பி.கே.ராஜசேகரன்: Difference between revisions
(Finalised) |
|||
Line 1: | Line 1: | ||
[[File:P-k-rajasekharan.jpg|thumb|பி.கே.ராஜசேகரன்]] | [[File:P-k-rajasekharan.jpg|thumb|பி.கே.ராஜசேகரன்]] | ||
பி.கே.ராஜசேகரன் (21 பிப்ரவரி 1966 ) மலையாள இலக்கிய விமர்சகர், இலக்கிய ஆய்வாளர், கல்வியாளர். உலக இலக்கியத்தை மலையாளத்தில் அறிமுகம் செய்யும் | பி.கே.ராஜசேகரன் (21 பிப்ரவரி 1966 ) மலையாள இலக்கிய விமர்சகர், இலக்கிய ஆய்வாளர், கல்வியாளர். உலக இலக்கியத்தை மலையாளத்தில் அறிமுகம் செய்யும் விரிவான கட்டுரைத்தொடர்களை எழுதியவர். | ||
== பிறப்பு, கல்வி == | == பிறப்பு, கல்வி == | ||
பி.கே. | பி.கே.ராஜசேகரன் 21 பிப்ரவரி 1966 ல் திருவனந்தபுரம் மாவட்டத்தில் மலையின்கீழ் அருகே உள்ள கரிப்பூரில் பிறந்தார். திருவனந்தபுரம் பல்கலைக் கல்லூரியில், காரியவட்டம் பல்கலை வளாகம் ஆகியவற்றில் மலையாள இலக்கியத்தில் இளங்கலை, முதுகலை படிப்பை முடித்தார். கேரள பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றார். | ||
== தனி வாழ்க்கை == | == தனி வாழ்க்கை == | ||
Line 9: | Line 9: | ||
== இதழியல் == | == இதழியல் == | ||
மாத்ருபூமி திருவனந்தபுரம் பதிப்பின் முதன்மை | மாத்ருபூமி திருவனந்தபுரம் பதிப்பின் முதன்மை உதவி ஆசிரியராகப் பணியாற்றினார் | ||
== இலக்கியப்பணிகள் == | == இலக்கியப்பணிகள் == | ||
பி.கே. | பி.கே.ராஜசேகரன் 1992ல் ஆஸாதுடன் இணைந்து வெளியிட்ட ‘நாவல் -போதமும் பிரதிபோதமும்’ என்னும் தொகைநூல் மலையாள இலக்கியத்தில் பின்நவீனத்துவம் பற்றிய விவாதங்களை உருவாக்கியது. தொடர்ந்து ஓ.வி.விஜயன் பற்றிய பித்ருகடிகாரம் என்னும் நூல் அவருடைய விமர்சனப்பார்வையை நிறுவியது. மலையாள நாவல்கள் பற்றிய ஏகாந்த நகரங்கள், அந்தனாய தெய்வம் ஆகியவை கேரள நாவல் ஆய்வுகளில் குறிப்பிடத்தக்க ஆக்கங்களாக கருதப்படுகின்றன. | ||
பி.கே.ராஜசேகரன் சமகால ஐரோப்பிய- அமெரிக்க இலக்கியங்களை பொதுவாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் இலக்கியத் தொடர்களை வார இதழ்களில் எழுதி வருகிறார், அவை தொகுதிகளாக வெளிவந்துள்ளன. | பி.கே.ராஜசேகரன் சமகால ஐரோப்பிய- அமெரிக்க இலக்கியங்களை பொதுவாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் இலக்கியத் தொடர்களை வார இதழ்களில் எழுதி வருகிறார், அவை தொகுதிகளாக வெளிவந்துள்ளன. | ||
== இலக்கிய ஆய்வு == | == இலக்கிய ஆய்வு == | ||
மலையாள இலக்கியத்தின் முதல் நாவல்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்துலேகா (ஆசிரியர் | மலையாள இலக்கியத்தின் முதல் நாவல்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்துலேகா (ஆசிரியர் ஓ.சந்துமேனன். தமிழில் [[கா.அப்பாத்துரை]]) பெண்விடுதலை மற்றும் பெண்கல்வியை வலியுறுத்தும் நாவல். இது மிகப்பெரிய அளவில் பின்னாளைய பதிப்புகளில் வெட்டிச்சுருக்கப்பட்டிருப்பதை பி.கே.ராஜசேகரன் மற்றும் பி.வேணுகோபாலன் இணைந்து கண்டடைந்தனர். மூலப்பிரதி லண்டன் நூலகத்தில் கண்டடையப்பட்டு அவர்களால் 2016 ல் வெளியிடப்பட்டது. பெண்கல்வியை தீவிரமாக வலியுறுத்தும் பகுதிகள் பிற்கால பதிப்புகளில் நீக்கம் செய்யப்பட்டிருந்தன. | ||
== விருதுகள் == | == விருதுகள் == | ||
Line 55: | Line 55: | ||
* [https://www-thehindu-com.translate.goog/todays-paper/tp-national/tp-kerala/the-lost-pages-of-indulekha/article2902250.ece?_x_tr_sl=en&_x_tr_tl=ml&_x_tr_hl=ml&_x_tr_pto=tc இந்துலேகா முழுமையாக] | * [https://www-thehindu-com.translate.goog/todays-paper/tp-national/tp-kerala/the-lost-pages-of-indulekha/article2902250.ece?_x_tr_sl=en&_x_tr_tl=ml&_x_tr_hl=ml&_x_tr_pto=tc இந்துலேகா முழுமையாக] | ||
* [https://www-youtube-com.translate.goog/watch?v=mAe6bp-lnaw&_x_tr_sl=en&_x_tr_tl=ml&_x_tr_hl=ml&_x_tr_pto=tc பி.கே.ராஜசேகரன் உரை] | * [https://www-youtube-com.translate.goog/watch?v=mAe6bp-lnaw&_x_tr_sl=en&_x_tr_tl=ml&_x_tr_hl=ml&_x_tr_pto=tc பி.கே.ராஜசேகரன் உரை] | ||
{{Finalised}} | |||
[[Category:Tamil Content]] |
Revision as of 10:26, 12 July 2023
பி.கே.ராஜசேகரன் (21 பிப்ரவரி 1966 ) மலையாள இலக்கிய விமர்சகர், இலக்கிய ஆய்வாளர், கல்வியாளர். உலக இலக்கியத்தை மலையாளத்தில் அறிமுகம் செய்யும் விரிவான கட்டுரைத்தொடர்களை எழுதியவர்.
பிறப்பு, கல்வி
பி.கே.ராஜசேகரன் 21 பிப்ரவரி 1966 ல் திருவனந்தபுரம் மாவட்டத்தில் மலையின்கீழ் அருகே உள்ள கரிப்பூரில் பிறந்தார். திருவனந்தபுரம் பல்கலைக் கல்லூரியில், காரியவட்டம் பல்கலை வளாகம் ஆகியவற்றில் மலையாள இலக்கியத்தில் இளங்கலை, முதுகலை படிப்பை முடித்தார். கேரள பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றார்.
தனி வாழ்க்கை
பி.கே.ராஜசேகரன் இதழாளராகப் பணியாற்றினார். பின்னர் முழுநேர இலக்கிய ஆசிரியராகவும், ஆட்சிப்பணித்தேர்வுக்கு பயிற்சி அளிப்பவராகவும் பணியாற்றி வருகிறார். மனைவி முனைவர் ராதிகா சி.நாயர்.
இதழியல்
மாத்ருபூமி திருவனந்தபுரம் பதிப்பின் முதன்மை உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்
இலக்கியப்பணிகள்
பி.கே.ராஜசேகரன் 1992ல் ஆஸாதுடன் இணைந்து வெளியிட்ட ‘நாவல் -போதமும் பிரதிபோதமும்’ என்னும் தொகைநூல் மலையாள இலக்கியத்தில் பின்நவீனத்துவம் பற்றிய விவாதங்களை உருவாக்கியது. தொடர்ந்து ஓ.வி.விஜயன் பற்றிய பித்ருகடிகாரம் என்னும் நூல் அவருடைய விமர்சனப்பார்வையை நிறுவியது. மலையாள நாவல்கள் பற்றிய ஏகாந்த நகரங்கள், அந்தனாய தெய்வம் ஆகியவை கேரள நாவல் ஆய்வுகளில் குறிப்பிடத்தக்க ஆக்கங்களாக கருதப்படுகின்றன.
பி.கே.ராஜசேகரன் சமகால ஐரோப்பிய- அமெரிக்க இலக்கியங்களை பொதுவாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் இலக்கியத் தொடர்களை வார இதழ்களில் எழுதி வருகிறார், அவை தொகுதிகளாக வெளிவந்துள்ளன.
இலக்கிய ஆய்வு
மலையாள இலக்கியத்தின் முதல் நாவல்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்துலேகா (ஆசிரியர் ஓ.சந்துமேனன். தமிழில் கா.அப்பாத்துரை) பெண்விடுதலை மற்றும் பெண்கல்வியை வலியுறுத்தும் நாவல். இது மிகப்பெரிய அளவில் பின்னாளைய பதிப்புகளில் வெட்டிச்சுருக்கப்பட்டிருப்பதை பி.கே.ராஜசேகரன் மற்றும் பி.வேணுகோபாலன் இணைந்து கண்டடைந்தனர். மூலப்பிரதி லண்டன் நூலகத்தில் கண்டடையப்பட்டு அவர்களால் 2016 ல் வெளியிடப்பட்டது. பெண்கல்வியை தீவிரமாக வலியுறுத்தும் பகுதிகள் பிற்கால பதிப்புகளில் நீக்கம் செய்யப்பட்டிருந்தன.
விருதுகள்
- கேரள சாகித்ய அக்காதமி விருது 1997
- விலாசினி விருது 2000
- தோப்பில் ரவி விருது 200
- ஸ்டேட்பேங்க் ஆஃப் திருவிதாங்கூர் விருது 2009
- நரேந்திரப்பிரசாத் விருது 2009
- பந்தளம் கேரள வர்மா விருது 2011
- சி.பி.குமார் அறக்கட்டளை விருது
- கோதவர்மா நினைவு விருது 1988
நூல்கள்
- பத்து நோவலிஸ்டுகள்
- பிதுரு கடிகாரம் -- ஓ.வி.விஜயனின் கலையும் தர்சனம்
- அந்தனாய தெய்வம்- மலையாள நாவலின் நூறாண்டுகள்
- ஏகாந்த நகரங்கள்: பின்நவீனத்துவ மலையாள இலக்கியத்தின் அழகியல்
- நிஸாதர்சனங்கள்
- வாக்கின் மறுகரை
- நரகத்தின்றே பூபடங்கள்
- புக்ஸ்டால்ஜிய- ஒரு புத்தகவாசகனின் கடந்தகால ஏக்கங்கள்
- தஸ்தயேவ்ஸ்கி பூதாவிஷ்டன்றே சாயாபடம்
- ஆத்மாவிலே பாவகளிக்கார்- கவிதையின் சோதனைமுயற்சிகள்
- இருள் சந்தர்ப்பங்கள்- குற்ற இலக்கிய வாசிப்பு
- மலயாளியின் மாத்யம ஜீவிதம்
- விஸ்வசாகித்ய பரியடனங்கள்
- கதாந்தரங்கள்
- சினிமா சந்தர்ப்பங்கள்
- மாத்யம நிகண்டு
- பாச்சாத்ய சாகித்ய சித்தாந்தம்(மேலைநாட்டு இலக்கிய அழகியல்)
உசாத்துணை
✅Finalised Page