under review

சு.பசுபதி: Difference between revisions

From Tamil Wiki
(Corrected category text)
(Corrected text format issues)
Line 4: Line 4:
== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
சு.பசுபதி வாங்கல் எம். சுப்பராயன் - ஜெயலக்ஷ்மி இணையருக்கு செப்டெம்பர் 21, 1940-ல் சென்னையில் பிறந்தார். சென்னை ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி (தியாகராய நகர்)யில் பள்ளிக்கல்வியை முடித்தபின் லயோலா கல்லூரி, விவேகானந்தா கல்லூரி, கிண்டி பொறியியல் கல்லூரியில் தொலைத்தொடர்புத் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.  1966-ல் சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில்( ஐ.ஐ.டி) முதுகலைப்  பட்டப்படிப்பை (MTech)  முடித்தார். முதல் மாணவருக்கான பரிசை சர். சி.வி. ராமனிடமிருந்து பெற்றார்.
சு.பசுபதி வாங்கல் எம். சுப்பராயன் - ஜெயலக்ஷ்மி இணையருக்கு செப்டெம்பர் 21, 1940-ல் சென்னையில் பிறந்தார். சென்னை ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி (தியாகராய நகர்)யில் பள்ளிக்கல்வியை முடித்தபின் லயோலா கல்லூரி, விவேகானந்தா கல்லூரி, கிண்டி பொறியியல் கல்லூரியில் தொலைத்தொடர்புத் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.  1966-ல் சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில்( ஐ.ஐ.டி) முதுகலைப்  பட்டப்படிப்பை (MTech)  முடித்தார். முதல் மாணவருக்கான பரிசை சர். சி.வி. ராமனிடமிருந்து பெற்றார்.
அமெரிக்காவின் யேல் (Yale)  பல்கலைக்கழகத்தில்  தொடர்பியல் பொறியியலில் (Communication Engineering ) , பேராசிரியர் பீட்டர் ஷுல்தாய்ஸ் (Prof.Peter Schultheiss) கீழ் முனைவர்பட்டம் பெற்றார்.  பள்ளியில் ஆசிரியர்கள் சாம்பமூர்த்தி ஐயர், ஸ்ரீநிவாசாச்சாரியார் ஆகியோரும் ஐ.ஐ.டியில் எம்.கே.அச்சுதன், சம்பத், வி.ஜி.கே.மூர்த்தி ஆகியோர் தனக்கு ஊக்கமளித்த ஆசிரியர்கள் என்று குறிப்பிடுகிறார்.  
அமெரிக்காவின் யேல் (Yale)  பல்கலைக்கழகத்தில்  தொடர்பியல் பொறியியலில் (Communication Engineering ) , பேராசிரியர் பீட்டர் ஷுல்தாய்ஸ் (Prof.Peter Schultheiss) கீழ் முனைவர்பட்டம் பெற்றார்.  பள்ளியில் ஆசிரியர்கள் சாம்பமூர்த்தி ஐயர், ஸ்ரீநிவாசாச்சாரியார் ஆகியோரும் ஐ.ஐ.டியில் எம்.கே.அச்சுதன், சம்பத், வி.ஜி.கே.மூர்த்தி ஆகியோர் தனக்கு ஊக்கமளித்த ஆசிரியர்கள் என்று குறிப்பிடுகிறார்.  
==தனிவாழ்க்கை==
==தனிவாழ்க்கை==
Line 10: Line 9:
==இலக்கியவாழ்க்கை ==
==இலக்கியவாழ்க்கை ==
பசுபதி  [[உ.வே.சாமிநாதையர்]], [[சி.சுப்ரமணிய பாரதியார்|சி.சுப்ரமணிய பாரதி]]யார், [[கல்கி (எழுத்தாளர்)|கல்கி]], [[தேவன்]] ஆகியோரை  தன்னை மிகவும் பாதித்த முன்னோடிகள் எனக் குறிப்பிடுகிறார். பசுபதியின் முதல் கவிதை 'தமிழணங்கு' 1982-ல் செந்தாமரை என்னும் இதழில் (டொராண்டோ, கனடா) வெளிவந்தது. [[உ.வே.சாமிநாதையர்]], [[சி.சுப்ரமணிய பாரதியார்|சி.சுப்ரமணிய பாரதி]]யார், [[கல்கி (எழுத்தாளர்)|கல்கி]], [[தேவன்]] ஆகியோர் தனக்கு முன்னோடிகளாக உள்ளனர் என்கிறார். யாப்புலகம்<ref>[https://groups.google.ca/group/yAppulagam யாப்புலகம்-இணையக் குழுமம்]</ref>  என்னும் இணையக் குழுமத்திலும் கவிதைகள் எழுதினார்.  
பசுபதி  [[உ.வே.சாமிநாதையர்]], [[சி.சுப்ரமணிய பாரதியார்|சி.சுப்ரமணிய பாரதி]]யார், [[கல்கி (எழுத்தாளர்)|கல்கி]], [[தேவன்]] ஆகியோரை  தன்னை மிகவும் பாதித்த முன்னோடிகள் எனக் குறிப்பிடுகிறார். பசுபதியின் முதல் கவிதை 'தமிழணங்கு' 1982-ல் செந்தாமரை என்னும் இதழில் (டொராண்டோ, கனடா) வெளிவந்தது. [[உ.வே.சாமிநாதையர்]], [[சி.சுப்ரமணிய பாரதியார்|சி.சுப்ரமணிய பாரதி]]யார், [[கல்கி (எழுத்தாளர்)|கல்கி]], [[தேவன்]] ஆகியோர் தனக்கு முன்னோடிகளாக உள்ளனர் என்கிறார். யாப்புலகம்<ref>[https://groups.google.ca/group/yAppulagam யாப்புலகம்-இணையக் குழுமம்]</ref>  என்னும் இணையக் குழுமத்திலும் கவிதைகள் எழுதினார்.  
கனடாவில் பல தமிழ் இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்தினார்.  டொராண்டோவில் 2006-இல் நடந்த திருமுறை மாநாட்டில், 'நாயன்மார்கள்' என்ற தலைப்பில் நடந்த கவியரங்கிற்குத் தலைமை வகித்தார். டொராண்டோ Reference Libraryயின் அழைப்பில், 1987-இல் “பாரதியும் இசையும்” என்ற தலைப்பில் தன் மனைவி, மகள் பாடல்களுடன் உரை (lec-dem) நிகழ்த்தினார்.   
கனடாவில் பல தமிழ் இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்தினார்.  டொராண்டோவில் 2006-இல் நடந்த திருமுறை மாநாட்டில், 'நாயன்மார்கள்' என்ற தலைப்பில் நடந்த கவியரங்கிற்குத் தலைமை வகித்தார். டொராண்டோ Reference Libraryயின் அழைப்பில், 1987-இல் “பாரதியும் இசையும்” என்ற தலைப்பில் தன் மனைவி, மகள் பாடல்களுடன் உரை (lec-dem) நிகழ்த்தினார்.   
மன்ற மையத்தின் (Forumhub) “மையம்” – Hub Magazine என்ற மின்னிதழில் 'கவிதை இயற்றிக் கலக்கு' என்ற தலைப்பில் மாதத்திற்கு ஒன்றாக எழுதிய, 50-க்கு மேற்பட்ட யாப்பிலக்கணக் கட்டுரைகள் 'யாப்புலகம்'  என்ற  வலைத்தளத்தில் படிக்கக் கிடைக்கின்றன.  
மன்ற மையத்தின் (Forumhub) “மையம்” – Hub Magazine என்ற மின்னிதழில் 'கவிதை இயற்றிக் கலக்கு' என்ற தலைப்பில் மாதத்திற்கு ஒன்றாக எழுதிய, 50-க்கு மேற்பட்ட யாப்பிலக்கணக் கட்டுரைகள் 'யாப்புலகம்'  என்ற  வலைத்தளத்தில் படிக்கக் கிடைக்கின்றன.  
'சங்கச் சுரங்கம்' என்ற தலைப்பில் 'திண்ணை', 'இலக்கியவேல்', 'இருவாட்சி' போன்ற  இதழ்களில்  60-க்கு மேற்பட்ட கட்டுரைகள் எழுதினார்.
'சங்கச் சுரங்கம்' என்ற தலைப்பில் 'திண்ணை', 'இலக்கியவேல்', 'இருவாட்சி' போன்ற  இதழ்களில்  60-க்கு மேற்பட்ட கட்டுரைகள் எழுதினார்.
பசுபதி நடத்தும் பசு பதிவுகள்<ref>[https://s-pasupathy.blogspot.com/ பசுபதியின் இணையதளம்-பசுபதிவுகள்]</ref> என்னும் இணையப்பக்கம் இலக்கிய ஆவணங்களின் சேகரிப்பாக விளங்குகிறது. இசை சார்ந்த  கட்டுரைகள் பலராலும் விரும்பிப் படிக்கப்படுகின்றன.  
பசுபதி நடத்தும் பசு பதிவுகள்<ref>[https://s-pasupathy.blogspot.com/ பசுபதியின் இணையதளம்-பசுபதிவுகள்]</ref> என்னும் இணையப்பக்கம் இலக்கிய ஆவணங்களின் சேகரிப்பாக விளங்குகிறது. இசை சார்ந்த  கட்டுரைகள் பலராலும் விரும்பிப் படிக்கப்படுகின்றன.  
==மறைவு==
==மறைவு==
பசுபதி  பிப்ரவரி 12, 2023 அன்று கனடாவில் காலமானார்.
பசுபதி  பிப்ரவரி 12, 2023 அன்று கனடாவில் காலமானார்.
==நூல்கள்==
==நூல்கள்==
*கவிதை இயற்றிக் கலக்கு
*கவிதை இயற்றிக் கலக்கு
Line 30: Line 23:
*[https://kuvikam.com/2023/02/15/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%90%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85/ பசுபதி க்கு அஞ்சலி-குவிகம்]
*[https://kuvikam.com/2023/02/15/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%90%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85/ பசுபதி க்கு அஞ்சலி-குவிகம்]
*[https://solvanam.com/2021/01/10/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87/ பேராசிரியர் சு. பசுபதி நேர்காணல், சொல்வனம் ஜனவர் 2021]
*[https://solvanam.com/2021/01/10/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87/ பேராசிரியர் சு. பசுபதி நேர்காணல், சொல்வனம் ஜனவர் 2021]
==அடிக்குறிப்புகள்==
==அடிக்குறிப்புகள்==
<references />
<references />
{{Finalised}}
{{Finalised}}
[[Category:கல்வியாளர்கள்]]
[[Category:கல்வியாளர்கள்]]
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:பேராசிரியர்கள்]]
[[Category:பேராசிரியர்கள்]]

Revision as of 14:42, 3 July 2023

பசுபதி
சங்கச்சுரங்கம்

சு.பசுபதி (செப்டெம்பர் 21, 1940- பிப்ரவரி 12, 2023) பேராசிரியர், தமிழ் இலக்கிய ஆவணச் சேகரிப்பாளர், கல்வியாளர், இணைய விவாதங்களில் தமிழிலக்கிய வரலாறு குறித்து எழுதியவர்.

பிறப்பு, கல்வி

சு.பசுபதி வாங்கல் எம். சுப்பராயன் - ஜெயலக்ஷ்மி இணையருக்கு செப்டெம்பர் 21, 1940-ல் சென்னையில் பிறந்தார். சென்னை ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி (தியாகராய நகர்)யில் பள்ளிக்கல்வியை முடித்தபின் லயோலா கல்லூரி, விவேகானந்தா கல்லூரி, கிண்டி பொறியியல் கல்லூரியில் தொலைத்தொடர்புத் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1966-ல் சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில்( ஐ.ஐ.டி) முதுகலைப் பட்டப்படிப்பை (MTech) முடித்தார். முதல் மாணவருக்கான பரிசை சர். சி.வி. ராமனிடமிருந்து பெற்றார். அமெரிக்காவின் யேல் (Yale) பல்கலைக்கழகத்தில் தொடர்பியல் பொறியியலில் (Communication Engineering ) , பேராசிரியர் பீட்டர் ஷுல்தாய்ஸ் (Prof.Peter Schultheiss) கீழ் முனைவர்பட்டம் பெற்றார். பள்ளியில் ஆசிரியர்கள் சாம்பமூர்த்தி ஐயர், ஸ்ரீநிவாசாச்சாரியார் ஆகியோரும் ஐ.ஐ.டியில் எம்.கே.அச்சுதன், சம்பத், வி.ஜி.கே.மூர்த்தி ஆகியோர் தனக்கு ஊக்கமளித்த ஆசிரியர்கள் என்று குறிப்பிடுகிறார்.

தனிவாழ்க்கை

பசுபதி 1980-ல் ஜயாவை மணந்தார். ஒரு மகள், வாணி. பசுபதி ஐ.ஐ.டி(சென்னை), யேல் பல்கலைக் கழகம், டொராண்டோ பல்கலைக் கழகம் ( கனடா) ஆகியவற்றில் பணியாற்றினார். டொராண்டோ பல்கலைக் கழகத்தின் தகவுறு பேராசிரியர் (Professor Emeritus) ஆக கௌரவிக்கப்பட்டார்.

இலக்கியவாழ்க்கை

பசுபதி உ.வே.சாமிநாதையர், சி.சுப்ரமணிய பாரதியார், கல்கி, தேவன் ஆகியோரை தன்னை மிகவும் பாதித்த முன்னோடிகள் எனக் குறிப்பிடுகிறார். பசுபதியின் முதல் கவிதை 'தமிழணங்கு' 1982-ல் செந்தாமரை என்னும் இதழில் (டொராண்டோ, கனடா) வெளிவந்தது. உ.வே.சாமிநாதையர், சி.சுப்ரமணிய பாரதியார், கல்கி, தேவன் ஆகியோர் தனக்கு முன்னோடிகளாக உள்ளனர் என்கிறார். யாப்புலகம்[1] என்னும் இணையக் குழுமத்திலும் கவிதைகள் எழுதினார். கனடாவில் பல தமிழ் இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்தினார். டொராண்டோவில் 2006-இல் நடந்த திருமுறை மாநாட்டில், 'நாயன்மார்கள்' என்ற தலைப்பில் நடந்த கவியரங்கிற்குத் தலைமை வகித்தார். டொராண்டோ Reference Libraryயின் அழைப்பில், 1987-இல் “பாரதியும் இசையும்” என்ற தலைப்பில் தன் மனைவி, மகள் பாடல்களுடன் உரை (lec-dem) நிகழ்த்தினார். மன்ற மையத்தின் (Forumhub) “மையம்” – Hub Magazine என்ற மின்னிதழில் 'கவிதை இயற்றிக் கலக்கு' என்ற தலைப்பில் மாதத்திற்கு ஒன்றாக எழுதிய, 50-க்கு மேற்பட்ட யாப்பிலக்கணக் கட்டுரைகள் 'யாப்புலகம்' என்ற வலைத்தளத்தில் படிக்கக் கிடைக்கின்றன. 'சங்கச் சுரங்கம்' என்ற தலைப்பில் 'திண்ணை', 'இலக்கியவேல்', 'இருவாட்சி' போன்ற இதழ்களில் 60-க்கு மேற்பட்ட கட்டுரைகள் எழுதினார். பசுபதி நடத்தும் பசு பதிவுகள்[2] என்னும் இணையப்பக்கம் இலக்கிய ஆவணங்களின் சேகரிப்பாக விளங்குகிறது. இசை சார்ந்த கட்டுரைகள் பலராலும் விரும்பிப் படிக்கப்படுகின்றன.

மறைவு

பசுபதி பிப்ரவரி 12, 2023 அன்று கனடாவில் காலமானார்.

நூல்கள்

  • கவிதை இயற்றிக் கலக்கு
  • சங்கச் சுரங்கம் – மூன்று பகுதிகள்
  • சொல்லயில்

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page