கோவிலடி ரங்கநாத பெருமாள் ஆலயம்: Difference between revisions

From Tamil Wiki
Line 3: Line 3:
== இடம் ==
== இடம் ==
தஞ்சாவூர் அருகே திருக்காட்டுப்பள்ளியை ஒட்டி கோயிலடி என்னும் சிற்றூரில் அமைந்துள்ளது.
தஞ்சாவூர் அருகே திருக்காட்டுப்பள்ளியை ஒட்டி கோயிலடி என்னும் சிற்றூரில் அமைந்துள்ளது.
== தெய்வங்கள் ==
== தெய்வங்கள் ==
* மூலவர்: அப்பால ரெங்கநாதர் (அப்பக் குடத்தான்).  
* மூலவர்: அப்பால ரெங்கநாதர் (அப்பக் குடத்தான்).  
* தாயார் : ஸ்ரீமத் கமலவல்லி தாயார், இந்திரா தேவி.
* தாயார் : ஸ்ரீமத் கமலவல்லி தாயார், இந்திரா தேவி.
* பிறதெய்வங்கள்: விநாயகர், நம்மாழ்வார், ராமானுஜர், ஆழ்வார்கள், கருடன், வேணுகோபாலன், விஷ்வக்சேனர்.
* பிறதெய்வங்கள்: விநாயகர், நம்மாழ்வார், ராமானுஜர், ஆழ்வார்கள், கருடன், வேணுகோபாலன், விஷ்வக்சேனர்.
* தீர்த்தம் : இந்திர புஷ்கரிணி.
* தீர்த்தம் : இந்திர புஷ்கரிணி.
== தொன்மம் ==
திருமகள் குடிகொண்ட இடம்
நிலமகள் திருமகளை விட உயர்ந்தவள் என பெருமாள் சொன்னமையால் திருமகள் சீற்றம் கொண்டு இங்கே வந்து தவமிருந்தார் என்றும், பெருமாள் தோன்றி திருமகளை ஆறுதல்படுத்தி தன் மார்பில் அணிந்துகொண்டார் என்றும் தொன்மம் சொல்கிறது
உபரிசிரவசு தவம் செய்த இடம்
புராணகால மன்னனாகிய உபரிசிரவசு  கௌதமமுனிவரின் குடிலுக்குள் நுழைய முயன்ற மதம்கொண்ட யானையை அம்பால் தாக்க அந்த யானை ஒரு பிராமணரை கொன்றது. அந்த அந்தணக்கொலை (பிரம்மஹத்தி) பழி நீங்க உபரிசிரவசு இந்த தலத்திற்கு வந்து வேள்விகள் செய்தார். அந்தணர்களுக்கு அவர் அன்னக்கொடை செய்தபோது ஓர் அந்தணர் வந்து அனைத்து உணவையும் உண்டார். அந்த அந்தணர் பெருமாளே என தெரியவந்தது. அப்பத்தை விரும்பி உண்டமையால் அப்பக்குடத்தான் என பெருமாள் அழைக்கப்பட்டார்
நம்மாழ்வார் 


== தொன்மம் ==
நம்மாழ்வார் இத்தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமாளை கடைசியாக மங்களாசாசனம்  செய்துவிட்டு இங்கேயே வீடுபேறடைந்தார் என்று நம்பப்படுகிறது.
நம்மாழ்வார் இத்தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமாளை கடைசியாக மங்களாசாசனம்  செய்துவிட்டு இங்கேயே வீடுபேறடைந்தார் என்று நம்பப்படுகிறது.
== வரலாறு ==
== வரலாறு ==
இந்த ஆலயம் இருக்கும் கோவிலடி ஊரின் பழைய பெயர் திருப்பேர் நகர். காவேரிக்கரையில் விஷ்ணு பள்ளி கொண்டிருக்கும் [[பஞ்சரங்கம்|பஞ்சரங்க]] தலங்களில் ஒன்று.அப்பாலரங்கம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆலயத்தை நான்கு ஆழ்வார்கள் [[மங்களாசாசனம்]] செய்துள்ளனர்.  
இந்த ஆலயம் இருக்கும் கோவிலடி ஊரின் பழைய பெயர் திருப்பேர் நகர். சம்ஸ்கிருதத்தில் ஸ்ரீநகரம் ஸ்ரீபுரம் என்னும் பெயர்கள் உண்டு. காவேரிக்கரையில் விஷ்ணு பள்ளி கொண்டிருக்கும் [[பஞ்சரங்கம்|பஞ்சரங்க]] தலங்களில் ஒன்று.அப்பாலரங்கம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆலயத்தை நான்கு ஆழ்வார்கள் [[மங்களாசாசனம்]] செய்துள்ளனர்.  
 
ஆலய அமைப்பு


== ஆலய அமைப்பு ==
ஆலயக் கருவறையில் ரங்கநாதர் புஜங்க  சயனத்தில் (ஒருக்களித்து படுத்த கோலத்தில்) மேற்கு நோக்கிக் காட்சியளிக்கிறார். பெருமாளின் மார்பில் ஸ்ரீதேவி பொறிக்கப்பட்டிருக்கிறாள். அருகில் மார்க்கண்டேய  மகரிஷி அமர்ந்திருகிறார். பெருமாள் அப்பக் குடத்தைப் பற்றியபடி காட்சி தருகிறார். வெளியே தனிச் சந்திதியில் கமலவல்லித்தாயார் கிழக்கு நோக்கி கோயில்கொண்டிருக்கிறார்.  உட்பிரகாரத்தில்  விநாயகர், நம்மாழ்வார், ராமானுஜர், ஆழ்வார்கள், கருடன், வேணுகோபாலன், விஷ்வக்சேனர்  ஆகியோர் இருக்கிறார்கள்  
ஆலயக் கருவறையில் ரங்கநாதர் புஜங்க  சயனத்தில் (ஒருக்களித்து படுத்த கோலத்தில்) மேற்கு நோக்கிக் காட்சியளிக்கிறார். பெருமாளின் மார்பில் ஸ்ரீதேவி பொறிக்கப்பட்டிருக்கிறாள். அருகில் மார்க்கண்டேய  மகரிஷி அமர்ந்திருகிறார். பெருமாள் அப்பக் குடத்தைப் பற்றியபடி காட்சி தருகிறார். வெளியே தனிச் சந்திதியில் கமலவல்லித்தாயார் கிழக்கு நோக்கி கோயில்கொண்டிருக்கிறார்.  உட்பிரகாரத்தில்  விநாயகர், நம்மாழ்வார், ராமானுஜர், ஆழ்வார்கள், கருடன், வேணுகோபாலன், விஷ்வக்சேனர்  ஆகியோர் இருக்கிறார்கள்  
இக்கோயிலுக்கு சோழ, பல்லவ மன்னர்களும், அதன்  பின்பு விஜயநகர மன்னர்களும் திருப்பணி செய்திருக்கிறார்கள்.  
இக்கோயிலுக்கு சோழ, பல்லவ மன்னர்களும், அதன்  பின்பு விஜயநகர மன்னர்களும் திருப்பணி செய்திருக்கிறார்கள்.  
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
[http://www.findmytemple.com/ta/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/t5-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D,-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF அப்பக்குடத்தான் ஆலயம். வரலாறு]
[http://www.findmytemple.com/ta/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/t5-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D,-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF அப்பக்குடத்தான் ஆலயம். வரலாறு]

Revision as of 13:05, 24 December 2022

அப்பாள ரங்கநாதர் கோயில்

கோவிலடி ரங்கநாதப் பெருமாள் ஆலயம் ( ) (கோயிலடி அப்பாள ரங்கநாதர் ஆலயம். அப்பால ரங்கநாதர் கோயில்) தஞ்சை மாவட்டத்தில் அமைந்த விஷ்ணு ஆலயம். ஆழ்வார்களின் பாடல்பெற்ற நூற்றெட்டு திவ்யதேசங்களுள் எட்டாவது ஆலயம். சோழநாட்டின் ஆறாவது திருத்தலம்.

இடம்

தஞ்சாவூர் அருகே திருக்காட்டுப்பள்ளியை ஒட்டி கோயிலடி என்னும் சிற்றூரில் அமைந்துள்ளது.

தெய்வங்கள்

  • மூலவர்: அப்பால ரெங்கநாதர் (அப்பக் குடத்தான்).
  • தாயார் : ஸ்ரீமத் கமலவல்லி தாயார், இந்திரா தேவி.
  • பிறதெய்வங்கள்: விநாயகர், நம்மாழ்வார், ராமானுஜர், ஆழ்வார்கள், கருடன், வேணுகோபாலன், விஷ்வக்சேனர்.
  • தீர்த்தம் : இந்திர புஷ்கரிணி.

தொன்மம்

திருமகள் குடிகொண்ட இடம்

நிலமகள் திருமகளை விட உயர்ந்தவள் என பெருமாள் சொன்னமையால் திருமகள் சீற்றம் கொண்டு இங்கே வந்து தவமிருந்தார் என்றும், பெருமாள் தோன்றி திருமகளை ஆறுதல்படுத்தி தன் மார்பில் அணிந்துகொண்டார் என்றும் தொன்மம் சொல்கிறது

உபரிசிரவசு தவம் செய்த இடம்

புராணகால மன்னனாகிய உபரிசிரவசு கௌதமமுனிவரின் குடிலுக்குள் நுழைய முயன்ற மதம்கொண்ட யானையை அம்பால் தாக்க அந்த யானை ஒரு பிராமணரை கொன்றது. அந்த அந்தணக்கொலை (பிரம்மஹத்தி) பழி நீங்க உபரிசிரவசு இந்த தலத்திற்கு வந்து வேள்விகள் செய்தார். அந்தணர்களுக்கு அவர் அன்னக்கொடை செய்தபோது ஓர் அந்தணர் வந்து அனைத்து உணவையும் உண்டார். அந்த அந்தணர் பெருமாளே என தெரியவந்தது. அப்பத்தை விரும்பி உண்டமையால் அப்பக்குடத்தான் என பெருமாள் அழைக்கப்பட்டார்

நம்மாழ்வார்

நம்மாழ்வார் இத்தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமாளை கடைசியாக மங்களாசாசனம்  செய்துவிட்டு இங்கேயே வீடுபேறடைந்தார் என்று நம்பப்படுகிறது.

வரலாறு

இந்த ஆலயம் இருக்கும் கோவிலடி ஊரின் பழைய பெயர் திருப்பேர் நகர். சம்ஸ்கிருதத்தில் ஸ்ரீநகரம் ஸ்ரீபுரம் என்னும் பெயர்கள் உண்டு. காவேரிக்கரையில் விஷ்ணு பள்ளி கொண்டிருக்கும் பஞ்சரங்க தலங்களில் ஒன்று.அப்பாலரங்கம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆலயத்தை நான்கு ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

ஆலய அமைப்பு

ஆலயக் கருவறையில் ரங்கநாதர் புஜங்க  சயனத்தில் (ஒருக்களித்து படுத்த கோலத்தில்) மேற்கு நோக்கிக் காட்சியளிக்கிறார். பெருமாளின் மார்பில் ஸ்ரீதேவி பொறிக்கப்பட்டிருக்கிறாள். அருகில் மார்க்கண்டேய  மகரிஷி அமர்ந்திருகிறார். பெருமாள் அப்பக் குடத்தைப் பற்றியபடி காட்சி தருகிறார். வெளியே தனிச் சந்திதியில் கமலவல்லித்தாயார் கிழக்கு நோக்கி கோயில்கொண்டிருக்கிறார்.  உட்பிரகாரத்தில்  விநாயகர், நம்மாழ்வார், ராமானுஜர், ஆழ்வார்கள், கருடன், வேணுகோபாலன், விஷ்வக்சேனர்  ஆகியோர் இருக்கிறார்கள் இக்கோயிலுக்கு சோழ, பல்லவ மன்னர்களும், அதன்  பின்பு விஜயநகர மன்னர்களும் திருப்பணி செய்திருக்கிறார்கள்.

உசாத்துணை

அப்பக்குடத்தான் ஆலயம். வரலாறு