மௌனம் (இதழ்): Difference between revisions
No edit summary |
(Moved categories to bottom of article) |
||
Line 36: | Line 36: | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* மௌனம் இதழ்கள் | * மௌனம் இதழ்கள் | ||
{{Finalised}} | |||
[[Category:மலேசிய இதழ்கள்]] | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Revision as of 15:39, 29 December 2022
மௌனம் (2009-2013) மலேசிய இலக்கியச் சிற்றிதழ். கவிஞர் ஏ. தேவராஜன் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட சிற்றிதழ் முயற்சி. 'நினைத்த நேரம் வெளிவரும் இதழ்' எனும் அடைமொழியுடன் குறிப்பிட்ட கால வரையறைக்குள் அடங்காமல் இந்த இதழ் வெளிவந்தது. இவ்விதழ் நவீன கவிதைகளைப் பிரசுரிக்கவும், கவிதைகள் குறித்த உரையாடல்களை உருவாக்கும் நோக்கிலும் வெளிவந்தது. கவிஞர் ஏ. தேவராஜனே தனி ஒருவராக இவ்விதழ் முயற்சியை முன்னெடுத்தார்.
பின்னணி
ஏ. தேவராஜன் நவீன கவிதைக்கான வலுவான களத்தை உருவாக்க 'மௌனம்' இதழைத் ஜனவரி 2009-ல் தொடங்கினார். மொத்தம் பதினேழு இதழ்கள் வெளிவந்துள்ளன. ஒவ்வொரு இதழுக்கும் 100 பிரதிகள் அச்சிடப்பட்டன. மௌனம் இதழில் கவிதைகள், கவிதை விவாதங்கள், விமர்சனங்கள், கவிஞர்களுடனான நேர்காணல்கள் வெளிவந்துள்ளன.
ஏ. தேவராஜன் இரண்டு முறை 'மௌனம்' கலந்துரையாடல்களை முன்னெடுத்தார். இந்த உரையாடல்களில் சிறந்த மூன்று கவிதைகளுக்குப் பரிசுகள் வழங்கினார். முதல் உரையாடல் ஜூன் 11, 2011-லும் இரண்டாம் உரையாடல் 2012-லும் நடந்தது.
சிறப்பிதழ்
மௌனம் நான்கு சிறப்பிதழ்களை வெளியிட்டுள்ளது:
- ஆகஸ்ட் 2009 - எழுத்தாளர் தினச் சிறப்பிதழ்
- செப்டம்பர் 2010 - கோ. புண்ணியவான் சிறப்பிதழ்
- ஜூன் 2011 - சை. பீர்முகம்மது சிறப்பிதழ்
- மார்ச் 2013 - பா.அ. சிவம் அஞ்சலி சிறப்பிதழ்
மௌனம் இதழ் பட்டியல்
- முதல் இதழ் - ஜனவரி 2009
- இரண்டாம் இதழ் - பிப்பரவரி 2009
- மூன்றாம் இதழ் – மார்ச் 2009
- நான்காம் இதழ் – ஏப்ரல் 2009
- ஐந்தாம் இதழ் – மே 2009
- ஆறாம் இதழ் – ஆகஸ்ட் 2009
- ஏழாம் இதழ் – அக்டோபர் 2009
- எட்டாம் இதழ் – ஜனவரி 2010
- ஒன்பதாம் இதழ் – ஏப்ரல் 2010
- பத்தாம் இதழ் – ஜூன் 2010
- பதினொன்றாம் இதழ் – செப்டம்பர் 2010
- பனிரெண்டாம் இதழ் – ஜனவரி 2011
- பதிமூன்றாம் இதழ் – ஜூன் 2011
- பதிநான்காம் இதழ் – டிசம்பர் 2011
- பதினைந்தாம் இதழ் – ஜனவரி 2012
- பதினாராம் இதழ் – ஜூலை 2012
- பதினேழாம் இதழ் - மார்ச் 2013
நிறுத்தம்
மௌனம் சிறப்பிதழ் மலேசிய நவீன கவிஞர்களிடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளாலும், மிகக் குறைந்த வாசக வரவேற்பினாலும், எழுத்தாளர்களிடமிருந்து கிடைத்த குறைவான படைப்புகளாலும் நிறூத்தப்பட்டது. மௌனம் இதழில் வெளிவந்த கவிதைகளை ஒட்டிய விமர்சனங்கள் மௌனம் இதழில் வெளிவராமல் வேறு தளங்களில் வெளி வந்தது மௌனம் இதழின் முதன்மை நோக்கத்திற்கு முரணாக இருந்ததால் ஏ. தேவராஜன் இவ்விதழ் முயற்சியை நிறுத்தினார்.
உசாத்துணை
- மௌனம் இதழ்கள்
✅Finalised Page