being created

கோபாலசாமி ரகுநாத ராஜாளியார்: Difference between revisions

From Tamil Wiki
mNo edit summary
mNo edit summary
Line 13: Line 13:
இவர் தமிழ், ஆங்கிலம், வடமொழி ஆகிய மொழிகளை அறிந்தவர். மருத்துவ அறிவு, இசையறிவு, சமய அறிவும்  பெற்றவர்.   
இவர் தமிழ், ஆங்கிலம், வடமொழி ஆகிய மொழிகளை அறிந்தவர். மருத்துவ அறிவு, இசையறிவு, சமய அறிவும்  பெற்றவர்.   


== பொதுவாழ்க்கை ==
== பொது வாழ்க்கை ==
இவர் ஹரித்துவாரமங்கலத்தில் சித்த மருத்துவமனையையும் பள்ளிக்கூடத்தையும் நிறுனார். ஏழை, எளிய மக்களுக்கள் இவற்றை இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ள வழிவகை செய்தார்.
இவர் ஹரித்துவாரமங்கலத்தில் சித்த மருத்துவமனையையும் பள்ளிக்கூடத்தையும் நிறுனார். ஏழை, எளிய மக்களுக்கள் இவற்றை இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ள வழிவகை செய்தார்.


Line 21: Line 21:


வைணவ பக்தரான இவர் ஹரித்துவாரமங்கலம் பெருமாள் கோவிலுக்குக் கோபுரம் எடுத்தவர். சமய வேறுபாடு கருதாமல் சிவன் கோவிலுக்கும் திருப்பணிகள் செய்தவர்.   
வைணவ பக்தரான இவர் ஹரித்துவாரமங்கலம் பெருமாள் கோவிலுக்குக் கோபுரம் எடுத்தவர். சமய வேறுபாடு கருதாமல் சிவன் கோவிலுக்கும் திருப்பணிகள் செய்தவர்.   
‘கருணாமிர்த சாகரம்’ இயற்றிய ஆபிரகாம் பண்டிதர் இசைத்தமிழ் வளர்ச்சிக்காக 1912இல் ஏற்படுத்திய ‘தஞ்சை சங்கீத வித்தியா மகாஜன சங்க’த்தின் வளர்ச்சிக்குக் கோபால்சாமி ரகுநாத ராஜாளியார் உறுதுணையாக இருந்துள்ளார். 
தமிழறிஞர்களையும் குறிப்பாகத் தொல்காப்பிய ஆய்வாளர்களுக்கும் புரவலராக இருந்துள்ளார். இவரிடமிருந்து பல்வேறு வகைகளில் உதவிகளைப் பெற்றவர்கள் தாங்கள் பதிப்பித்த, எழுதிய நூல்களில் அவற்றைக் குறிப்பிட்டுள்ளனர். அந்த வகையில் அரசஞ் சண்முகனார், பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், உ.வே.சாமிநாதையர், விஞ்சைராயர், சர்க்கரை இராமசாமி புலவர், அருணாசலக் கவிராயர், கோபாலகிருஷ்ணன், சேதுராம பாரதியார், தூத்துக்குடி முத்தையா பிள்ளை, சாமிநாதப் பிள்ளை, வேங்கடேசப் பிள்ளை, முத்துசாமி ஐயர், நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார், கந்தசாமிப் பிள்ளை, பரிதிமாற் கலைஞர், இராகவ ஐயங்கார் முதலானோர் அடங்குவர். 
இலக்கியப் பணி 
     






<nowiki>[[Category:Tamil Content]]</nowiki>
<nowiki>[[Category:Tamil Content]]</nowiki>

Revision as of 05:52, 12 February 2022


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.

கோபாலசாமி ரகுநாத ராஜாளியார்

கோபாலசாமி ரகுநாத ராஜாளியார் (டிசம்பர் 01, 1870 - ஏப்ரல் 06, 1920) பழந்தமிழ் நூல்களையும் தொல்காப்பிய ஆய்வாளர்களையும் பேணிய புரவலர், சமூக சேவகர்.

வாழ்க்கைக் குறிப்பு

பிறப்பு

தஞ்சாவூருக்கு அருகில் உள்ள ஹரித்துவாரமங்கலத்தில் வாசுதேவ ராஜாளியார் - ஆயி அம்மாள் தம்பதியருக்குக் கோபால்சாமி ரகுநாத ராஜாளியார் டிசம்பர் 01, 1870இல் பிறந்தார்.

கல்வி

பச்சைக்கோட்டையில் விஞ்சிராயரிடம் எட்டு ஆண்டுகள் குருகுலக் கல்வியைப் பயின்றார். மெட்ரிகுலேசன் படிப்பைக் கும்பகோணத்தில் முடித்தார். தஞ்சை எஸ்.பி.ஜி. கல்லூரியில் சேர்ந்து சிலகாலம் படித்தார்.

இவர் தமிழ், ஆங்கிலம், வடமொழி ஆகிய மொழிகளை அறிந்தவர். மருத்துவ அறிவு, இசையறிவு, சமய அறிவும் பெற்றவர்.

பொது வாழ்க்கை

இவர் ஹரித்துவாரமங்கலத்தில் சித்த மருத்துவமனையையும் பள்ளிக்கூடத்தையும் நிறுனார். ஏழை, எளிய மக்களுக்கள் இவற்றை இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ள வழிவகை செய்தார்.

‘குற்றப்பரம்பரை’ சட்டத்தை நீக்க வேண்டும் என்பதற்காக டெல்லி சென்று அங்கு நடைபெற்ற முடிசூட்டு விழாவில் கலந்துகொண்ட ஐந்தாம் ஜார்ஜ் மன்னரிடமும் ராணியாரிடத்தும் கோரிக்கை வைத்தார். தஞ்சைப் பகுதி ஈசநாட்டுக் கள்ளர்களை இந்தச் சட்டத்திலிருந்து காத்தார்.

தன்னுடைய வீட்டில் அரிய பழந்தமிழ் ஏட்டுச்சுவடிகளைச் சேமித்துப் பாதுகாத்தார். திருவாவடுதுறை ஆதீனம் இவரின் வீட்டுக்கு வந்து, இவரின் நூலகத்தைக் கண்டு வியந்து, அதற்கு ‘சரசுவதி மகால்’ என்று பெயரிட்டு, திருமடத்தின் சார்பில் பச்சைக்கல் மாலையைப் பரிசளித்தார்.

வைணவ பக்தரான இவர் ஹரித்துவாரமங்கலம் பெருமாள் கோவிலுக்குக் கோபுரம் எடுத்தவர். சமய வேறுபாடு கருதாமல் சிவன் கோவிலுக்கும் திருப்பணிகள் செய்தவர்.

‘கருணாமிர்த சாகரம்’ இயற்றிய ஆபிரகாம் பண்டிதர் இசைத்தமிழ் வளர்ச்சிக்காக 1912இல் ஏற்படுத்திய ‘தஞ்சை சங்கீத வித்தியா மகாஜன சங்க’த்தின் வளர்ச்சிக்குக் கோபால்சாமி ரகுநாத ராஜாளியார் உறுதுணையாக இருந்துள்ளார்.

தமிழறிஞர்களையும் குறிப்பாகத் தொல்காப்பிய ஆய்வாளர்களுக்கும் புரவலராக இருந்துள்ளார். இவரிடமிருந்து பல்வேறு வகைகளில் உதவிகளைப் பெற்றவர்கள் தாங்கள் பதிப்பித்த, எழுதிய நூல்களில் அவற்றைக் குறிப்பிட்டுள்ளனர். அந்த வகையில் அரசஞ் சண்முகனார், பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், உ.வே.சாமிநாதையர், விஞ்சைராயர், சர்க்கரை இராமசாமி புலவர், அருணாசலக் கவிராயர், கோபாலகிருஷ்ணன், சேதுராம பாரதியார், தூத்துக்குடி முத்தையா பிள்ளை, சாமிநாதப் பிள்ளை, வேங்கடேசப் பிள்ளை, முத்துசாமி ஐயர், நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார், கந்தசாமிப் பிள்ளை, பரிதிமாற் கலைஞர், இராகவ ஐயங்கார் முதலானோர் அடங்குவர்.

இலக்கியப் பணி



[[Category:Tamil Content]]