செருக்களவஞ்சி: Difference between revisions
(Created page with "'''செருக்களவஞ்சி''' என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும், வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்றாகும். ''செருக்களம்'' என்பது போர்க்கள...") |
(Adding category சிற்றிலக்கிய வகைகள் to bot entries) |
||
Line 13: | Line 13: | ||
* [[பாட்டியல்]] | * [[பாட்டியல்]] | ||
[[ | [[Category:சிற்றிலக்கிய வகைகள்]] | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
{{being created}} | {{being created}} |
Revision as of 22:09, 10 February 2022
செருக்களவஞ்சி என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும், வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்றாகும். செருக்களம் என்பது போர்க்களம் என்னும் பொருள் உடையது. போர்க்களத்தில் நிகழும் கொடூரங்களை ஆசிரியப் பாவினாலும், வஞ்சிப்பாவினாலும் கூறும்படி அமைந்ததே செருக்களவஞ்சி ஆகும். [1].
போரில் அறுபட்டு வீழ்ந்த மனிதர், குதிரைகள், யானைகள் முதலானவற்றின் உடலங்களிலிருந்து, தசையையும், இரத்தத்தையும், பேய், பிசாசுகளும், கழுகு, நாய், காகம் முதலானவையும் எமது எமது என்று தின்று ஆரவாரம் செய்யும். பூதங்கள் இசைபாடி ஆடிக் களிக்கும் என்று செருக்களவஞ்சியில் கூறப்படுவன பற்றிப் பிரபந்த தீபிகை என்னும் பாட்டியல் நூல் விளக்குகிறது.
குறிப்புகள்
- ↑ இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 869
உசாத்துணைகள்
- நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்
- கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், திருவையாறு.
- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம் Template:Webarchive
இவற்றையும் பார்க்கவும்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.