சு. சிவபாத சுந்தரம்: Difference between revisions
Tamizhkalai (talk | contribs) No edit summary |
|||
Line 2: | Line 2: | ||
சு. சிவபாத சுந்தரம் (ஜனவரி 1, 1878 - ஆகஸ்ட் 14,1953) ஈழத்து தமிழ் சைவப் புலவர், ஆசிரியர். சமயக்கல்வி கட்டாயப்பாடமாகுவதற்கு காரணமானவர்களுள் முக்கியமானவர். | சு. சிவபாத சுந்தரம் (ஜனவரி 1, 1878 - ஆகஸ்ட் 14,1953) ஈழத்து தமிழ் சைவப் புலவர், ஆசிரியர். சமயக்கல்வி கட்டாயப்பாடமாகுவதற்கு காரணமானவர்களுள் முக்கியமானவர். | ||
== வாழ்க்கைக் குறிப்பு == | == வாழ்க்கைக் குறிப்பு == | ||
சிவபாத சுந்தரம் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சார்ந்த புலோலியூரில் | சிவபாத சுந்தரம் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சார்ந்த புலோலியூரில் 1878-ல் சுப்பிரமணியபிள்ளை, வள்ளியம்மை இணையருக்கு மகனாக ஜனவரி 1, 1878-ல் பிறந்தார். வ. குமாரசுவாமிப் புலவர், வ. கணபதிப் பிள்ளை, பார்வதி அம்மையார் ஆகியோரிடம் தமிழும் சமஸ்கிருதமும் கற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் எப்.ஏ பட்டம் பெற்றார். திருச்சிராப்பள்ளி செயிண்ட் ஜோசஃப் கல்லூரியில் கற்று கலைமாணித்தேர்வில் தேர்ச்சி பெற்றார். கணிதம், தர்க்கம் ஆகியவற்றில் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றார். | ||
== கல்விப்பணி == | == கல்விப்பணி == | ||
சிவபாத சுந்தரம் 1924 முதல் ஒன்பது | சிவபாத சுந்தரம் 1924 முதல் ஒன்பது ஆண்டுகள் யாழ்ப்பாணம், சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி அதிபராகப் பணியாற்றினர். 1939-ஆம் ஆண்டிலே இலங்கைக் கல்வி முறையினைத் திருத்தியமைப்பதற்காக நிறுவப்பட்ட ஆணைக் குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். ஓய்வுக்குப்பின் பரமேஸ்வரா கல்லூரியின் மேற்பார்வையாளராக இருந்தார். | ||
== ஆன்மிகப்பணி == | == ஆன்மிகப்பணி == | ||
சிவபாத சுந்தரம் வார்க்கடைச்சுவாமி, ஆறுமுக நாவலர், சிவசம்புப்புலவர் ஆகியோரிடம் தொடர்பில் இருந்தார். சிலகாலம் | சிவபாத சுந்தரம் வார்க்கடைச்சுவாமி, [[ஆறுமுக நாவலர்]], [[சிவசம்புப்புலவர்]] ஆகியோரிடம் தொடர்பில் இருந்தார். சிலகாலம் 'கந்தவனம்’ என்னும் முருகன் கோயிலுக்கு அருகில் ஒரு திருமடத்தினை நிறுவி அங்கு வாழ்ந்தார். அங்கே, சித்தாந்த சாத்திரமும் புராணமும் பாடங் கேட்கச் சென்ற மாணவர்களுக்குக் கற்பித்தார். திருக்கேதீச்சரக் கோயில் திருப்பணியில் ஊக்கமுடையவராய் உழைத்து, அதற்கென அமைக்கப்பட்ட சபையின் தலைவராக பணியாற்றினார். 1921-ல் [[சேர்.பொன். இராமநாதன்|சேர்.பொன் இராமநாதன்]] அவர்களால் உருவாக்கப்பட்ட பரமேஸ்வராக் கல்லூரியின் தலைமையாசிரியராக சிவபாத சுந்தரம் இருந்தார். தமிழகத்தில் பிட்சாண்டர் கோயில் பெருநிலக்கிழார் ராசகோபாலபிள்ளையின் ஆனந்தவிலாசம் மாளிகையில் தங்கி சிவஞானசித்தியார் பாடம் நடத்தினார். சிதம்பரத்தில் தங்கியிருந்தபோது சைவப் பிரசங்கங்கள் செய்தார். | ||
== இலக்கிய வாழ்க்கை == | == இலக்கிய வாழ்க்கை == | ||
சிவபாத சுந்தரம் கிறிஸ்தவ சமயத்தவர், சைவ சமயத்தினை இகழ்ந்துரைப்பதையும், சைவர்களை மதம் மாற்றுவதையும் கண்டித்து எழுதினார். தமிழிலும் ஆங்கிலத்திலும் சைவ நூல்கள் பல எழுதினார். இவர் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரை சிலோன் பேற்றியட் சஞ்சிகையில் | சிவபாத சுந்தரம் கிறிஸ்தவ சமயத்தவர், சைவ சமயத்தினை இகழ்ந்துரைப்பதையும், சைவர்களை மதம் மாற்றுவதையும் கண்டித்து எழுதினார். தமிழிலும் ஆங்கிலத்திலும் சைவ நூல்கள் பல எழுதினார். இவர் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரை சிலோன் பேற்றியட் (Ceylon Patriot) சஞ்சிகையில் 1931-ல் வந்தது. சிறுவர்களுக்கான நல்லொழுக்கக் கதை நூல்கள் எழுதினார். இந்து சமயப்பிரிவில் சைவம், சிவஞானபோதம், சைவத்தின் மகத்துவம் ஆகியவை உலகப்புகழ்பெற்ற நூல்கள். இந்து சமயத்தில் சைவம் என்னும் நூல் காசி இந்துப்பல்கலைக்கழகத்து பட்டப்படிப்பில் பாட நூலாக உள்ளது. திருக்கைலாய பரம்பரைத் தருமபுர ஆதீன மடாதிபதிகளின் விருந்தினராகச் சென்றபோது நல்லசாமிப்பிள்ளையின் சிவஞான சித்தியார் ஆங்கில மொழிபெயர்ப்பை திருத்தியும் புதுப்பித்தும் அச்சிட்டார். | ||
== மறைவு == | == மறைவு == | ||
சு. சிவபாத சுந்தரம் ஆகஸ்ட் 14, | சு. சிவபாத சுந்தரம் ஆகஸ்ட் 14,1953-ல் காலமானார். | ||
== நூல் பட்டியல் == | == நூல் பட்டியல் == | ||
* சைவபோதம் | * சைவபோதம் | ||
Line 34: | Line 32: | ||
{{ | {{Standardised}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 20:43, 14 November 2022
சு. சிவபாத சுந்தரம் (ஜனவரி 1, 1878 - ஆகஸ்ட் 14,1953) ஈழத்து தமிழ் சைவப் புலவர், ஆசிரியர். சமயக்கல்வி கட்டாயப்பாடமாகுவதற்கு காரணமானவர்களுள் முக்கியமானவர்.
வாழ்க்கைக் குறிப்பு
சிவபாத சுந்தரம் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சார்ந்த புலோலியூரில் 1878-ல் சுப்பிரமணியபிள்ளை, வள்ளியம்மை இணையருக்கு மகனாக ஜனவரி 1, 1878-ல் பிறந்தார். வ. குமாரசுவாமிப் புலவர், வ. கணபதிப் பிள்ளை, பார்வதி அம்மையார் ஆகியோரிடம் தமிழும் சமஸ்கிருதமும் கற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் எப்.ஏ பட்டம் பெற்றார். திருச்சிராப்பள்ளி செயிண்ட் ஜோசஃப் கல்லூரியில் கற்று கலைமாணித்தேர்வில் தேர்ச்சி பெற்றார். கணிதம், தர்க்கம் ஆகியவற்றில் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றார்.
கல்விப்பணி
சிவபாத சுந்தரம் 1924 முதல் ஒன்பது ஆண்டுகள் யாழ்ப்பாணம், சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி அதிபராகப் பணியாற்றினர். 1939-ஆம் ஆண்டிலே இலங்கைக் கல்வி முறையினைத் திருத்தியமைப்பதற்காக நிறுவப்பட்ட ஆணைக் குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். ஓய்வுக்குப்பின் பரமேஸ்வரா கல்லூரியின் மேற்பார்வையாளராக இருந்தார்.
ஆன்மிகப்பணி
சிவபாத சுந்தரம் வார்க்கடைச்சுவாமி, ஆறுமுக நாவலர், சிவசம்புப்புலவர் ஆகியோரிடம் தொடர்பில் இருந்தார். சிலகாலம் 'கந்தவனம்’ என்னும் முருகன் கோயிலுக்கு அருகில் ஒரு திருமடத்தினை நிறுவி அங்கு வாழ்ந்தார். அங்கே, சித்தாந்த சாத்திரமும் புராணமும் பாடங் கேட்கச் சென்ற மாணவர்களுக்குக் கற்பித்தார். திருக்கேதீச்சரக் கோயில் திருப்பணியில் ஊக்கமுடையவராய் உழைத்து, அதற்கென அமைக்கப்பட்ட சபையின் தலைவராக பணியாற்றினார். 1921-ல் சேர்.பொன் இராமநாதன் அவர்களால் உருவாக்கப்பட்ட பரமேஸ்வராக் கல்லூரியின் தலைமையாசிரியராக சிவபாத சுந்தரம் இருந்தார். தமிழகத்தில் பிட்சாண்டர் கோயில் பெருநிலக்கிழார் ராசகோபாலபிள்ளையின் ஆனந்தவிலாசம் மாளிகையில் தங்கி சிவஞானசித்தியார் பாடம் நடத்தினார். சிதம்பரத்தில் தங்கியிருந்தபோது சைவப் பிரசங்கங்கள் செய்தார்.
இலக்கிய வாழ்க்கை
சிவபாத சுந்தரம் கிறிஸ்தவ சமயத்தவர், சைவ சமயத்தினை இகழ்ந்துரைப்பதையும், சைவர்களை மதம் மாற்றுவதையும் கண்டித்து எழுதினார். தமிழிலும் ஆங்கிலத்திலும் சைவ நூல்கள் பல எழுதினார். இவர் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரை சிலோன் பேற்றியட் (Ceylon Patriot) சஞ்சிகையில் 1931-ல் வந்தது. சிறுவர்களுக்கான நல்லொழுக்கக் கதை நூல்கள் எழுதினார். இந்து சமயப்பிரிவில் சைவம், சிவஞானபோதம், சைவத்தின் மகத்துவம் ஆகியவை உலகப்புகழ்பெற்ற நூல்கள். இந்து சமயத்தில் சைவம் என்னும் நூல் காசி இந்துப்பல்கலைக்கழகத்து பட்டப்படிப்பில் பாட நூலாக உள்ளது. திருக்கைலாய பரம்பரைத் தருமபுர ஆதீன மடாதிபதிகளின் விருந்தினராகச் சென்றபோது நல்லசாமிப்பிள்ளையின் சிவஞான சித்தியார் ஆங்கில மொழிபெயர்ப்பை திருத்தியும் புதுப்பித்தும் அச்சிட்டார்.
மறைவு
சு. சிவபாத சுந்தரம் ஆகஸ்ட் 14,1953-ல் காலமானார்.
நூல் பட்டியல்
- சைவபோதம்
- திருவருட்பயன் விளக்கவுரை
- சைவக்கிரியை விளக்கம்
- கந்தபுராண விளக்கம்
- திருவாசக மணிகள்
- திருக்குறள் மணிகள்
- அளவை நூல்
- அக நூல்
- படிப் பிக்கும் முறைகளும் விதிகளும்
- திருப்பெரு வடிவம்
ஆங்கில நூலகள்
- An outline of sivagnana potham
- Saiva School of Hinduism
- Essentials of Logic
- Glories of Saivaism
உசாத்துணை
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
- நினைவுமலர்: சிவபாத சுந்தரம்
⨮ Standardised
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.