ஒருபா ஒருபது: Difference between revisions
From Tamil Wiki
Tamizhkalai (talk | contribs) No edit summary |
(Changed incorrect text: ==அடிக்குறிப்புகள்== <references />) |
||
Line 17: | Line 17: | ||
*[[சிற்றிலக்கியங்கள்]] | *[[சிற்றிலக்கியங்கள்]] | ||
*[[பாட்டியல்]] | *[[பாட்டியல்]] | ||
==அடிக்குறிப்புகள்== | == அடிக்குறிப்புகள் == | ||
<references /> | <references /> | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:சிற்றிலக்கிய வகைகள்]] | [[Category:சிற்றிலக்கிய வகைகள்]] |
Revision as of 06:11, 15 November 2023
To read the article in English: Orupa Orupathu.
ஒருபா ஒருபது தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். இது அகவல், வெண்பா, கலித்துறை என்னும் பாவகைகளுள் ஏதாவது ஒன்றில், அந்தாதியாக அமையும் பத்துப் பாடல்களைக் கொண்டிருக்கும்
அகவல் வெண்பாக் கலித்துறை அதுகொண்டு
ஒருபா ஒருபஃது உறின்அப் பெயராம்
- இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல். பாடல் 823
.
எடுத்துக்காட்டு
- திருவொற்றியூர் ஒருபா ஒருபது என்ற பட்டினத்தாரால் இயற்றப்பட்ட சைவ நூல்[1] பதினோராம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது. திருவொற்றியூர் என்ற தலத்தில் எழுந்தருளிய சிவனைப் பத்து அகவற்பாக்களால் அந்தாதியாகப் பாடுகிறது. நூல் 'இருநிலம்’ என்னும் தொடருடன் தொடங்கி 'இருநிலத்தே’ என்று மண்டலித்து அதே தொடரில் முடிகிறது.
- சரஸ்வதி ஒருபா ஒருபது[2]
உசாத்துணை
- நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்
- கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், திருவையாறு.
- முத்துவீரியம்-தமிழ் இணைய நூலகம்
- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்
இதர இணைப்புகள்
அடிக்குறிப்புகள்
✅Finalised Page