first review completed

ஆனந்தரங்கம் பிள்ளை: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 34: Line 34:


==தினப்படி சேதிக்குறிப்பு==
==தினப்படி சேதிக்குறிப்பு==
[[தினப்படி சேதிக்குறிப்பு (ஆனந்தரங்கம்பிள்ளை)]]  தமிழ் வரலாற்று ஆய்வின் முக்கியமான தரவுத்தொகுப்புகளில் ஒன்று. ஆனந்தரங்கம்பிள்ளை 1736 முதல் 1761 வரை ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் தொடர்ந்து நாட்குறிப்பு எழுதினார். இது தமிழக வரலாற்றில் எழுதப்பட்ட முதல் நேரடியான முதல்காலப்பதிவு எனப்படுகிறது. கைப்பிரதியாக இருந்த அந்தக் குறிப்புகளை 1846-ல் பாண்டிச்சேரி மேயராக இருந்த கால்வா மாண்ட்பர்ன் கண்டெடுத்து ஃப்ரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்தார். விட்டுப்போன சில பகுதிகள் பிற்காலத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. 1894-ல் ஜூலியன் வின்சென் முழுமையான குறிப்புகளை ஃப்ரெஞ்சு மொழியில் பதிப்பித்தார். 1896-ல் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளிவந்தது.   
[[தினப்படி சேதிக்குறிப்பு (ஆனந்தரங்கம்பிள்ளை)]]  தமிழ் வரலாற்று ஆய்வின் முக்கியமான தரவுத்தொகுப்புகளில் ஒன்று. ஆனந்தரங்கம்பிள்ளை 1736 முதல் 1761 வரை ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் தொடர்ந்து நாட்குறிப்பு எழுதினார். இது தமிழக வரலாற்றில் எழுதப்பட்ட முதல் நேரடியான முதல்காலப்பதிவு எனப்படுகிறது. கைப்பிரதியாக இருந்த அந்தக் குறிப்புகளை 1846-ல் பாண்டிச்சேரி மேயராக இருந்த கலுவா மொம்பிரான் கண்டெடுத்து ஃப்ரெஞ்சு மொழியில் மொழிபெயர்து அறிமுகம் செய்தார். விட்டுப்போன சில பகுதிகள் பிற்காலத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. 1894-ல் ஜூலியன் வின்சென் முழுமையான குறிப்புகளை ஃப்ரெஞ்சு மொழியில் பதிப்பித்தார். 1896-ல் பிரடரிக் பிரைஸ் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளிவந்தது.   


==உசாத்துணை==
==உசாத்துணை==

Revision as of 06:19, 7 February 2022

Anandarangam Pillai
ஆனந்தரங்கம் பிள்ளை

ஆனந்தரங்கம் பிள்ளை (மார்ச் 30, 1709 – ஜனவரி 10, 1761) தமிழக வரலாற்றின் முதன்மையான வரலாற்றுக் குறிப்பாளர். பாண்டிச்சேரி நகரத்தில் ஃப்ரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனிக்காக மொழிபெயர்ப்பாளராக (துபாஷ்) பணி புரிந்தார். ஃப்ரெஞ்சு ஆளுனர் டூப்ளேக்கு அணுக்கமானவர். 1736 முதல் 1761 வரை அவர் எழுதி வைத்திருந்த நாட்குறிப்புகள் பதினெட்டாம் நூற்றாண்டின் இந்தியாவைப் பற்றிய உண்மையான சித்தரிப்பை அளிக்கின்றன. இவை அன்றைய அரசியல் சூழ்நிலை, தினசரி வாழ்க்கை ஆகியவற்றைப் பற்றிய மிக முக்கியமான ஆவணங்கள்.

பிறப்பு, இளமை

ஆனந்தரங்கம் பிள்ளை மார்ச் 30, 1709 அன்று பெரம்பூரில் (இன்றைய சென்னை நகரம்) திருவேங்கடம் பிள்ளை எனும் வணிகருக்கு மகனாக பிறந்தார். ஆனந்தரங்கம் பிள்ளைக்கு மூன்று வயது இருக்கையிலேயே தாய் இறந்துவிட்டார். பாண்டிச்சேரியில் திருவேங்கடம் பிள்ளையின் மைத்துனர் நைனியா பிள்ளை ஃப்ரெஞ்சு ஆட்சியில் தலைமை இந்திய அதிகாரியாக இருந்தார். அவரது அழைப்பின்படி திருவேங்கடம் பிள்ளை 1716-ல் பாண்டிச்சேரிக்கு குடிபெயர்ந்தார். அங்கு அரசுப் பணியில் உதவியாளராகச் சேர்ந்து, நாளடைவில் திவானாகப் பதவி உயர்வு பெற்றார். ஆனந்தரங்கம் தொடக்கத்தில் எம்பார் என்பவரிடம் கல்வி பயின்றார்.

தனிவாழ்க்கை

ஆனந்தரங்கம் பிள்ளை கல்வி கற்ற பின் தந்தை நடத்திவந்த பாக்குக் கிடங்கினை பார்த்துக்கொண்டார். அரசுப் பணிகள் சிலவற்றில் தந்தைக்கு உதவியாக இருந்தார். செங்கல்பட்டு சேஷாத்ரி பிள்ளையின் மகள் மங்கதாயியை மணந்து மூன்று மகள்களுக்கும் இரண்டு மகன்களுக்கும் தந்தையானார்.அவரது மகன்கள் அண்ணாசாமி, அய்யாசாமி இருவரும் அவருக்கு முன்னாலேயே இறந்துவிட்டனர். அவரது மகள் பாப்பாளின் திருமணம் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது என்று நாட்குறிப்புகளில் இருந்து தெரிகிறது.

பொதுவாழ்க்கை

ஆனந்தரங்கம் பிள்ளை 1726-ல் அவரது தந்தையின் மறைவுக்குப் பிறகு பரங்கிப்பேட்டையில் இருந்த ஃப்ரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் தொழிற்சாலையின் தலைமை இந்திய அதிகாரியாக பொறுப்பேற்றார். அன்று ஃப்ரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியில் இந்தியர்களுக்கான முக்கியப் பதவியாக துபாஷ் பதவி இருந்தது. ஆனந்தரங்கம் பிள்ளையின் உறவினரான குருவா பிள்ளை மறைவுக்குப் பிறகு துபாஷ் பதவிக்கான போட்டியில் ஆனந்தரங்கம் பிள்ளையும் இருந்தார். ஆனால் அந்தப் பதவி கனகராய முதலியாருக்கு கிடைத்தது. 1746-ல் கனகராய முதலியார் இறந்த பிறகு அன்றைய ஆளுனர் டூப்ளே ஆனந்தரங்கம் பிள்ளைக்கு தலைமை துபாஷ் பதவியை அளித்தார்.ஆனந்தரங்கப்பிள்ளை பிரஞ்சிந்திய வர்த்தகக் கம்பெனியின் தலைமைத் துபாஷியாகவும், அரசின் தூதுவராகவும், அரசியல் ஆலோசகராகவும்,தலைமை வணிகராகவும், தமிழ் மக்களின் தலைவராகவும், தமிழ் மக்களின் நீதித்துறைத் தலைவராகவும், வரி வசூல் செய்யும் பொறுப்பதிகாரியாகவும், வர்த்தக நிறுவனங்களின் நிர்வாகியாகவும் விளங்கினார். ஆனந்தரங்கம் பிள்ளை ‘ஆனந்தப் புரவி’ என்ற பெயரில் சொந்தமாகப் பாய்க்கப்பல் ஒன்றை வணிகத்தின்பொருட்டு வைத்திருந்தார். துணி ஏற்றுமதி செய்தார், சாராய உற்பத்தி உரிமையும் பெற்றிருந்தார்.

துபாஷ் பணி

புதுச்சேரியில் பிரஞ்சியர் ஆட்சிக் காலத்தில் பிரெஞ்சு மொழியில் இருந்து இன்னொரு மொழிக்கு மொழியாக்கம் செய்து அதிகாரிகளுக்குச் சொல்பவர்கள் துபாஷிகள் (த்வி பாஷி- இருமொழியாளர்) எனப்பட்டனர். பிரெஞ்சு ஆளுநருக்குத் துபாஷியாக இருந்தவர்கள் தலைமைத் துபாஷியாகவும், தமிழர்களின் தலைவராகவும் கருதப்பட்டனர். முதன்முதலாக புதுச்சேரிக்குத் துபாஷியாக வந்தவர் லசார் தெ மொத்தோ என்றழைக்கப்பட்ட பூந்தமல்லி தானப்ப முதலியார். அவருக்குப் பிறகு முத்தியப்ப முதலியார், நைனியப்பப்பிள்ளை, குருவப்பப்பிள்ளை, கனகராய முதலியார் எனப் பலரும் துபாஷியாக இருந்தனர். இவர்களுள் பெரும்பாலோர் முதலியார் இனத்தைச் சார்ந்தவர்கள்.

1746-ல் துபாஷியான ஆனந்தரங்கம் பிள்ளை டூப்ளேக்கு நெருக்கமானவராக இருந்தார். அந்த நெருக்கமும் அவரது பதவியும் வணிக வெற்றியும் அவரை சில ஆண்டுகளாவது ஒரு அதிகார மையமாக வைத்திருந்தன. டூப்ளேயின் காலத்தில் ஆர்க்காடு நவாப் பதவிக்கு சந்தாசாஹிப், முகம்மது அலி ஆகியோருக்கு நடுவே கடும் போட்டி இருந்தது. டூப்ளே சந்தாசாஹிபையும் அன்றைய ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி ராபர்ட் க்ளைவ் தலைமையில் முகம்மது அலியையும் ஆதரித்தார்கள். ஆங்கிலேயர்கள் வெற்றி அடைந்ததால் டூப்ளே ஃப்ரான்சுக்கு திரும்பினார். ஆளுநர் மாற்றத்துக்குப் பிறகு பிள்ளையின் தாக்கம் குறைந்தது. அவருடைய உடல் நலமும் குன்றியது. அதனால் 1756-ல் அவர் துபாஷ் பதவியிலிருந்து விலக்கப்பட்டார்.

மறைவு

ஆனந்தரங்கம் பிள்ளை ஜனவரி 10, 1761 அன்று மறைந்தார்.

நூல்குறிப்புகள்

ஆனந்தரங்கம் குறித்து வெளிவந்துள்ள இலக்கியங்கள்

ஆனந்தரங்கம் இந்து மத அறிஞர்கள், தமிழ், தெலுங்குப் புலவர்கள் ஆகியோரின் புரவலர். நமசிவாயர், கஸ்தூரி ரங்கையார், தியாகராச தேசிகர் போன்ற தமிழ்ப் புலவர்களை இவர் ஆதரித்துள்ளதாகத் நாட்குறிப்புகள் சொல்கின்றன.

ஆனந்தரங்கம் பிள்ளை குறித்து வெளிவந்த நூல்கள்

  • ஆனந்தரங்க கோவை
  • ஆனந்தரங்கன் தனிப்பாடல்கள்
  • கள்வன் நொண்டிச் சிந்து
  • ஆனந்தரங்கம் பிள்ளைத் தமிழ்- அரிமதி தென்னகன்
  • ஆனந்தரங்கம் விஜயசம்பு - சீனிவாசர் (வடமொழி நூல்)
  • மானுடம் வெல்லும் (நாவல்) -பிரபஞ்சன்
  • ,வானம் வசப்படும் ( நாவல்) பிரபஞ்சன்

தினப்படி சேதிக்குறிப்பு

தினப்படி சேதிக்குறிப்பு (ஆனந்தரங்கம்பிள்ளை) தமிழ் வரலாற்று ஆய்வின் முக்கியமான தரவுத்தொகுப்புகளில் ஒன்று. ஆனந்தரங்கம்பிள்ளை 1736 முதல் 1761 வரை ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் தொடர்ந்து நாட்குறிப்பு எழுதினார். இது தமிழக வரலாற்றில் எழுதப்பட்ட முதல் நேரடியான முதல்காலப்பதிவு எனப்படுகிறது. கைப்பிரதியாக இருந்த அந்தக் குறிப்புகளை 1846-ல் பாண்டிச்சேரி மேயராக இருந்த கலுவா மொம்பிரான் கண்டெடுத்து ஃப்ரெஞ்சு மொழியில் மொழிபெயர்து அறிமுகம் செய்தார். விட்டுப்போன சில பகுதிகள் பிற்காலத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. 1894-ல் ஜூலியன் வின்சென் முழுமையான குறிப்புகளை ஃப்ரெஞ்சு மொழியில் பதிப்பித்தார். 1896-ல் பிரடரிக் பிரைஸ் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளிவந்தது.

உசாத்துணை



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.