being created

ஹேரம்பநாதன்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 6: Line 6:
ஹேரம்பநாதன் ஆசிரியர் பயிற்சி முடித்த பின் தஞ்சாவூரில் உள்ள ஶ்ரீ கணேச வித்தியசாலையில் ஆசிரியராக பணியில் இணைந்தார். 1967-ல் இருந்து 2003 வரை 30 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றி தலைமை ஆசிரியராக ஓய்வு பெற்றார்.
ஹேரம்பநாதன் ஆசிரியர் பயிற்சி முடித்த பின் தஞ்சாவூரில் உள்ள ஶ்ரீ கணேச வித்தியசாலையில் ஆசிரியராக பணியில் இணைந்தார். 1967-ல் இருந்து 2003 வரை 30 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றி தலைமை ஆசிரியராக ஓய்வு பெற்றார்.


ஹேரம்பநாதனின் மனைவி பாஷிணி புகழ்பெற்ற இசைவேளாளர் மரபில் வந்த, [[சரபேந்திர பூபாலக் குறவஞ்சி நாடகம்|சரபேந்திர பூபாலக் குறவஞ்சி]] நாடகத்தில் பங்குகொண்ட துரைக்கண்ணு என்னும் ரேவதி அம்மாளின் மகள். மகன்கள் சுவாமிநாதன், ஹரிஹரன்.  
ஹேரம்பநாதனின் மனைவி பாஷிணி புகழ்பெற்ற இசைவேளாளர் மரபில் வந்த, [[சரபேந்திர பூபாலக் குறவஞ்சி நாடகம்|சரபேந்திர பூபாலக் குறவஞ்சி]] நாடகத்தில் பங்குகொண்ட துரைக்கண்ணு என்னும் ரேவதி அம்மாளின் மகள். மகன்கள் சுவாமிநாதன், ஹரிஹரன்.  
== இசை மற்றும் நாட்டியப்பணி ==


== இசை மற்றும் நாட்டியப்பணி ==
1967-ல் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மாணவிகளுக்கு  நாட்டியம் கற்பிக்கத் துவங்கினார். ஹேரம்பநாதனின் மாணவியருக்கு 1970-ல் முதல்  அரங்கேற்றம் நடந்தது. 1986இல் இருந்து நாட்டியம் கற்பிக்க மலேசியா செல்லத் துவங்கினார்.
 
* இவர் தமிழ், தெலுங்கு, மராத்தி ஆகிய மொழிகளில் நாட்டிய நாடகங்களை தயாரித்துள்ளார்.
* மெலட்டூர் சாலியமங்கலத்தில் நடைபெறும் பாகவதா மேளா கலைஞர்களுக்கு 40 ஆண்டுகளுக்கும் மேலாக பயிற்சி அளித்ததன் மூலம் பல மாணவர்களை உருவாக்கினார்.
* காங்கேயம் சிவன் மலை குறவஞ்சி நாடகத்தை உருவாக்கி மேடையேற்றினார்.
* தஞ்சாவூர் ''சிறீ சரபேந்திர பூபாள குறவஞ்சி'' நாடகத்தை மீளுருவாக்கம் செய்து அரங்கேற்றினார்.
* திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி கோயிலில் நடைபெற்றுவந்த கைசிக புராண நாட்டிய நாடகத்ததை மீட்டுருவாக்கத்தில் முக்கிய பங்கேற்று, தன் மாணவ மாணவிகளுடன் முனைவர் அனிதா இரத்னத்தின் வழிகாட்டுதலுடன் 1999 முதல் தொடர்ந்து நடத்தி வந்தவர்.
* தஞ்சை பெரிய கோயிலில் நின்று போன ''சின்னமேளம்'' நாட்டிய விழாவை மீளுருவாக்கம் செய்து 2010 இல் நடைமுறைக்கு கொண்டுவந்து தொடர்ந்து சித்திரைத் திருவிழாவில் நடத்தி வந்தவர்.





Revision as of 22:46, 11 October 2022

தினமணி

பா. ஹேரம்பநாதன் (P. Heramba Nathan; ஜனவரி 12, 1945-மே 10, 2022)தஞ்சாவூரைச் சேர்ந்த பிரபலமான பாகவத மேளா கலைஞர். பரத நாட்டிய ஆசிரியர் இவர் நடன ஆசிரியராக இருந்து 200 -க்கும் மேற்பட்ட அரங்கேற்றங்கள், 1000-கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் என கண்டவர், 60 ஆண்டுகளாக நாட்டிய ஆசிரியராக பணியாற்றியவர்.

பிறப்பு,கல்வி

பா.ஹேரம்பநாதன் தஞ்சாவூரில் புகழ்பெற்ற மிருதங்க வித்வானாகவும், நாட்டிய ஆசிரியராகவும் இருந்த பாவுப் பிள்ளை- கர்நாடக இசைக் கலைஞர்கள் தஞ்சாவூர் சகோதரிகளில் இளையவர் சாவித்திரி அம்மாள் ஆகியோருக்குப் பிறந்தார். நாட்டியப் பள்ளிகளில் பாவுப் பிள்ளை மிருதங்க வித்வானாக இருந்துவந்தார். ஏழுவயதில் இருந்து ஹேரம்பநாதன் தஞ்சாவூர் இராஜம் ஐயரிடம் 10 ஆண்டுகள் மிருதங்கம் பயின்றார். பின்னர் இவரின் தந்தையின் மாணவிகளின் அரங்கேற்றத்தின் போது வாசிக்கத் துவங்கினார். தந்தையுடன் சென்றுவந்த ஹேரம்பநாதனுக்கு நாட்டியக் கலையின்மீது ஆர்வம் ஏற்பட்டது. பின்னர் இவரே முயன்று நட்டுவாங்கம் வாசிக்க கற்றுக் கொள்ளத் துவங்கினார். பின்னர் இவரது தந்தை இவருக்கு நட்டுவாங்கம் கற்பித்தார்.

தனி வாழ்க்கை

ஹேரம்பநாதன் ஆசிரியர் பயிற்சி முடித்த பின் தஞ்சாவூரில் உள்ள ஶ்ரீ கணேச வித்தியசாலையில் ஆசிரியராக பணியில் இணைந்தார். 1967-ல் இருந்து 2003 வரை 30 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றி தலைமை ஆசிரியராக ஓய்வு பெற்றார்.

ஹேரம்பநாதனின் மனைவி பாஷிணி புகழ்பெற்ற இசைவேளாளர் மரபில் வந்த, சரபேந்திர பூபாலக் குறவஞ்சி நாடகத்தில் பங்குகொண்ட துரைக்கண்ணு என்னும் ரேவதி அம்மாளின் மகள். மகன்கள் சுவாமிநாதன், ஹரிஹரன்.

இசை மற்றும் நாட்டியப்பணி

1967-ல் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மாணவிகளுக்கு நாட்டியம் கற்பிக்கத் துவங்கினார். ஹேரம்பநாதனின் மாணவியருக்கு 1970-ல் முதல் அரங்கேற்றம் நடந்தது. 1986இல் இருந்து நாட்டியம் கற்பிக்க மலேசியா செல்லத் துவங்கினார்.

  • இவர் தமிழ், தெலுங்கு, மராத்தி ஆகிய மொழிகளில் நாட்டிய நாடகங்களை தயாரித்துள்ளார்.
  • மெலட்டூர் சாலியமங்கலத்தில் நடைபெறும் பாகவதா மேளா கலைஞர்களுக்கு 40 ஆண்டுகளுக்கும் மேலாக பயிற்சி அளித்ததன் மூலம் பல மாணவர்களை உருவாக்கினார்.
  • காங்கேயம் சிவன் மலை குறவஞ்சி நாடகத்தை உருவாக்கி மேடையேற்றினார்.
  • தஞ்சாவூர் சிறீ சரபேந்திர பூபாள குறவஞ்சி நாடகத்தை மீளுருவாக்கம் செய்து அரங்கேற்றினார்.
  • திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி கோயிலில் நடைபெற்றுவந்த கைசிக புராண நாட்டிய நாடகத்ததை மீட்டுருவாக்கத்தில் முக்கிய பங்கேற்று, தன் மாணவ மாணவிகளுடன் முனைவர் அனிதா இரத்னத்தின் வழிகாட்டுதலுடன் 1999 முதல் தொடர்ந்து நடத்தி வந்தவர்.
  • தஞ்சை பெரிய கோயிலில் நின்று போன சின்னமேளம் நாட்டிய விழாவை மீளுருவாக்கம் செய்து 2010 இல் நடைமுறைக்கு கொண்டுவந்து தொடர்ந்து சித்திரைத் திருவிழாவில் நடத்தி வந்தவர்.













🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.