ஐ. கிருத்திகா: Difference between revisions

From Tamil Wiki
Line 1: Line 1:
[[File:ஐ. கிருத்திகா.jpg|thumb|ஐ. கிருத்திகா (நன்றி: காமதேனு)]]
[[File:ஐ. கிருத்திகா.jpg|thumb|ஐ. கிருத்திகா (நன்றி: காமதேனு)]]
ஐ. கிருத்திகா (பிறப்பு: நவம்பர் 8, 1976) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர்.  
ஐ. கிருத்திகா (பிறப்பு: நவம்பர் 8, 1976) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர்.  
== வாழ்க்கைக் குறிப்பு ==
== பிறப்பு, கல்வி ==
ஐ. கிருத்திகா திருவாரூர் மாவட்டம் மணக்கால் அய்யம்பேட்டை கிராமத்தில் சோ.பாலு, பா.துர்க்கா இணையருக்கு நவம்பர் 8, 1976-ல் பிறந்தார். குளிக்கரை மற்றும் மணக்காலில் ஆரம்பக்கல்வி பயின்றார். திருவாரூர் அரங்கநாத முதலியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்புவரை பயின்றார். நாகை ஏ.டி.ஜெ. தர்மாம்பாள் பெண்கள் பாலிடெக்னிக்கில் பட்டயக்கல்வி பயின்றார்.
ஐ. கிருத்திகா திருவாரூர் மாவட்டம் மணக்கால் அய்யம்பேட்டை கிராமத்தில் சோ.பாலு, பா.துர்க்கா இணையருக்கு நவம்பர் 8, 1976-ல் பிறந்தார். குளிக்கரை மற்றும் மணக்காலில் ஆரம்பக்கல்வி பயின்றார். திருவாரூர் அரங்கநாத முதலியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்புவரை பயின்றார். நாகை ஏ.டி.ஜெ. தர்மாம்பாள் பெண்கள் பாலிடெக்னிக்கில் பட்டயக்கல்வி பயின்றார்.
== தனிவாழ்க்கை ==
== தனிவாழ்க்கை ==
ஐ. கிருத்திகா சீர்காழியைச் சேர்ந்த சோ. ஐயப்பவாசனை மார்ச் 15, 2000-ல் மணந்தார். மகள் மானஸா, மகன் ஸ்ரீமன். கோவையில் வசிக்கிறார்.
ஐ. கிருத்திகா சீர்காழியைச் சேர்ந்த சோ. ஐயப்பவாசனை மார்ச் 15, 2000-ல் மணந்தார். மகள் மானஸா, மகன் ஸ்ரீமன். கோவையில் வசிக்கிறார்.

Revision as of 12:02, 25 December 2022

ஐ. கிருத்திகா (நன்றி: காமதேனு)

ஐ. கிருத்திகா (பிறப்பு: நவம்பர் 8, 1976) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர்.

பிறப்பு, கல்வி

ஐ. கிருத்திகா திருவாரூர் மாவட்டம் மணக்கால் அய்யம்பேட்டை கிராமத்தில் சோ.பாலு, பா.துர்க்கா இணையருக்கு நவம்பர் 8, 1976-ல் பிறந்தார். குளிக்கரை மற்றும் மணக்காலில் ஆரம்பக்கல்வி பயின்றார். திருவாரூர் அரங்கநாத முதலியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்புவரை பயின்றார். நாகை ஏ.டி.ஜெ. தர்மாம்பாள் பெண்கள் பாலிடெக்னிக்கில் பட்டயக்கல்வி பயின்றார்.

தனிவாழ்க்கை

ஐ. கிருத்திகா சீர்காழியைச் சேர்ந்த சோ. ஐயப்பவாசனை மார்ச் 15, 2000-ல் மணந்தார். மகள் மானஸா, மகன் ஸ்ரீமன். கோவையில் வசிக்கிறார்.

இலக்கிய வாழ்க்கை

ஐ. கிருத்திகா 1998 முதல் பல்வேறு வணிக, சிற்றிதழ்களில் சிறுகதைகள் எழுதிவருகிறார். அனிச்சமலர் முதல் சிறுகதை. முதல் நூல் ’உப்புச்சுமை’ சிறுகதைத்தொகுப்பு.

இலக்கிய இடம்

“பெரும்பாலும் மண்ணின் மகத்துவம் பேசும் கதைகள். ஈர நெஞ்சின் ஏக்கங்கள் துளிர்க்கும் கதைகள்.” என எழுத்தாளர் திலகவதி மதிப்பிடுகிறார்.

விருதுகள்

  • கோவை ஞானி நடத்திய பெண் எழுத்தாளர்கள் சிறுகதைப்போட்டியில் பரிசு பெற்றார்.
  • இலக்கியப்பீடம் சிறுகதைப்போட்டி (இரண்டாம் பரிசு)
  • க.சீ. சிவக்குமார் நினைவுச்சிறுகதைப்போட்டி (முதல் பரிசு)

நூல்கள்

  • உப்புச்சுமை (தேநீர் பதிப்பகம்) (2020)
  • நாய்சார் (zero degree publishing) (2021)
  • திமிரி (எதிர் வெளியீடு) (2021)
  • கற்றாழை (காலச்சுவடு)

உசாத்துணை