சோழன் வென்ற கடாரம்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 5: Line 5:


நடராஜன் 2011-ஆம் ஆண்டு ‘Bujang Valley: The Wonder that was Ancient Kedah’ என்ற தலைப்பில் பூஜாங் பள்ளத்தாக்குப் பற்றிய நூலை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார். பின்னர் ‘Bujang Valley: The Wonder that was Ancient Kedah’  என்ற நூல் ‘சோழன் வென்ற கடாரம்’ என்ற தலைப்பில் தமிழில் எழுத்தாளர் [[ரெ. கார்த்திகேசு]] அவர்களால் மொழியாக்கம் செய்யப்பட்டது.
நடராஜன் 2011-ஆம் ஆண்டு ‘Bujang Valley: The Wonder that was Ancient Kedah’ என்ற தலைப்பில் பூஜாங் பள்ளத்தாக்குப் பற்றிய நூலை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார். பின்னர் ‘Bujang Valley: The Wonder that was Ancient Kedah’  என்ற நூல் ‘சோழன் வென்ற கடாரம்’ என்ற தலைப்பில் தமிழில் எழுத்தாளர் [[ரெ. கார்த்திகேசு]] அவர்களால் மொழியாக்கம் செய்யப்பட்டது.
== உள்ளடக்கம் ==
== உள்ளடக்கம் ==
சோழர்களின் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படும் கடாரம் என்பது மலேசியாவிலுள்ள கெடா மாநிலம்தான் என்பதை மலேசியாவில் பூஜோங் பள்ளத்தாக்கில் கிடைத்த தரவுகளை அடிப்படையாகக் கொண்டு நிறுவும் நூல் இது.
சோழர்களின் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படும் கடாரம் என்பது மலேசியாவிலுள்ள கெடா மாநிலம்தான் என்பதை மலேசியாவில் பூஜோங் பள்ளத்தாக்கில் கிடைத்த தரவுகளை அடிப்படையாகக் கொண்டு நிறுவும் நூல் இது. மலேசியாவிலும் இந்தியாவிலும் உள்ள நூல்களிலும் கதைகளிலும் ராஜேந்திரசோழன் கடாரம் வென்றதைப் பற்றிய செய்திகள் உள்ளன. ரோனல்ட் பிராடல், பால் வீட்லி ஆகியோர் அவற்றை திரட்டி ஆராய்ந்துள்ளனர் என்று நடராஜன் சொல்கிறார். தொல்லியல் சான்றுகள் பூஜாங் பள்ளத்தாக்கில் கிடைக்கின்றன. அகழ்வாய்வு மூலம் கிடைத்த தரவுகளை திரட்டி ஒருங்கிணைத்து, தமிழக கல்வெட்டுகள் மற்றும் வரலாற்றுச் சான்றுகளுடன் இணைத்து இந்நூல் கெடா பகுதியே கடாரம் என நிறுவுகிறது.


== ஆய்வு இடம் ==
== ஆய்வு இடம் ==
தமிழகத்துக்கு வெளியே தமிழ் வரலாறு பற்றி தரவுகளை தொகுத்து அளிக்கும் நூல்களில் இது முக்கியமான ஒன்று. சோழர்காலம் பற்றியும் தமிழர்களின் கடல்வணிகம் பற்றியும் ஒரு சித்திரத்தை அளிக்கிறது. பூஜாங் பள்ளத்தாக்கு தமிழ்ப்பண்பாட்டுக்கு முக்கியமானது என்று நிறுவி, அதை பாதுகாப்பதற்கான சர்வதேச கவனத்தையும் இந்நூல் உருவாக்கியது. மலேசியாவில் தமிழர்களின் தொல்வரலாற்றுப் பின்னணியின் ஆதாரமாகவும் இந்நூல் உள்ளது. 


== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://www.trendztamil.com/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/ சோழன் வென்ற கடாரம். சில பகுதிகள்]
* [https://agharam.wordpress.com/2019/02/06/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-1-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/ கடாரம் ஆய்வுகள் -இரா முத்துசாமி]

Revision as of 08:28, 11 November 2022

சோழர் வென்ற கடாரம்

சோழன் வென்ற கடாரம் ( ) மலேசியத் தமிழர்களின் வரலாறு பற்றிய முதன்மை ஆவணநூல். தமிழக வரலாற்றை ஆய்வுசெய்வதிலும் புதிய வெளிச்சங்களை அளிப்பது. வீ. நடராஜன் இந்நூலின் ஆசிரியர். ஆங்கிலத்தில் இருந்து இதை ரெ.கார்த்திகேசு தமிழாக்கம் செய்தார்.

எழுத்து, வெளியீடு

மலேசிய வரலாற்றாசிரியர் வீ. நடராஜன் எழுதிய இந்நூல் .1967-ஆம் ஆண்டு மலாயா பல்கலைகழகத்தில் வரலாற்று துறையில் இறுதியாண்டு பயிலும்போது நடராஜன் பூஜாங் பள்ளத்தாக்குக் குறித்த ஆய்வினை தமது இறுதியாண்டிற்கான ஆய்வுக்கட்டுரையாகத் தயாரித்துப் படைத்தார்.

நடராஜன் 2011-ஆம் ஆண்டு ‘Bujang Valley: The Wonder that was Ancient Kedah’ என்ற தலைப்பில் பூஜாங் பள்ளத்தாக்குப் பற்றிய நூலை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார். பின்னர் ‘Bujang Valley: The Wonder that was Ancient Kedah’  என்ற நூல் ‘சோழன் வென்ற கடாரம்’ என்ற தலைப்பில் தமிழில் எழுத்தாளர் ரெ. கார்த்திகேசு அவர்களால் மொழியாக்கம் செய்யப்பட்டது.

உள்ளடக்கம்

சோழர்களின் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படும் கடாரம் என்பது மலேசியாவிலுள்ள கெடா மாநிலம்தான் என்பதை மலேசியாவில் பூஜோங் பள்ளத்தாக்கில் கிடைத்த தரவுகளை அடிப்படையாகக் கொண்டு நிறுவும் நூல் இது. மலேசியாவிலும் இந்தியாவிலும் உள்ள நூல்களிலும் கதைகளிலும் ராஜேந்திரசோழன் கடாரம் வென்றதைப் பற்றிய செய்திகள் உள்ளன. ரோனல்ட் பிராடல், பால் வீட்லி ஆகியோர் அவற்றை திரட்டி ஆராய்ந்துள்ளனர் என்று நடராஜன் சொல்கிறார். தொல்லியல் சான்றுகள் பூஜாங் பள்ளத்தாக்கில் கிடைக்கின்றன. அகழ்வாய்வு மூலம் கிடைத்த தரவுகளை திரட்டி ஒருங்கிணைத்து, தமிழக கல்வெட்டுகள் மற்றும் வரலாற்றுச் சான்றுகளுடன் இணைத்து இந்நூல் கெடா பகுதியே கடாரம் என நிறுவுகிறது.

ஆய்வு இடம்

தமிழகத்துக்கு வெளியே தமிழ் வரலாறு பற்றி தரவுகளை தொகுத்து அளிக்கும் நூல்களில் இது முக்கியமான ஒன்று. சோழர்காலம் பற்றியும் தமிழர்களின் கடல்வணிகம் பற்றியும் ஒரு சித்திரத்தை அளிக்கிறது. பூஜாங் பள்ளத்தாக்கு தமிழ்ப்பண்பாட்டுக்கு முக்கியமானது என்று நிறுவி, அதை பாதுகாப்பதற்கான சர்வதேச கவனத்தையும் இந்நூல் உருவாக்கியது. மலேசியாவில் தமிழர்களின் தொல்வரலாற்றுப் பின்னணியின் ஆதாரமாகவும் இந்நூல் உள்ளது.

உசாத்துணை