் வாயிலாக 44 கிலோ எடையுள்ள அப்பரின் ஐம்பொன் சிலையை நிறுவுவதில் பெரும்பங்கு வகித்தவர்.திருமழபாடித் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் 700 கிலோ எடையில் திருவள்ளுவர் வெண்கலச் சிலை நிறுவக் காரணமாக இருந்தவர்.

பிறப்பு,கல்வி

புலவர் மா. திருநாவுக்கரசு அவர்கள் தஞ்சை மாவட்டம் திருவையாறு வட்டம் வைத்தியநாதன்பேட்டையில் மாணிக்கம் பிள்ளை, திருவாட்டி அங்கம்மாள் ஆகியோரின் மகனாக 10 அக்டோபர், 1932 இல் பிறந்தவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பி. லிட், வித்துவான் பட்டங்களைப் பெற்றவர்.

தனி வாழ்க்கை

புலவர் மா. திருநாவுக்கரசு அவர்கள் துணைவியார் சுகந்தம் அம்மையார். இரு மகன்களும் மூன்று மகள்களும் அவரது சந்ததியினர். அரசு பள்ளிகளில் இடைநிலைத் தமிழாசிரியராக 32 ஆண்டுகள் ஆசிரியப்பணி செய்து ஓய்வு பெற்றவர்.

இலக்கியப் பணி

மா.திருநாவுக்கரசு சிற்றிலக்கியங்களின் மீதுள்ள புலமையாலும், ஆர்வத்தாலும் தற்காலத் தமிழறிஞர்களை பாடுபொருளாகக் கொண்ட பல சிற்ரிலக்கியங்களை[ப் படைத்திருக்கிறார். குடந்தை. ப. சுந்தரேசனாரின் மீது கொண்டிருந்த அன்பும் பற்றும் காரணமாகப் படைக்கப்பட்ட பண்ணாராய்ச்சி வித்தகர் சுந்தரேசனார் அன்னம் விடு தூது ஒரு குறிப்பிடத்தக்க படைப்பு.

படைப்புகள்

  • பண்ணாராய்ச்சி வித்தகர் ப. சுந்தரேசனார்  அன்னம்விடுதுதூது(1991)
  • மருத்துவ வள்ளல் விசுவநாதம் கொண்டல்விடு தூது (1998)
  • திருமகள் மலர்விடு தூது(1994)
  • நல்லாசிரியர் இரத்தினசபாபதியார் சங்குவிடு தூது(1997)
  • திருப்பூசை செல்வர் மூக்கப்பிள்ளை சந்தனவிடு தூது(2003)
  • அருள்மிகு பழநியப்பர் பொன்விடு தூது
  • அருள்மிகு அழகம்மை பிள்ளைத்தமிழ்(2004)
  • பெருந்தலைவர் காமராசர் பிள்ளைத்தமிழ்(2003)
  • கப்பலோட்டிய தமிழன் பிள்ளைத் தமிழ்(அச்சில்)
  • பெருந்தலைவர் காமராசர் மயில்விடு தூது
  • நேரு மாமா பாடல்கள்
  • பழங்கதைகளும் புதிய பாடல்களும்
  • முத்துக்குமார் இலக்கண வினா-விடை(1991)

பரிசுகள், விருதுகள்

தூதிலக்கியத் தோன்றல்(1997) - அரியலூர் மணிமன்றம்

மரபுக்கவிமணி -திருத்தவத்துறை அறநெறிக் கழகம் (1989)

புலவர் மாமணி-திருவையாறு ஔவைக்கோட்டம் (2009)

சிற்றிலக்கியச் செல்வர்- குடந்தை புனிதர் பேரவை (2008)

சைவத் தமிழறிஞர் -திருச்சிராப்பள்ளி திருமுறை மன்றம்

சிவநெறி வித்தகர்-சூரியனார் கோயில் ஆதீனம் (2012)

உசாத்துணை

சிற்றிலக்கிய வேந்தர் புலவர் மா.திருநாவுக்கரசு-மு.இளங்கோவன்-'தமிழோடு நான்'