being created

கண்ணதாசன் (இதழ்): Difference between revisions

From Tamil Wiki
(Image Added)
(Para Added, Image Added)
Line 6: Line 6:
[[தென்றல்]], தென்றல் திரை, முல்லை எனப் பல இதழ்களைத் தொடங்கி நடத்திய அனுபவம் மிக்கவர் கவிஞர் [[கண்ணதாசன்]]. அவர் தனது தனிப்பட்ட கருத்துக்களை, சிந்தனைகளை வெளியிடுவதற்காக, ‘கண்ணதாசன்’ என்னும் தன் பெயரிலேயே இதழ் ஒன்றை ஆரம்பித்தார். ஜனவரி 1, 1968 முதல் வெளிவந்த இவ்விதழின் பக்கங்கள் 160. விலை ரூபாய் ஒன்று. சில மாதங்களுக்குப் பின் ஒன்றரை ரூபாய்க்கு இவ்விதழ் விற்பனையானது. ஆண்டு சந்தா ரூபாய் 6.00/- அப்போது குமுதம் நான்கணா விலைக்கும், ஆனந்த விகடன் முப்பது பைசாவிற்கும் விற்பனை செய்யப்பட்டது. அக்காலகட்டத்தில் மிக அதிகமான விலையில் வந்த ஒரே இலக்கிய இதழ் கண்ணதாசன் தான்.  
[[தென்றல்]], தென்றல் திரை, முல்லை எனப் பல இதழ்களைத் தொடங்கி நடத்திய அனுபவம் மிக்கவர் கவிஞர் [[கண்ணதாசன்]]. அவர் தனது தனிப்பட்ட கருத்துக்களை, சிந்தனைகளை வெளியிடுவதற்காக, ‘கண்ணதாசன்’ என்னும் தன் பெயரிலேயே இதழ் ஒன்றை ஆரம்பித்தார். ஜனவரி 1, 1968 முதல் வெளிவந்த இவ்விதழின் பக்கங்கள் 160. விலை ரூபாய் ஒன்று. சில மாதங்களுக்குப் பின் ஒன்றரை ரூபாய்க்கு இவ்விதழ் விற்பனையானது. ஆண்டு சந்தா ரூபாய் 6.00/- அப்போது குமுதம் நான்கணா விலைக்கும், ஆனந்த விகடன் முப்பது பைசாவிற்கும் விற்பனை செய்யப்பட்டது. அக்காலகட்டத்தில் மிக அதிகமான விலையில் வந்த ஒரே இலக்கிய இதழ் கண்ணதாசன் தான்.  


இராம. கண்ணப்பன் இவ்விதழின் இணை ஆசிரியராக இருந்தார். ஓவியர் அமுதோனின் அழகான ஓவியங்களுடன் இவ்விதழ் வெளிவந்தது
இராம. கண்ணப்பன் இவ்விதழின் இணை ஆசிரியராக இருந்தார். ஓவியர் அமுதோனின் அழகான ஓவியங்களுடன் இவ்விதழ் வெளிவந்தது. நடுவில் ஒருமுறை நின்று பின் மீண்டும் 1975 வரை வெளிவந்தது.
== உள்ளடக்கம் ==
== உள்ளடக்கம் ==
கவிஞர் முதல் இதழில்,  
முதல் இதழில்,  


''போற்றுபவர் போற்றட்டும் ; புழுதிவாரித்''
''போற்றுபவர் போற்றட்டும்; புழுதிவாரித்''


''தூற்றுபவர் தூற்றட்டும் ; தொடர்ந்து செல்வேன்''
''தூற்றுபவர் தூற்றட்டும்; தொடர்ந்து செல்வேன்''


''ஏற்றதொரு கருத்தை என ( து ) உள்ளம் என்றால்''
''ஏற்றதொரு கருத்தை என ( து ) உள்ளம் என்றால்''


''எடுத்துரைப்பேன் ; எவர்வரினும் நில்லேன் ; அஞ்சேன்''
''எடுத்துரைப்பேன்; எவர்வரினும் நில்லேன்; அஞ்சேன்''


என்றும்,
என்று குறிப்பிட்டுள்ள கவிஞர், மேலும், ”என் இனிய நண்பர்களே! நீண்ட இடைவெளிக்குப் பிறகு கண்ணதாசன் மாத இதழ் உங்கள் கையில் திகழ்கிறது. ஒவ்வொரு தடவையும் கண்ணதாசன் இதழை ஆசையோடும். ஆர்வத்தோடும் துவங்கியிருக்கிறேன். பல்வேறு காரணங்களால் இதழ் சோதிக்கப்பட்டு நின்று போயிருக்கிறது. இந்தத் தடவை இதை நல்ல முறையில் தொடர்ந்து நடத்துவது என்ற உறுதியோடு இதனைத் தொடங்கி யிருக்கிறேன், நண்பர்கள் சிலரின் உதவியோடு.
 
செல்கின்ற இடங்களிலெல்லாம் நண்பர்கள் விடுத்த வேண்டுகோளுக்கிணங்கவே இது மீண்டும் வருகிறது. இதன் மூலம் பல்வேறு இலக்கியக் கருத்துக்களை உங்களோடு நான் பரிமாறிக் கொள்வேன். கண்ணபிரான் பேரருளால் காலமெல்லாம் இது தழைத்தோங்க நீங்களும் ஒத்துழைக்க வேண்டும்." என்று கூறியுள்ளார்.


“கவிதையிலோ, காவியத்திலோ புதிய மரபுகள் அல்லது புதிய உத்திகள் எவற்றையும்  நான் கைக்கொள்ளவில்லை . இரண்டு யுகங்களுக்கு நடுவில் நான்  நிற்கிறேன் . கடந்த யுகத்தைப் பிரதிபலிக்கிறேன் . வரப்போகும்  யுகத்தைத் துவக்கி வைக்கிறேன் . எத்தகைய விமர்சனத்திற்கும் நான்  எப்போதும் தயாராக இருக்கிறேன் . கூடிப் புகர்வோரைப் போலவே குற்றம் சொல்வோரையும் நான் நேசிக்கிறேன்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.
“கவிதையிலோ, காவியத்திலோ புதிய மரபுகள் அல்லது புதிய உத்திகள் எவற்றையும்  நான் கைக்கொள்ளவில்லை . இரண்டு யுகங்களுக்கு நடுவில் நான்  நிற்கிறேன் . கடந்த யுகத்தைப் பிரதிபலிக்கிறேன் . வரப்போகும்  யுகத்தைத் துவக்கி வைக்கிறேன் . எத்தகைய விமர்சனத்திற்கும் நான்  எப்போதும் தயாராக இருக்கிறேன் . கூடிப் புகர்வோரைப் போலவே குற்றம் சொல்வோரையும் நான் நேசிக்கிறேன்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.
தலையங்கம் தொடங்கி ஐயம் அகற்று (கேள்வி-பதில் பகுதி) , கவிதைகள்,  கட்டுரைகள், கதைகள்,  குறுநாவல்கள் , துணுக்குகள் , பிறமொழிக் கவிதைகள், மொழிபெயர்ப்புகள்,  வரலாற்றாய்வுகள், நூல்நயம் என இலக்கியத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் கண்ணதாசன் இதழ் இடமளித்தது.
என் ஆர்.தாசனின் தமிழாக்கத்தில் மலையாள மொழிக் கவிதாயினி பாலாமணி அம்மாளின் கவிதை,  சரஸ்வதி ராம்நாத் மொழிபெயர்த்த, இப்ரஹீம் ஷெரீஃப் இந்தியில் எழுதிய சிறுகதை,  பத்மன் எழுதிய 'ஒரு கூடு காலியாகிறது. வீ. கோவிந்தராசன் எழுதிய 'பிரச்னைகள் ஓயப்போவதில்லை' போன்ற சிறந்த சிறுகதைகள்,  பேராசிரியர் அச.ஞானசம்பந்தன் எழுதிய 'வாலி - ஒரு புதிய கண்ணோட்டம்' ஆய்வுக் கட்டுரை, விட்டல் ராவ் எழுதிய திருட்டு' சிறுகதை, தேவபாரதி எழுதிய  'அடிமையின் கோபம்' சிறுகதை, ஜே.வி.நாதனின் 'வயிறு' சிறுகதை போன்றவை கண்ணதாசன் இதழில் வெளியாகி இருந்தன.  கண்ணதாசன் எழுதிய 'அவளோர் அற்புத ராகம்', 'ஸ்ரீகிருஷ்ண அந்தாதி', 'நன்றோ ! தீதோ?', 'குட்டிக் கதைகள்' போன்ற படைப்புகளும் கண்ணதாசன் இதழில் வெளியாகின.
மூத்த தமிழறிஞர்கள் முதல் இளம் கவிஞர்கள் வரை பலருக்கும் ‘கண்ணதாசன்’ வாய்ப்பளித்தது. ஜெயகாந்தனின் , ‘சினிமாவுக்குப் போன சித்தாளு’ தொடர் இவ்விதழில் வெளியானதுதான்.
கண்ணதாசனின் புகழ்பெற்ற படைப்புகளான  ‘ஸ்வர்ண சரஸ்வதி', 'ஸ்ரீகிருஷ்ண மந்திரம்', 'அர்த்தமுள்ள இந்துமதம்', 'வனவாசம்’. 'செப்பு மொழிகள்', 'காதலில் வளர்ந்த காமம்', 'காமத்தில் பிறந்த ஞானம்', 'ஒரு மன்னன் துறவியாகிப் புலம்பிய காவியம்', 'பர்த்ருஹரி காவியம்'  போன்றவை கண்ணதாசனில் தொடராக வெளிவந்தவைதான்
== பங்களிப்பாளர்கள் ==
கண்மணிசுப்பு,
சுகுமாரன்
புவியரசு
பிரபஞ்சன்
ஜோதிர்லதா கிரிஜா
கே. பக்தவத்சலம்
சிங்காரவேலன்
பாண்டி நாடன்
தமிழ்நாடன்
வே. கந்தசாமி
மு.மேத்தா
சக்திக் கனல்
சிற்பி, வைரமுத்து, நாகை ப.ஜீவா, தேவபாரதி, கொ.மா. கோதண்டம், பூவை ஆறுமுகம், குயிலன்
பிறைச்சூடிப்பித்தன், பூமணி, புலவர் நாக சண்முகம், ப.கங்கைகொண்டான், வல்லிக்கண்ணன், தமிழமுதன், மா.பா.குருசாமி, தமிழாலயன், சோமலெ, பிரதிபா ராஜகோபாலன், ஐராவதம், சா. கந்தசாமி, கம்பதாசன், வண்ணநிலவன், ஐசக் அருமைராசன், ஆ. செகநாதன், எஸ்.ஷாஜஹான், சி.ஆர்.இரவீந்திரன், இமயவ ஆதவன், தமிழன்பன், தமிழவன், நீல பத்மநாபன், ஏர்வாடி எஸ்,ராதாகிருஷ்ணன்,
தி.ஜ. ரங்கநாதன், தி.க. சிவசங்கரன் , ம.ந. ராமசாமி, ஜெகசிற்பியன், கு . சின்னப்பப்பாரதி , என்.ஆர் . தாசன் , வல்லிக்கண்ணன் , டி . செல்வராஜ், ச . செந்தில்நாதன் , கந்தர்வன் , பொன்னீலன் , மு . மேத்தா , சிற்பி , சிகரம் ச. செந்தில்நாதன், சோலை, புவியரசு , நா . காமராசன் , வேலவன், ஜோதிர்லதா கிரிஜா, அறந்தை நாராயணன், வைரமுத்து , நீல பத்மநாபன் , ப . செயப்பிரகாசம் மற்றும் வானம்பாடி கவிஞர்கள் , தாமரை  எழுத்தாளர்கள் ஜெயகாந்தன் , பாலதண்டாயுதம், கு.சின்னப்ப பாரதி, வானம்பாடி இயக்கத்தினர், இராம. கண்ணப்பன், கார்க்கி, கந்தர்வன்




{{being created}}
{{being created}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 17:06, 18 October 2022

கண்ணதாசன் இதழ் (படம் நன்றி: கண்ணதாசன் பதிப்பகம்)
கண்ணதாசன் இதழ் - 1973 (படம் நன்றி: கண்ணதாசன் பதிப்பகம்)
கண்ணதாசன் ஆண்டு மலர்

தென்றல், தென்றல் திரை, முல்லை ஆகிய இதழ்களின் வரிசையில் கவிஞர் கண்ணதாசன், தன் பெயரிலேயே ஆரம்பித்து நடத்திய இதழ் ‘கண்ணதாசன்.’ கவிஞர் கண்ணதாசனின் மனம் கவந்த இதழாக இது இருந்தது.  ஆறு வருடங்கள் வெளிவந்த இவ்விதழ், பொருளாதாரப் பிரச்சனையால் நின்றுபோனது.

பதிப்பு, வெளியீடு

தென்றல், தென்றல் திரை, முல்லை எனப் பல இதழ்களைத் தொடங்கி நடத்திய அனுபவம் மிக்கவர் கவிஞர் கண்ணதாசன். அவர் தனது தனிப்பட்ட கருத்துக்களை, சிந்தனைகளை வெளியிடுவதற்காக, ‘கண்ணதாசன்’ என்னும் தன் பெயரிலேயே இதழ் ஒன்றை ஆரம்பித்தார். ஜனவரி 1, 1968 முதல் வெளிவந்த இவ்விதழின் பக்கங்கள் 160. விலை ரூபாய் ஒன்று. சில மாதங்களுக்குப் பின் ஒன்றரை ரூபாய்க்கு இவ்விதழ் விற்பனையானது. ஆண்டு சந்தா ரூபாய் 6.00/- அப்போது குமுதம் நான்கணா விலைக்கும், ஆனந்த விகடன் முப்பது பைசாவிற்கும் விற்பனை செய்யப்பட்டது. அக்காலகட்டத்தில் மிக அதிகமான விலையில் வந்த ஒரே இலக்கிய இதழ் கண்ணதாசன் தான்.

இராம. கண்ணப்பன் இவ்விதழின் இணை ஆசிரியராக இருந்தார். ஓவியர் அமுதோனின் அழகான ஓவியங்களுடன் இவ்விதழ் வெளிவந்தது. நடுவில் ஒருமுறை நின்று பின் மீண்டும் 1975 வரை வெளிவந்தது.

உள்ளடக்கம்

முதல் இதழில்,

போற்றுபவர் போற்றட்டும்; புழுதிவாரித்

தூற்றுபவர் தூற்றட்டும்; தொடர்ந்து செல்வேன்

ஏற்றதொரு கருத்தை என ( து ) உள்ளம் என்றால்

எடுத்துரைப்பேன்; எவர்வரினும் நில்லேன்; அஞ்சேன்

என்று குறிப்பிட்டுள்ள கவிஞர், மேலும், ”என் இனிய நண்பர்களே! நீண்ட இடைவெளிக்குப் பிறகு கண்ணதாசன் மாத இதழ் உங்கள் கையில் திகழ்கிறது. ஒவ்வொரு தடவையும் கண்ணதாசன் இதழை ஆசையோடும். ஆர்வத்தோடும் துவங்கியிருக்கிறேன். பல்வேறு காரணங்களால் இதழ் சோதிக்கப்பட்டு நின்று போயிருக்கிறது. இந்தத் தடவை இதை நல்ல முறையில் தொடர்ந்து நடத்துவது என்ற உறுதியோடு இதனைத் தொடங்கி யிருக்கிறேன், நண்பர்கள் சிலரின் உதவியோடு.

செல்கின்ற இடங்களிலெல்லாம் நண்பர்கள் விடுத்த வேண்டுகோளுக்கிணங்கவே இது மீண்டும் வருகிறது. இதன் மூலம் பல்வேறு இலக்கியக் கருத்துக்களை உங்களோடு நான் பரிமாறிக் கொள்வேன். கண்ணபிரான் பேரருளால் காலமெல்லாம் இது தழைத்தோங்க நீங்களும் ஒத்துழைக்க வேண்டும்." என்று கூறியுள்ளார்.

“கவிதையிலோ, காவியத்திலோ புதிய மரபுகள் அல்லது புதிய உத்திகள் எவற்றையும்  நான் கைக்கொள்ளவில்லை . இரண்டு யுகங்களுக்கு நடுவில் நான்  நிற்கிறேன் . கடந்த யுகத்தைப் பிரதிபலிக்கிறேன் . வரப்போகும்  யுகத்தைத் துவக்கி வைக்கிறேன் . எத்தகைய விமர்சனத்திற்கும் நான்  எப்போதும் தயாராக இருக்கிறேன் . கூடிப் புகர்வோரைப் போலவே குற்றம் சொல்வோரையும் நான் நேசிக்கிறேன்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.

தலையங்கம் தொடங்கி ஐயம் அகற்று (கேள்வி-பதில் பகுதி) , கவிதைகள், கட்டுரைகள், கதைகள், குறுநாவல்கள் , துணுக்குகள் , பிறமொழிக் கவிதைகள், மொழிபெயர்ப்புகள், வரலாற்றாய்வுகள், நூல்நயம் என இலக்கியத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் கண்ணதாசன் இதழ் இடமளித்தது.

என் ஆர்.தாசனின் தமிழாக்கத்தில் மலையாள மொழிக் கவிதாயினி பாலாமணி அம்மாளின் கவிதை, சரஸ்வதி ராம்நாத் மொழிபெயர்த்த, இப்ரஹீம் ஷெரீஃப் இந்தியில் எழுதிய சிறுகதை, பத்மன் எழுதிய 'ஒரு கூடு காலியாகிறது. வீ. கோவிந்தராசன் எழுதிய 'பிரச்னைகள் ஓயப்போவதில்லை' போன்ற சிறந்த சிறுகதைகள், பேராசிரியர் அச.ஞானசம்பந்தன் எழுதிய 'வாலி - ஒரு புதிய கண்ணோட்டம்' ஆய்வுக் கட்டுரை, விட்டல் ராவ் எழுதிய திருட்டு' சிறுகதை, தேவபாரதி எழுதிய 'அடிமையின் கோபம்' சிறுகதை, ஜே.வி.நாதனின் 'வயிறு' சிறுகதை போன்றவை கண்ணதாசன் இதழில் வெளியாகி இருந்தன. கண்ணதாசன் எழுதிய 'அவளோர் அற்புத ராகம்', 'ஸ்ரீகிருஷ்ண அந்தாதி', 'நன்றோ ! தீதோ?', 'குட்டிக் கதைகள்' போன்ற படைப்புகளும் கண்ணதாசன் இதழில் வெளியாகின.

மூத்த தமிழறிஞர்கள் முதல் இளம் கவிஞர்கள் வரை பலருக்கும் ‘கண்ணதாசன்’ வாய்ப்பளித்தது. ஜெயகாந்தனின் , ‘சினிமாவுக்குப் போன சித்தாளு’ தொடர் இவ்விதழில் வெளியானதுதான்.

கண்ணதாசனின் புகழ்பெற்ற படைப்புகளான ‘ஸ்வர்ண சரஸ்வதி', 'ஸ்ரீகிருஷ்ண மந்திரம்', 'அர்த்தமுள்ள இந்துமதம்', 'வனவாசம்’. 'செப்பு மொழிகள்', 'காதலில் வளர்ந்த காமம்', 'காமத்தில் பிறந்த ஞானம்', 'ஒரு மன்னன் துறவியாகிப் புலம்பிய காவியம்', 'பர்த்ருஹரி காவியம்' போன்றவை கண்ணதாசனில் தொடராக வெளிவந்தவைதான்

பங்களிப்பாளர்கள்

கண்மணிசுப்பு, சுகுமாரன்

புவியரசு

பிரபஞ்சன்

ஜோதிர்லதா கிரிஜா

கே. பக்தவத்சலம்

சிங்காரவேலன்

பாண்டி நாடன்

தமிழ்நாடன்

வே. கந்தசாமி

மு.மேத்தா

சக்திக் கனல்

சிற்பி, வைரமுத்து, நாகை ப.ஜீவா, தேவபாரதி, கொ.மா. கோதண்டம், பூவை ஆறுமுகம், குயிலன்

பிறைச்சூடிப்பித்தன், பூமணி, புலவர் நாக சண்முகம், ப.கங்கைகொண்டான், வல்லிக்கண்ணன், தமிழமுதன், மா.பா.குருசாமி, தமிழாலயன், சோமலெ, பிரதிபா ராஜகோபாலன், ஐராவதம், சா. கந்தசாமி, கம்பதாசன், வண்ணநிலவன், ஐசக் அருமைராசன், ஆ. செகநாதன், எஸ்.ஷாஜஹான், சி.ஆர்.இரவீந்திரன், இமயவ ஆதவன், தமிழன்பன், தமிழவன், நீல பத்மநாபன், ஏர்வாடி எஸ்,ராதாகிருஷ்ணன்,

தி.ஜ. ரங்கநாதன், தி.க. சிவசங்கரன் , ம.ந. ராமசாமி, ஜெகசிற்பியன், கு . சின்னப்பப்பாரதி , என்.ஆர் . தாசன் , வல்லிக்கண்ணன் , டி . செல்வராஜ், ச . செந்தில்நாதன் , கந்தர்வன் , பொன்னீலன் , மு . மேத்தா , சிற்பி , சிகரம் ச. செந்தில்நாதன், சோலை, புவியரசு , நா . காமராசன் , வேலவன், ஜோதிர்லதா கிரிஜா, அறந்தை நாராயணன், வைரமுத்து , நீல பத்மநாபன் , ப . செயப்பிரகாசம் மற்றும் வானம்பாடி கவிஞர்கள் , தாமரை  எழுத்தாளர்கள் ஜெயகாந்தன் , பாலதண்டாயுதம், கு.சின்னப்ப பாரதி, வானம்பாடி இயக்கத்தினர், இராம. கண்ணப்பன், கார்க்கி, கந்தர்வன்




🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.