under review

மறைமலையடிகள்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 8: Line 8:


== தனிவாழ்க்கை ==
== தனிவாழ்க்கை ==
1893இல் மனோன்மணியம் நாடகம் வெளிவந்தபோது அதைப் படித்துவிட்டு இவர் எழுதிய கடிதம் பேரா. சுந்தரம்பிள்ளையுடன் அறிமுகமாகக் காரணமானது. இவர் சுந்தரம் பிள்ளையைக் காண திருவனந்தபுரத்திற்குச் சென்றார். இவர் தமிழாசிரியராகப் பணியாற்றும் தகுதியுடையவர் என்ற சிபாரிசுக் கடிதத்தை சுந்தரம் பிள்ளை இவருக்குத் கொடுத்தார். 1896இல் திருவனந்தபுரம் பள்ளி ஒன்றில் தமிழாசிரியராகச் சேர்ந்தார்.  
1893இல் மனோன்மணியம் நாடகம் வெளிவந்தபோது அதைப் படித்துவிட்டு இவர் எழுதிய கடிதம் பேரா. சுந்தரம்பிள்ளையுடன் அறிமுகமாகக் காரணமாகியது. சுந்தரம் பிள்ளையைக் காண திருவனந்தபுரத்திற்குச் சென்றார். இவர் தமிழாசிரியராகப் பணியாற்றும் தகுதியுடையவர் என்ற சிபாரிசுக் கடிதத்தை சுந்தரம் பிள்ளை இவருக்குத் கொடுத்தார். 1896 இல் திருவனந்தபுரம் பள்ளி ஒன்றில் தமிழாசிரியராகச் சேர்ந்தார்.  


1893இல் திருவனந்தபுரத்தில் இருந்த சைவசித்தாந்த சபையில் சித்தாந்த பாடம் நடத்தினார். 1898 முதல் 1911 வரை 13 ஆண்டுகள் சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரியில் ஆசிரியர் ஆனார். இக்காலங்களில் [[பரிதிமாற்கலைஞர்]] இக்கல்லூரியில் ஆசிரியராக இருந்தார். அடிகளாரின் மாணவர்களில் செங்கல்வராய பிள்ளை, டி.கே.சிதம்பரநாத முதலியார், சோமசுந்தரபாரதி, [[எஸ். வையாபுரிப் பிள்ளை]] ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்.
1893இல் திருவனந்தபுரத்தில் இருந்த சைவசித்தாந்த சபையில் சித்தாந்த பாடம் நடத்தினார். 1898 முதல் 1911 வரை 13 ஆண்டுகள் சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரியில் ஆசிரியர் ஆனார். இக்காலங்களில் [[பரிதிமாற்கலைஞர்]] இக்கல்லூரியில் ஆசிரியராக இருந்தார். அடிகளாரின் மாணவர்களில் செங்கல்வராய பிள்ளை, டி.கே.சிதம்பரநாத முதலியார், சோமசுந்தரபாரதி, [[எஸ். வையாபுரிப் பிள்ளை]] ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்.


1911லிருந்து சென்னை, பல்லாவரத்தில் தன்னை சமரச சன்மார்க்க குருபோதகராக அறிவித்துக்கொண்டார். சைவப் பணியை மக்கள் பணி என ஆக்கிக்கொண்டார். சுவாமி என்ற அடைமொழி இவருடன் சேர்ந்துகொண்டது.1914இல் கொழும்பு சென்றபோது தனிக்கூட்டங்களில் பேசியதற்குக் கிடைத்த பணத்தில்தான் பல்லாவரத்தில் அவருடைய இல்லம் கட்டப்பட்டது
1911லிருந்து சென்னை, பல்லாவரத்தில் தன்னை சமரச சன்மார்க்க குருபோதகராக அறிவித்துக்கொண்டார். சைவப் பணியை மக்கள் பணி என ஆக்கிக்கொண்டார். அதன்பின் சுவாமி என்ற அடைமொழி இவருடன் சேர்ந்துகொண்டது.1914இல் கொழும்பு சென்றபோது தனிக்கூட்டங்களில் பேசியதற்குக் கிடைத்த பணத்தில் பல்லாவரத்தில் அவருடைய இல்லம் கட்டப்பட்டது


மறைமலையடிகள் சித்தமருத்துவம் இயற்கைவாழ்க்கை முறை ஆகியவற்றில் ஈடுபாடுள்ளவர். உணவு உண்பதில் தனிக்கவனம் எடுத்துக்கொண்டவர். மலச்சிக்கல் இல்லாமல் வாழ்வதே அறிவுத்தெளிவு பிறக்கும் என்பதைத் தினமும் பின்பற்றி எனிமா எடுத்துக்கொண்டவர் என அவருடைய வாழ்க்கை வரலாற்றாசிரியர் மறை.திருநாவுக்கரசு குறிப்பிடுகிறார்.  
மறைமலையடிகள் சித்தமருத்துவம் இயற்கைவாழ்க்கை முறை ஆகியவற்றில் ஈடுபாடுள்ளவர். உணவு உண்பதில் தனிக்கவனம் எடுத்துக்கொண்டவர். மலச்சிக்கல் இல்லாமல் வாழ்வதே அறிவுத்தெளிவு பிறக்கும் என்பதைத் தினமும் பின்பற்றி எனிமா எடுத்துக்கொண்டவர் என அவருடைய வாழ்க்கை வரலாற்றாசிரியர் மறை.திருநாவுக்கரசு குறிப்பிடுகிறார்.  
Line 20: Line 20:
== இதழியல் ==
== இதழியல் ==


* இளமையில் மீனலோசனி என்ற செய்தித்தாளுக்குச் செய்தித் தொகுப்பாளராகப் பணியாற்றி வந்தார். சோமசுந்தர நாயக்கர் பரிந்துரையினால் ஜே.எம். நல்லுசாமிப் பிள்ளையின் ’சித்தாந்த தீபிகை’ என்னும் தமிழ் இதழின் ஆசிரியப் பொறுப்பை ஏற்றார். ஐந்து இதழ்களில் தொடர்ந்து எழுதியுள்ளார். திருமந்திரம், சிவஞான சித்தியார், தாயுமானவர் பாடல்கள் சிலவற்றிற்கு இந்தப் பத்திரிகைகளில் உரை எழுதினார். இந்த இதழில் குறிஞ்சிப்பாட்டு உரை வந்தது.  
* இளமையில் மீனலோசனி என்ற செய்தித்தாளுக்குச் செய்தித் தொகுப்பாளராகப் பணியாற்றி வந்தார். சோமசுந்தர நாயக்கர் பரிந்துரையினால் [[ஜே.எம். நல்லுச்சாமிப்பிள்ளை]] நடத்திய ’சித்தாந்த தீபிகை’ என்னும் தமிழ் இதழின் ஆசிரியப் பொறுப்பை ஏற்றார். ஐந்து இதழ்களில் தொடர்ந்து எழுதியுள்ளார். திருமந்திரம், சிவஞான சித்தியார், தாயுமானவர் பாடல்கள் சிலவற்றிற்கு இந்தப் பத்திரிகைகளில் உரை எழுதினார். இந்த இதழில் குறிஞ்சிப்பாட்டு உரை வந்தது.  
* ஞானசாகரம் என்ற இதழை 1902-ஆம் ஆண்டு தொடங்கி நடத்தினார் அதனைப் பின்னர் அறிவுக்கடல் என்று தனித் தமிழில் பெயர் மாற்றம் செய்தார்.இந்த இதழில் மாணிக்கவாசகர் காலம், தொல்காப்பியர் காலம், தமிழ்-வடமொழி பிறத்தல் பரிமேலழகர் உரை ஆராய்ச்சி ஆகியன வெளிவந்தன.1915இல் கொழும்பு, இமயமலைச் சாரல் எனப் பல்வேறு இடங்களில் பயணித்தபோது அறிவுக்கடல் நின்றுவிட்டது.  
* ஞானசாகரம் என்ற இதழை 1902-ஆம் ஆண்டு தொடங்கி நடத்தினார் அதனைப் பின்னர் அறிவுக்கடல் என்று தனித் தமிழில் பெயர் மாற்றம் செய்தார்.இந்த இதழில் மாணிக்கவாசகர் காலம், தொல்காப்பியர் காலம், தமிழ்-வடமொழி பிறத்தல் பரிமேலழகர் உரை ஆராய்ச்சி ஆகியன வெளிவந்தன.1915இல் கொழும்பு, இமயமலைச் சாரல் எனப் பல்வேறு இடங்களில் பயணித்தபோது அறிவுக்கடல் நின்றுவிட்டது.  
* 1906-1908ஆம் ஆண்டுகளில் (The Oriental Mystic) என்ற பெயரில் சைவ சித்தாந்த ஆங்கிலப் பத்திரிகை ஒன்று நடத்தினார்.
* 1906-1908ஆம் ஆண்டுகளில் (The Oriental Mystic) என்ற பெயரில் சைவ சித்தாந்த ஆங்கிலப் பத்திரிகை ஒன்று நடத்தினார்.
*ORIENTAL MYSTIC OF MYNA (1908)THE OCEAN OF WISDOM (1935) என்னும் இரண்டு ஆங்கில இதழ்களை நடத்தினார்.


== அமைப்புச்செயல்பாடுகள் ==
== அமைப்புச்செயல்பாடுகள் ==
Line 32: Line 33:


== இலக்கியவாழ்க்கை ==
== இலக்கியவாழ்க்கை ==
மறைமலை அடிகளின் எழுத்துப்பணி மூன்று களங்களைச் சேர்ந்தது. தனித்தமிழியக்கம், சைவ மறுமலர்ச்சி இயக்கம், நவீனத் தமிழிலக்கியம். அவர் இதழியலாளராகவும் பேச்சாளராகவும் இம்மூன்று தளங்களிலும் செயல்பட்டார். தனித்தமிழியக்க முன்னோடியாக சம்ஸ்கிருதக் கலப்பில்லாத தமிழில் மேடையில் பேசுவதையும் எழுதுவதையும் வழக்கமாக்கினார். தனித்தமிழியக்கம், பழந்தமிழ் இலக்கியம் பற்றி 11 நூல்களை எழுதினார். சைவம் பற்றி 5 பொதுவான நூல்களும் 5 ஆய்வு நூல்களும் எழுதினார். நவீன இலக்கியம், அறிவியல் சார்ந்த களத்தில் 6 அறிவியல்நூல்கள் ஒரு நாடகம் இரண்டு நாவல்கள் எழுதினார்.  
மறைமலை அடிகளின் எழுத்துப்பணி மூன்று களங்களைச் சேர்ந்தது. அ.தனித்தமிழியக்கம் ஆ. சைவ மறுமலர்ச்சி இயக்கம் இ. நவீனத் தமிழிலக்கியம். அவர் இதழியலாளராகவும் பேச்சாளராகவும் இம்மூன்று தளங்களிலும் செயல்பட்டார். தனித்தமிழியக்க முன்னோடியாக சம்ஸ்கிருதக் கலப்பில்லாத தமிழில் மேடையில் பேசுவதையும் எழுதுவதையும் வழக்கமாக்கினார். தனித்தமிழியக்கம், பழந்தமிழ் இலக்கியம் பற்றி 11 நூல்களை எழுதினார். சைவம் பற்றி 5 பொதுவான நூல்களும் 5 ஆய்வு நூல்களும் எழுதினார். நவீன இலக்கியம், அறிவியல் சார்ந்த களத்தில் 6 அறிவியல்நூல்கள் ஒரு நாடகம் இரண்டு நாவல்கள் எழுதினார்.மறைமலை அடிகளாரின் இரண்டு நாவல்களுமே தழுவல்கள். தூய தமிழில் நீண்ட வாக்கியங்களில் அமைந்த இந்த நாவல்கள் வெளிவந்த காலத்திலேயே யதார்த்தம் அற்ற படைப்பு என்னும் விமர்சனத்துக்கு உள்ளாயிருக்கின்றன.  
 
மறைமலை அடிகளாரின் இரண்டு நாவல்களுமே தழுவல்கள். தூய தமிழில் நீண்ட வாக்கியங்களில் அமைந்த இந்த நாவல்கள் வெளிவந்த காலத்திலேயே யதார்த்தம் அற்ற படைப்பு என்னும் விமர்சனத்துக்கு உள்ளாயிருக்கின்றன.  


1908இல் எடிசன் ஆங்கிலத்தில் எழுதிய ஆறு கட்டுரைகளை அடிகள் மொழிபெயர்த்திருக்கிறார். முருகவேள் என்னும் புனைபெயரில் இந்நூல் வந்தது. இதில் மறைமலையடிகளின் வாழ்க்கைக்குறிப்பும் விரிவான ஆங்கில முகவுரையும் உண்டு. இலங்கைப் பள்ளிகளில் இது பாடத்திட்டத்தில் இருந்தது.1907இல் இவர் காளிதாசனின் சாகுந்தலத்தை மொழி பெயர்த்தார். இதற்கு ஆராய்ச்சியுரையும் வெளியிட்டார். இந்த மொழிபெயர்ப்பு நூல் சென்னைக் கல்லூரிகள் பாடத்திட்டத்தில் இருந்திருக்கிறது
1908இல் எடிசன் ஆங்கிலத்தில் எழுதிய ஆறு கட்டுரைகளை அடிகள் மொழிபெயர்த்திருக்கிறார். முருகவேள் என்னும் புனைபெயரில் இந்நூல் வந்தது. இதில் மறைமலையடிகளின் வாழ்க்கைக்குறிப்பும் விரிவான ஆங்கில முகவுரையும் உண்டு. இலங்கைப் பள்ளிகளில் இது பாடத்திட்டத்தில் இருந்தது.1907இல் இவர் காளிதாசனின் சாகுந்தலத்தை மொழி பெயர்த்தார். இதற்கு ஆராய்ச்சியுரையும் வெளியிட்டார். இந்த மொழிபெயர்ப்பு நூல் சென்னைக் கல்லூரிகள் பாடத்திட்டத்தில் இருந்திருக்கிறது
Line 44: Line 43:


== நூல் நிலையம் ==
== நூல் நிலையம் ==
மறைமலை அடிகள் தன் பல்லாவரம் வீட்டில் ஒரு நூல் நிலையத்தை அமைத்தார். 1914இல் இங்கு 4000 தமிழ், வடமொழி, ஆங்கில நூல்கள் இருந்தன. பின்னர் இது பெரிய நூல் நிலையமானது. தன் இறுதிக்காலத்தில் இவர் எழுதிய உயிலில் தன் நூல் நிலையத்தைப் பொதுமக்களுக்கு உரிமையாக்கினார். தன் புத்தகங்களின் பதிப்புரிமைத் தொகை மக்களுக்கே என்றும் எழுதிவைத்தார். மறைமலை அடிகள் நூலகம் வரை செயல்பட்டது.
மறைமலை அடிகள் தன் பல்லாவரம் வீட்டில் ஒரு நூல் நிலையத்தை அமைத்தார். 1914இல் இங்கு 4000 தமிழ், வடமொழி, ஆங்கில நூல்கள் இருந்தன. பின்னர் இது பெரிய நூல் நிலையமானது. தன் இறுதிக்காலத்தில் இவர் எழுதிய உயிலில் தன் நூல் நிலையத்தைப் பொதுமக்களுக்கு உரிமையாக்கினார். தன் புத்தகங்களின் பதிப்புரிமைத் தொகை மக்களுக்கே என்றும் எழுதிவைத்தார். 1958 ல் மறைமலை அடிகளின் மருமகனும் திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக தலைவருமான வி.சுப்பையா பிள்ளை தலைமையில் மறைமலை அடிகள் நூலகம் என்னும் அமைப்பு லிங்கி செட்டி தெருவில் உருவாக்கப்பட்டு மேலும் நூல்களும் சேர்க்கப்பட்டு பொதுப்பயன்பாட்டுக்கு அளிக்கப்பட்டது.  1779 முதல் இருநூறாண்டுக்காலம் வெளியான நூல்கள் அதில் இருந்தன. 2008 மே மாதம் இடச்சிக்கலால் இந்நூலகம் மூடப்பட்டது. அரசு அளித்த உதவியின்படி சென்னை கன்னிமாரா நூலகத்திற்கு மறைமலை அடிகள் நூலக நூல்கள் கொடுக்கப்பட்டு தனிப்பிரிவாக செயல்பட்டு வருகின்றது.  


== சைவசமயம் ==
== சைவசமயம் ==
மறைமலையடிகள் தமிழகத்திலும் இலங்கையிலும் சைவம் பரப்பப் பயணம் செய்தார். சமயம் தொடர்பாக இவர் எழுதிய 5 நூல்களில் திருவொற்றியூர் மும்மணிக் கோவையின் (1900) பாடல்கள் சங்கப் பாடல்களின் நடையை ஒத்தவை. திருப்பாதிரிப்புலியூர் சைவ மாநாட்டில் (1902) பழந்தமிழ் கொள்கையே சைவசமயம் என்னும் தலைப்பிலும், திருச்சி சைவ மாநாட்டில் (1927) கடவுள் நிலைக்கு மாறான கொள்கை சைவம் ஆகா என்ற தலைப்பிலும் (1929) பேசிய பேச்சுகள் புத்தகங்களாக வந்துள்ளன.
மறைமலையடிகள் தமிழகத்திலும் இலங்கையிலும் சைவம் பரப்பப் பயணம் செய்தார். சமயம் தொடர்பாக இவர் எழுதிய 5 நூல்களில் திருவொற்றியூர் மும்மணிக் கோவையின் (1900) பாடல்கள் சங்கப் பாடல்களின் நடையை ஒத்தவை. திருப்பாதிரிப்புலியூர் சைவ மாநாட்டில் (1902) பழந்தமிழ் கொள்கையே சைவசமயம் என்னும் தலைப்பிலும், திருச்சி சைவ மாநாட்டில் (1927) கடவுள் நிலைக்கு மாறான கொள்கை சைவம் ஆகா என்ற தலைப்பிலும் (1929) பேசிய பேச்சுகள் புத்தகங்களாக வந்துள்ளன.


சாதி தொடர்பாக மறைமலையடிகள் 1923இல் எழுதிய "சாதி வேற்றுமையும் போலிச்சைவரும், வேளாளர் நாகரிகம் பண்டைத் தமிழர், ஆரியர், தமிழர் மதம் (1940) என்னும் நூல்களின் மையம் சைவசமயம் தான். பச்சையப்பர் கல்லூரியில் நடந்த தமிழர் மத மாநாட்டில் (1940) பேசிய பேச்சு தமிழர் மதம் என்னும் நூலாக வந்தது.
சாதி தொடர்பாக மறைமலையடிகள் 1923இல் எழுதிய "சாதி வேற்றுமையும் போலிச்சைவரும், வேளாளர் நாகரிகம் பண்டைத் தமிழர், ஆரியர், தமிழர் மதம் (1940) என்னும் நூல்களின் மையம் சைவசமயம் தான். பச்சையப்பர் கல்லூரியில் நடந்த தமிழர் மத மாநாட்டில் (1940) பேசிய பேச்சு தமிழர் மதம் என்னும் நூலாக வந்தது. மதம் என்ற சொல்லே மாணிக்கவாசகர் காலத்துக்குப் பின் தோன்றியது; தமிழர்கள் ஒளி வணக்கம் உடையவர்; காலைக் கதிரவன் முருகன்; மாலைக் கதிரொளி சிவன்; நீரின் நிலம் பார்வதி; சிவலிங்க வடிவம் நெருப்புக் குழி என்றெல்லாம் விரிவான களத்தை எழுப்பி தமிழர் மதமும் சாதியும் தொடர்பற்றவை என்ற கருத்தை உணர்த்துகிறார்.''தனவைசியர் ஊழியர்'' நூலில் வந்த கட்டுரை வேளாளர் நாகரிகம் (1923). மறைமலையடிகள் 1921இல் யாழ்ப்பாணத்தில் இதே தலைப்பில் விரிவாகச் சொற்பொழிவாற்றியபோது யாழ்ப்பாணம் ந.சி. கந்தையாபிள்ளை பேச்சு முடிந்ததும் ரூ.200 அன்பளிப்பாக வழங்கினார் என்று குறிப்பிடப்படுகிறது
மதம் என்ற சொல்லே மாணிக்கவாசகர் காலத்துக்குப் பின் தோன்றியது; தமிழர்கள் ஒளி வணக்கம் உடையவர்; காலைக் கதிரவன் முருகன்; மாலைக் கதிரொளி சிவன்; நீரின் நிலம் பார்வதி; சிவலிங்க வடிவம் நெருப்புக் குழி என்றெல்லாம் விரிவான களத்தை எழுப்பி தமிழர் மதமும் சாதியும் தொடர்பற்றவை என்ற கருத்தைப் பூடகமாக உணர்த்துகிறார்.
தனவைசியர் ஊழியர் நூலில் வந்த கட்டுரை வேளாளர் நாகரிகம் (1923). மறைமலையடிகள் 1921இல் யாழ்ப்பாணத்தில் இதே தலைப்பில் விரிவாகச் சொற்பொழிவாற்றியபோது யாழ்ப்பாணம் ந.சி. கந்தையாபிள்ளை பேச்சு முடிந்ததும் ரூ.200 அன்பளிப்பாக வழங்கினார் என்று குறிப்பிடப்படுகிறது


=== சொற்பொழிவாளர் ===
=== சொற்பொழிவாளர் ===
மறைமலையடிகள் தமிழகத்திலும் பிற இடங்களிலும் பயணித்து பல தனிச் சொற்பொழிவுகள் செய்து சைவம் பரப்பினார். 1906ஆம் ஆண்டில் சைவசித்தாந்த சமாஜம் சார்பாகச் சிதம்பரத்தில் நடந்த சைவ மாநாட்டிற்குக் கொழும்பு ராமநாதன் தலைமை தாங்கினார். இம்மாநாட்டில் ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் ”Theistic Aspect of Saiva Sidhanda” , ”ஹடயோக ராஜயோக பிராணாயாமம்” என்னும் தலைப்புகளில்  மறைமலையடிகள் பேசினார்.  நாகப்பட்டினம், திருச்சி, மதுரையில் சைவமாநாடுகளில் அடிகள் பங்கு கொண்டிருக்கிறார்.
மறைமலையடிகள் தமிழகத்திலும் பிற இடங்களிலும் பயணித்து பல தனிச் சொற்பொழிவுகள் செய்து சைவம் பரப்பினார். 1906ஆம் ஆண்டில் சைவசித்தாந்த சமாஜம் சார்பாகச் சிதம்பரத்தில் நடந்த சைவ மாநாட்டிற்குக் கொழும்பு ராமநாதன் தலைமை தாங்கினார். இம்மாநாட்டில் ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் ”Theistic Aspect of Saiva Sidhanda” , ”ஹடயோக ராஜயோக பிராணாயாமம்” என்னும் தலைப்புகளில்  மறைமலையடிகள் பேசினார்.  நாகப்பட்டினம், திருச்சி, மதுரையில் சைவமாநாடுகளில் மறைமலை அடிகள் பங்கு கொண்டிருக்கிறார்.


1914ஆம் ஆண்டிலும் 1917ஆம் ஆண்டிலும் இவர் கொழும்பு சென்று பேசியிருக்கிறார். 1915இல் இமயமலை சென்றபோது அங்கே ஒரு கூட்டத்தில் சைவ சமயம், சித்தாந்தம் பற்றி ஆங்கிலத்தில் பேசினார். 1921-22ஆம் ஆண்டுகளில் இவர் கொழும்பில் இருந்தபோது சைவசித்தாந்த வகுப்பும் நடத்தியிருக்கிறார்
1914ஆம் ஆண்டிலும் 1917ஆம் ஆண்டிலும் இவர் கொழும்பு சென்று பேசியிருக்கிறார். 1915இல் இமயமலை சென்றபோது அங்கே ஒரு கூட்டத்தில் சைவ சமயம், சித்தாந்தம் பற்றி ஆங்கிலத்தில் பேசினார். 1921-22ஆம் ஆண்டுகளில் இவர் கொழும்பில் இருந்தபோது சைவசித்தாந்த வகுப்பும் நடத்தியிருக்கிறார்
Line 61: Line 58:
"மாணிக்கவாசகர் காலமும் வரலாறும்” என்ற நூல் இருபது ஆண்டுகளாக ஆராய்ந்த முடிவுகள் உள்ள நூலாகும். இந்த நூல் சைவசமயக் குரவரான மாணிக்க வாசகரின் காலத்தைப் கூறுவதற்காக எழுதப்பட்டது என்றாலும், தொல்காப்பியர் ஆழ்வார்கள், சேக்கிழார் எனப் பலரின் காலத்தையும் இந்நூல் கணிக்கிறது.
"மாணிக்கவாசகர் காலமும் வரலாறும்” என்ற நூல் இருபது ஆண்டுகளாக ஆராய்ந்த முடிவுகள் உள்ள நூலாகும். இந்த நூல் சைவசமயக் குரவரான மாணிக்க வாசகரின் காலத்தைப் கூறுவதற்காக எழுதப்பட்டது என்றாலும், தொல்காப்பியர் ஆழ்வார்கள், சேக்கிழார் எனப் பலரின் காலத்தையும் இந்நூல் கணிக்கிறது.


பாண்டியர் கல்வெட்டுகளில் கூறப்படும் வரகுணன் மணிவாசகர் கூறும் வரகுணன் அல்லன். இதனால் மணிவாசகர் காலத்தைப் பின்னுக்குக் கொண்டுசெல்கிறார் மறைமலையடிகள். இந்த நூலில் இராமன் கற்பனைப் பாத்திரம், விநாயகர்முருகன் போன்றோரின் பிறப்பு பற்றியவை கட்டுக்கதைகளே என்பன போன்ற கருத்துகளும் சொல்லப்படுகின்றன. ஒருவகையில் மொத்தத் தமிழ் இலக்கிய, தமிழக வரலாற்றைக் கூறுவதற்கு இந்த நூலைப் பயன்படுத்தி இருக்கிறார் மறைமலையடிகள் என்றும் கூறலாம்.
பாண்டியர் கல்வெட்டுகளில் கூறப்படும் வரகுணன் மணிவாசகர் கூறும் வரகுணன் அல்லன் என்று சொல்லி மணிவாசகர் காலத்தைப் பின்னுக்குக் கொண்டுசெல்கிறார் மறைமலையடிகள். இந்த நூலில் இராமன் கற்பனைப் பாத்திரம், விநாயகர்முருகன் போன்றோரின் பிறப்பு பற்றியவை கட்டுக்கதைகளே என்பன போன்ற கருத்துகளும் சொல்லப்படுகின்றன. ஒருவகையில் மொத்தத் தமிழ் இலக்கிய, தமிழக வரலாற்றைக் கூறுவதற்கு இந்த நூலைப் பயன்படுத்தி இருக்கிறார் மறைமலையடிகள் என்றும் கூறலாம்.


====== ஆய்வு முடிவுகள் மறுப்பு ======
பல்லவர்களின் காலத்துக்கு முன் தமிழகத்தில் கல்வெட்டுகள் கிடைக்கவில்லை; ஆதிசங்கரருக்கு முன்பே மாயாவாதத் தத்துவம் தமிழகத்தில் இருந்தது; ராமாயணம் கற்பனையான காவியம்; மகாபாரதம் யதார்த்தமானது; ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் கி.பி. 10ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர்கள்; வட்டெழுத்து 6000 ஆண்டுகளாகத் தமிழகத்தில் வழங்கிவருகிறது என்பது போன்ற இவருடைய ஆய்வு முடிவுகளை அதிகாரபூர்வமான சான்றுகளுடன் மறுத்து எழுதிய ஆய்வுகள் வந்துவிட்டன.
வரலாற்றுப் பேராசிரியர்களான நீலகண்ட சாஸ்திரி, கே.கே. பிள்ளை, சத்தியநாத அய்யர், பி.பி. ஸ்ரீனிவாச அய்யங்கார் போன்றோர் பல்லவர்களைப் பற்றிக் கூறிய முடிவுகளுக்கு மாறானது மறைமலையடிகளின் ஆய்வு. ஆழ்வார்களின் காலம் கி.பி. 10ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்பதைப் பலரும் நிறுவியுள்ளனர். பல்லவருக்கு முந்திய காலத்தவை என்று கருதப்படும் தமிழ் பிராமி கல்வெட்டுகள் ஆழமான ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன. வட்டெழுத்து வடிவம் 6000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்ற அடிகளின் கருத்து கூட விரிவாக மறுக்கப்பட்டுள்ளது.
== இலக்கிய இடம் ==
== இலக்கிய இடம் ==
அடிகளின் ஆராய்ச்சி முடிவுகள் இவரது சமகாலத்திலும் பிற்காலத்திலும் இவரது பெரும்பாலானவை ஒப்புக்கொள்ளப் படவில்லை, தமிழிலக்கிய வரலாற்றாசிரியர்கள் இவரை ஆய்வாளராக அடையாளம் காட்டவில்லை என்று அ.கா. பெருமாள் தமிழறிஞர்கள் புத்தகத்தில் குறிப்பிடுகிறார். சைவப்பற்று, தனித்தமிழில் உறுதி என்பதற்காக இவர் கொண்டாடப்படுகிறார்.
அடிகளின் ஆராய்ச்சி முடிவுகள் இவரது சமகாலத்திலும் பிற்காலத்திலும் இவரது பெரும்பாலானவை ஒப்புக்கொள்ளப் படவில்லை, தமிழிலக்கிய வரலாற்றாசிரியர்கள் இவரை ஆய்வாளராக அடையாளம் காட்டவில்லை என்று அ.கா. பெருமாள் தமிழறிஞர்கள் புத்தகத்தில் குறிப்பிடுகிறார். சைவப்பற்று, தனித்தமிழில் உறுதி என்பதற்காக இவர் கொண்டாடப்படுகிறார்.
=== ஆய்வு முடிவுகள் மறுப்பு ===
பல்லவர்களின் காலத்துக்கு முன் தமிழகத்தில் கல்வெட்டுகள் கிடைக்கவில்லை; ஆதிசங்கரருக்கு முன்பே மாயாவாதத் தத்துவம் தமிழகத்தில் இருந்தது; ராமாயணம் கற்பனையான காவியம்; பாரதம் யதார்த்தமானது; ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் கி.பி. 10ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர்கள்; வட்டெழுத்து 6000 ஆண்டுகளாகத் தமிழகத்தில் வழங்கிவருகிறது என்பது போன்ற இவரின் ஆய்வு முடிவுகளை அதிகாரபூர்வமான சான்றுகளுடன் மறுத்து எழுதிய ஆய்வுகள் வந்துவிட்டன.
வரலாற்றுப் பேராசிரியர்களான நீலகண்ட சாஸ்திரி, கே.கே. பிள்ளை, சத்தியநாத அய்யர், பி.பி. ஸ்ரீனிவாச அய்யங்கார் போன்றோர் பல்லவர்களைப் பற்றிக் கூறிய முடிவுகளுக்கு மாறானது மறைமலையடிகளின் ஆய்வு. ஆழ்வார்களின் காலம் கி.பி. 10ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்பதைப் பலரும் நிறுவியுள்ளனர். பல்லவருக்கு முந்திய காலத்தது என்று கருதப்படும் தமிழ் பிராமி கல்வெட்டுகள் ஆழமான ஆய்வுக்குட்பட்டதைத் தமிழறிஞர் அறிவர். வட்டெழுத்து வடிவம் 6000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்ற அடிகளின் கருத்து கூட விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது.


== மறைவு ==
== மறைவு ==
இறுதிக்காலத்தில் பல்லாவரத்தில் காவியுடை அணிந்து துறவுக் கோலத்தில் இருந்தார். செப்டம்பர் 15, 1950-ல் தமது எழுபத்தைந்தாவது வயதில் காலமானார்.
இறுதிக்காலத்தில் பல்லாவரத்தில் காவியுடை அணிந்து துறவுக் கோலத்தில் இருந்தார். செப்டம்பர் 15, 1950-ல் தமது எழுபத்தைந்தாவது வயதில் காலமானார்.
== வாழ்க்கை வரலாறுகள், நினைவகங்கள் ==
== வாழ்க்கை வரலாறுகள், நினைவகங்கள் ==
மறைமலை அடிகளை பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு மறைமலை அடிகள் பிள்ளைத்தமிழ் பாடப்பட்டுள்ளது. மறைமலையடிகள் 50 ஆண்டுகள் தொடர்ந்து நாட்குறிப்பு எழுதியிருக்கிறார். இதன் அடிப்படையில் இவரது வரலாற்றை இவரது மகன் மறை. திருநாவுக்கரசு எழுதியிருக்கிறார்.  
மறைமலை அடிகளை பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு மறைமலை அடிகள் பிள்ளைத்தமிழ் பாடப்பட்டுள்ளது. மறைமலையடிகள் 50 ஆண்டுகள் தொடர்ந்து நாட்குறிப்பு எழுதியிருக்கிறார். இதன் அடிப்படையில் இவரது வரலாற்றை இவரது மகன் மறை. திருநாவுக்கரசு எழுதியிருக்கிறார்.  
Line 171: Line 166:
* அ.கா. பெருமாள்: தமிழறிஞர்கள் புத்தகம்
* அ.கா. பெருமாள்: தமிழறிஞர்கள் புத்தகம்
* http://www.tamilvu.org/ta/courses-degree-p102-p1021-html-p1021551-24748
* http://www.tamilvu.org/ta/courses-degree-p102-p1021-html-p1021551-24748
*http://www.nellaikavinesan.com/2020/11/blog-post_30.html
*https://www.hindutamil.in/news/blogs/51381-10-2.html
*https://tamilnation.org/hundredtamils/maraimalai.htm
*[https://freetamilebooks.com/authors/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/ https://freetamilebooks.com]


<!-- This is an invisible comment. Please edit the section below when article is ready to be moved across stages. Do not remove the section -->
<!-- This is an invisible comment. Please edit the section below when article is ready to be moved across stages. Do not remove the section -->

Revision as of 11:02, 4 February 2022

மறைமலை அடிகள்

மறைமலையடிகள் (வேதாசலம்) (ஜூலை 15, 1876 - செப்டம்பர் 15, 1950) புகழ் பெற்ற தமிழறிஞர், தமிழ் ஆய்வாளர். தனித்தமிழ் இயக்கத்தின் முன்னோடித் தலைவர். சைவத் திருப்பணியிலும், சீர்திருத்தப் பணியிலும் பெரும்பங்காற்றியவர். வைதீக விமர்சனம் செய்தவர். எழுத்தாளர், கட்டுரையாளர், சொற்பொழிவாளர், ஆசிரியர், இதழாளர், துறவி என்னும் பன்முகங்களை உடையவர். சமயம், சமகால இலக்கியம், அறிவியல் ஆராய்ச்சி எனப் பலதுறைகளில் ஆங்கிலத்திலும் தமிழிலும் நூல்கள் எழுதியவர்.

பிறப்பு, கல்வி

மறைமலை அடிகளின் இயற்பெயர் வேதாசலம். 1916-இல் தம் பெயரை மறைமலை என தனித்தமிழுக்கு மாற்றிக்கொண்டார். (வேதம்-மறை, அசலம்-மலை). நாகப்பட்டினம் அருகே காடம்பாடி கிராமத்தில் சொக்கநாத பிள்ளைக்கும் சின்னம்மாளுக்கும் மகனாக ஜூலை 15, 1876இல் பிறந்தார். (திருக்கழுக்குன்றத்தில் பிறந்தார் என்றும் சொல்லப்படுகிறது) நாகப்பட்டினத்தில் அறுவைசிகிச்சை நிபுணராக பணியாற்றிவந்த சொக்கநாதபிள்ளை மறைமலை அடிகள் பத்து வயதாக இருந்தபோது மறைந்தார்.திருக்கழுக்குன்றம் கோயிலின் தெய்வமான வேதாசலமூர்த்தியை வழிபட்டு அவர் பிறந்தமையால் இப்பெயர் போடப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

மறைமலை அடிகள் சிறுவயதில் அம்மாவிடமும், திண்ணைப் பள்ளி ஆசிரியர்களிடமும் படித்துவிட்டு நாகப்பட்டினம் வெஸ்லியன் மிஷன் பள்ளியில் படித்தார். நாகையில் புத்தகக் கடை வைத்திருந்த தமிழ்ப்புலமை மிகுந்த நாராயணசாமிப் பிள்ளை என்பவரிடம் தமிழ் கற்றார். 'சைவ சித்தாந்த சண்டமாருதம்' என்று புகழ் பெற்றிருந்த சோமசுந்தர நாயக்கர் அவர்களிடம் சைவ சித்தாந்தம் கற்றார்.மீனாட்சிசுந்தரம் பிள்ளை என்பவரிடம் தமிழ் இலக்கியங்களையும் முத்துவீரைய இலக்கணம் எழுதிய முத்துவீரைய உபாத்தியாரிடம் தமிழ் இலக்கணமும் படித்தார். சிவஞானபோதத்தைச் சோமசுந்தர நாயகரிடம் தீக்கை பெற்றுக்கொண்டு படித்தார். இவர் 15 - 21 வயதுக்குள்ளேயே தொல்காப்பியம் சங்கப்பாடல், சித்தாந்த சாத்திரங்கள் போன்றவற்றை நெட்டுருச் செய்துவிட்டார் என்கிறார் இவரது வரலாற்றை எழுதிய மறை. திருநாவுக்கரசு. தனிமுயற்சியில் படித்த ஆங்கிலத்திலும் வடமொழியிலும் புலமை உடையவர்.

தனிவாழ்க்கை

1893இல் மனோன்மணியம் நாடகம் வெளிவந்தபோது அதைப் படித்துவிட்டு இவர் எழுதிய கடிதம் பேரா. சுந்தரம்பிள்ளையுடன் அறிமுகமாகக் காரணமாகியது. சுந்தரம் பிள்ளையைக் காண திருவனந்தபுரத்திற்குச் சென்றார். இவர் தமிழாசிரியராகப் பணியாற்றும் தகுதியுடையவர் என்ற சிபாரிசுக் கடிதத்தை சுந்தரம் பிள்ளை இவருக்குத் கொடுத்தார். 1896 இல் திருவனந்தபுரம் பள்ளி ஒன்றில் தமிழாசிரியராகச் சேர்ந்தார்.

1893இல் திருவனந்தபுரத்தில் இருந்த சைவசித்தாந்த சபையில் சித்தாந்த பாடம் நடத்தினார். 1898 முதல் 1911 வரை 13 ஆண்டுகள் சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரியில் ஆசிரியர் ஆனார். இக்காலங்களில் பரிதிமாற்கலைஞர் இக்கல்லூரியில் ஆசிரியராக இருந்தார். அடிகளாரின் மாணவர்களில் செங்கல்வராய பிள்ளை, டி.கே.சிதம்பரநாத முதலியார், சோமசுந்தரபாரதி, எஸ். வையாபுரிப் பிள்ளை ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்.

1911லிருந்து சென்னை, பல்லாவரத்தில் தன்னை சமரச சன்மார்க்க குருபோதகராக அறிவித்துக்கொண்டார். சைவப் பணியை மக்கள் பணி என ஆக்கிக்கொண்டார். அதன்பின் சுவாமி என்ற அடைமொழி இவருடன் சேர்ந்துகொண்டது.1914இல் கொழும்பு சென்றபோது தனிக்கூட்டங்களில் பேசியதற்குக் கிடைத்த பணத்தில் பல்லாவரத்தில் அவருடைய இல்லம் கட்டப்பட்டது

மறைமலையடிகள் சித்தமருத்துவம் இயற்கைவாழ்க்கை முறை ஆகியவற்றில் ஈடுபாடுள்ளவர். உணவு உண்பதில் தனிக்கவனம் எடுத்துக்கொண்டவர். மலச்சிக்கல் இல்லாமல் வாழ்வதே அறிவுத்தெளிவு பிறக்கும் என்பதைத் தினமும் பின்பற்றி எனிமா எடுத்துக்கொண்டவர் என அவருடைய வாழ்க்கை வரலாற்றாசிரியர் மறை.திருநாவுக்கரசு குறிப்பிடுகிறார்.

1893 ல் சவுந்திரவல்லியைத் திருமணம் செய்து கொண்டார். திருஞானசம்பந்தம், திருநாவுக்கரசு,நீலாம்பிகை, மாணிக்கவாசகம், சுந்தரமூர்த்தி, திரிபுரசுந்தரி. இவர் மகள் நீலாம்பிகை அம்மையார் தமிழறிஞர். திருநாவுக்கரசு மறை.திருநாவுக்கரசு என்ற பெரில் தன் தந்தையின் வாழ்க்கை வரலாற்றை மிக விரிவான நூலாக எழுதினார். மறைமலை அடிகள் தன் பிள்ளைகளான திருநாவுக்கரசு, நீலாம்பிகை தவிர மற்றவர்களின் பெயர்களைத் தமிழ்ப்படுத்தினார். திருஞான சம்பந்தம்- அறிவுத்தொடர்பு, மாணிக்க வாசகம் -: மணிமொழி, சுந்தரமூர்த்தி - அழகுரு, திரிபுரசுந்தரி - முந்நகரழகி

இதழியல்

  • இளமையில் மீனலோசனி என்ற செய்தித்தாளுக்குச் செய்தித் தொகுப்பாளராகப் பணியாற்றி வந்தார். சோமசுந்தர நாயக்கர் பரிந்துரையினால் ஜே.எம். நல்லுச்சாமிப்பிள்ளை நடத்திய ’சித்தாந்த தீபிகை’ என்னும் தமிழ் இதழின் ஆசிரியப் பொறுப்பை ஏற்றார். ஐந்து இதழ்களில் தொடர்ந்து எழுதியுள்ளார். திருமந்திரம், சிவஞான சித்தியார், தாயுமானவர் பாடல்கள் சிலவற்றிற்கு இந்தப் பத்திரிகைகளில் உரை எழுதினார். இந்த இதழில் குறிஞ்சிப்பாட்டு உரை வந்தது.
  • ஞானசாகரம் என்ற இதழை 1902-ஆம் ஆண்டு தொடங்கி நடத்தினார் அதனைப் பின்னர் அறிவுக்கடல் என்று தனித் தமிழில் பெயர் மாற்றம் செய்தார்.இந்த இதழில் மாணிக்கவாசகர் காலம், தொல்காப்பியர் காலம், தமிழ்-வடமொழி பிறத்தல் பரிமேலழகர் உரை ஆராய்ச்சி ஆகியன வெளிவந்தன.1915இல் கொழும்பு, இமயமலைச் சாரல் எனப் பல்வேறு இடங்களில் பயணித்தபோது அறிவுக்கடல் நின்றுவிட்டது.
  • 1906-1908ஆம் ஆண்டுகளில் (The Oriental Mystic) என்ற பெயரில் சைவ சித்தாந்த ஆங்கிலப் பத்திரிகை ஒன்று நடத்தினார்.
  • ORIENTAL MYSTIC OF MYNA (1908)THE OCEAN OF WISDOM (1935) என்னும் இரண்டு ஆங்கில இதழ்களை நடத்தினார்.

அமைப்புச்செயல்பாடுகள்

  • மறைமலை அடிகள் 1905-இல் சைவ சித்தாந்த மகா சமாசம் என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். அதன் மாநாட்டுத் தலைமையையும் ஏற்றார்.
  • பல்லாவரத்தில் தன் இல்லத்தில் இராமலிங்க வள்ளலார் கொள்கைப்படி 22.04.1912-இல் ’சமரச சுத்த சன்மார்க்க சங்கம்’ தொடங்கினார். பின்னர்த் தனித்தமிழில் அதை ‘பொதுநிலைக் கழகம்’ எனப் பெயர் மாற்றினார்.
  • திருமுருகன் அச்சுக்கூடத்தை ஏற்படுத்திப் பல நூல்களை வெளியிட்டார்.
  • மணிமொழி நூல்நிலையம் என்னும் நூல்நிலையத்தை உருவாக்கினார்.

இலக்கியவாழ்க்கை

மறைமலை அடிகளின் எழுத்துப்பணி மூன்று களங்களைச் சேர்ந்தது. அ.தனித்தமிழியக்கம் ஆ. சைவ மறுமலர்ச்சி இயக்கம் இ. நவீனத் தமிழிலக்கியம். அவர் இதழியலாளராகவும் பேச்சாளராகவும் இம்மூன்று தளங்களிலும் செயல்பட்டார். தனித்தமிழியக்க முன்னோடியாக சம்ஸ்கிருதக் கலப்பில்லாத தமிழில் மேடையில் பேசுவதையும் எழுதுவதையும் வழக்கமாக்கினார். தனித்தமிழியக்கம், பழந்தமிழ் இலக்கியம் பற்றி 11 நூல்களை எழுதினார். சைவம் பற்றி 5 பொதுவான நூல்களும் 5 ஆய்வு நூல்களும் எழுதினார். நவீன இலக்கியம், அறிவியல் சார்ந்த களத்தில் 6 அறிவியல்நூல்கள் ஒரு நாடகம் இரண்டு நாவல்கள் எழுதினார்.மறைமலை அடிகளாரின் இரண்டு நாவல்களுமே தழுவல்கள். தூய தமிழில் நீண்ட வாக்கியங்களில் அமைந்த இந்த நாவல்கள் வெளிவந்த காலத்திலேயே யதார்த்தம் அற்ற படைப்பு என்னும் விமர்சனத்துக்கு உள்ளாயிருக்கின்றன.

1908இல் எடிசன் ஆங்கிலத்தில் எழுதிய ஆறு கட்டுரைகளை அடிகள் மொழிபெயர்த்திருக்கிறார். முருகவேள் என்னும் புனைபெயரில் இந்நூல் வந்தது. இதில் மறைமலையடிகளின் வாழ்க்கைக்குறிப்பும் விரிவான ஆங்கில முகவுரையும் உண்டு. இலங்கைப் பள்ளிகளில் இது பாடத்திட்டத்தில் இருந்தது.1907இல் இவர் காளிதாசனின் சாகுந்தலத்தை மொழி பெயர்த்தார். இதற்கு ஆராய்ச்சியுரையும் வெளியிட்டார். இந்த மொழிபெயர்ப்பு நூல் சென்னைக் கல்லூரிகள் பாடத்திட்டத்தில் இருந்திருக்கிறது

ஆரியன் வந்த பின்பே சாதி வந்தது, தமிழரின் சமயம் சைவமே இதுவே பழைய சமயம், பிற்காலப் புராணங்களில் சில பொய்யானவை,அதனால் போலிச்சைவம் தோன்றியது என்னும் கருத்துகளை தன் நூலகளில் கூறுகிறார். முருகவேள் என்ற புனைப்பெயரில் எழுதியிருக்கிறார்.

பதிப்பாளர்

1903இல் முல்லைப் பாட்டு ஆராய்ச்சி, 1906இல் பட்டினப்பாலை ஆராயச்சி நூல்களைத் தன் மாணவர்களின் உதவியுடன் பதிப்பித்த்தார். இவ்விரு நூல்களிலும் நச்சினார்க்கினியர் உரை வேறுபடும் இடம், பாடல்களின் அழகியல் கூறுகள் வருகின்றன. பட்டினப்பாலை முகவுரையில் குறிஞ்சிப்பாட்டு ஆராய்ச்சி, எழுதப்பட்டதாய்க் குறிப்பு உள்ளது. ஆனால் அது வெளிவரவில்லை.

நூல் நிலையம்

மறைமலை அடிகள் தன் பல்லாவரம் வீட்டில் ஒரு நூல் நிலையத்தை அமைத்தார். 1914இல் இங்கு 4000 தமிழ், வடமொழி, ஆங்கில நூல்கள் இருந்தன. பின்னர் இது பெரிய நூல் நிலையமானது. தன் இறுதிக்காலத்தில் இவர் எழுதிய உயிலில் தன் நூல் நிலையத்தைப் பொதுமக்களுக்கு உரிமையாக்கினார். தன் புத்தகங்களின் பதிப்புரிமைத் தொகை மக்களுக்கே என்றும் எழுதிவைத்தார். 1958 ல் மறைமலை அடிகளின் மருமகனும் திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக தலைவருமான வி.சுப்பையா பிள்ளை தலைமையில் மறைமலை அடிகள் நூலகம் என்னும் அமைப்பு லிங்கி செட்டி தெருவில் உருவாக்கப்பட்டு மேலும் நூல்களும் சேர்க்கப்பட்டு பொதுப்பயன்பாட்டுக்கு அளிக்கப்பட்டது. 1779 முதல் இருநூறாண்டுக்காலம் வெளியான நூல்கள் அதில் இருந்தன. 2008 மே மாதம் இடச்சிக்கலால் இந்நூலகம் மூடப்பட்டது. அரசு அளித்த உதவியின்படி சென்னை கன்னிமாரா நூலகத்திற்கு மறைமலை அடிகள் நூலக நூல்கள் கொடுக்கப்பட்டு தனிப்பிரிவாக செயல்பட்டு வருகின்றது.

சைவசமயம்

மறைமலையடிகள் தமிழகத்திலும் இலங்கையிலும் சைவம் பரப்பப் பயணம் செய்தார். சமயம் தொடர்பாக இவர் எழுதிய 5 நூல்களில் திருவொற்றியூர் மும்மணிக் கோவையின் (1900) பாடல்கள் சங்கப் பாடல்களின் நடையை ஒத்தவை. திருப்பாதிரிப்புலியூர் சைவ மாநாட்டில் (1902) பழந்தமிழ் கொள்கையே சைவசமயம் என்னும் தலைப்பிலும், திருச்சி சைவ மாநாட்டில் (1927) கடவுள் நிலைக்கு மாறான கொள்கை சைவம் ஆகா என்ற தலைப்பிலும் (1929) பேசிய பேச்சுகள் புத்தகங்களாக வந்துள்ளன.

சாதி தொடர்பாக மறைமலையடிகள் 1923இல் எழுதிய "சாதி வேற்றுமையும் போலிச்சைவரும், வேளாளர் நாகரிகம் பண்டைத் தமிழர், ஆரியர், தமிழர் மதம் (1940) என்னும் நூல்களின் மையம் சைவசமயம் தான். பச்சையப்பர் கல்லூரியில் நடந்த தமிழர் மத மாநாட்டில் (1940) பேசிய பேச்சு தமிழர் மதம் என்னும் நூலாக வந்தது. மதம் என்ற சொல்லே மாணிக்கவாசகர் காலத்துக்குப் பின் தோன்றியது; தமிழர்கள் ஒளி வணக்கம் உடையவர்; காலைக் கதிரவன் முருகன்; மாலைக் கதிரொளி சிவன்; நீரின் நிலம் பார்வதி; சிவலிங்க வடிவம் நெருப்புக் குழி என்றெல்லாம் விரிவான களத்தை எழுப்பி தமிழர் மதமும் சாதியும் தொடர்பற்றவை என்ற கருத்தை உணர்த்துகிறார்.தனவைசியர் ஊழியர் நூலில் வந்த கட்டுரை வேளாளர் நாகரிகம் (1923). மறைமலையடிகள் 1921இல் யாழ்ப்பாணத்தில் இதே தலைப்பில் விரிவாகச் சொற்பொழிவாற்றியபோது யாழ்ப்பாணம் ந.சி. கந்தையாபிள்ளை பேச்சு முடிந்ததும் ரூ.200 அன்பளிப்பாக வழங்கினார் என்று குறிப்பிடப்படுகிறது

சொற்பொழிவாளர்

மறைமலையடிகள் தமிழகத்திலும் பிற இடங்களிலும் பயணித்து பல தனிச் சொற்பொழிவுகள் செய்து சைவம் பரப்பினார். 1906ஆம் ஆண்டில் சைவசித்தாந்த சமாஜம் சார்பாகச் சிதம்பரத்தில் நடந்த சைவ மாநாட்டிற்குக் கொழும்பு ராமநாதன் தலைமை தாங்கினார். இம்மாநாட்டில் ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் ”Theistic Aspect of Saiva Sidhanda” , ”ஹடயோக ராஜயோக பிராணாயாமம்” என்னும் தலைப்புகளில் மறைமலையடிகள் பேசினார். நாகப்பட்டினம், திருச்சி, மதுரையில் சைவமாநாடுகளில் மறைமலை அடிகள் பங்கு கொண்டிருக்கிறார்.

1914ஆம் ஆண்டிலும் 1917ஆம் ஆண்டிலும் இவர் கொழும்பு சென்று பேசியிருக்கிறார். 1915இல் இமயமலை சென்றபோது அங்கே ஒரு கூட்டத்தில் சைவ சமயம், சித்தாந்தம் பற்றி ஆங்கிலத்தில் பேசினார். 1921-22ஆம் ஆண்டுகளில் இவர் கொழும்பில் இருந்தபோது சைவசித்தாந்த வகுப்பும் நடத்தியிருக்கிறார்

தமிழ் இலக்கியகாலம்

"மாணிக்கவாசகர் காலமும் வரலாறும்” என்ற நூல் இருபது ஆண்டுகளாக ஆராய்ந்த முடிவுகள் உள்ள நூலாகும். இந்த நூல் சைவசமயக் குரவரான மாணிக்க வாசகரின் காலத்தைப் கூறுவதற்காக எழுதப்பட்டது என்றாலும், தொல்காப்பியர் ஆழ்வார்கள், சேக்கிழார் எனப் பலரின் காலத்தையும் இந்நூல் கணிக்கிறது.

பாண்டியர் கல்வெட்டுகளில் கூறப்படும் வரகுணன் மணிவாசகர் கூறும் வரகுணன் அல்லன் என்று சொல்லி மணிவாசகர் காலத்தைப் பின்னுக்குக் கொண்டுசெல்கிறார் மறைமலையடிகள். இந்த நூலில் இராமன் கற்பனைப் பாத்திரம், விநாயகர்முருகன் போன்றோரின் பிறப்பு பற்றியவை கட்டுக்கதைகளே என்பன போன்ற கருத்துகளும் சொல்லப்படுகின்றன. ஒருவகையில் மொத்தத் தமிழ் இலக்கிய, தமிழக வரலாற்றைக் கூறுவதற்கு இந்த நூலைப் பயன்படுத்தி இருக்கிறார் மறைமலையடிகள் என்றும் கூறலாம்.

ஆய்வு முடிவுகள் மறுப்பு

பல்லவர்களின் காலத்துக்கு முன் தமிழகத்தில் கல்வெட்டுகள் கிடைக்கவில்லை; ஆதிசங்கரருக்கு முன்பே மாயாவாதத் தத்துவம் தமிழகத்தில் இருந்தது; ராமாயணம் கற்பனையான காவியம்; மகாபாரதம் யதார்த்தமானது; ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் கி.பி. 10ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர்கள்; வட்டெழுத்து 6000 ஆண்டுகளாகத் தமிழகத்தில் வழங்கிவருகிறது என்பது போன்ற இவருடைய ஆய்வு முடிவுகளை அதிகாரபூர்வமான சான்றுகளுடன் மறுத்து எழுதிய ஆய்வுகள் வந்துவிட்டன.

வரலாற்றுப் பேராசிரியர்களான நீலகண்ட சாஸ்திரி, கே.கே. பிள்ளை, சத்தியநாத அய்யர், பி.பி. ஸ்ரீனிவாச அய்யங்கார் போன்றோர் பல்லவர்களைப் பற்றிக் கூறிய முடிவுகளுக்கு மாறானது மறைமலையடிகளின் ஆய்வு. ஆழ்வார்களின் காலம் கி.பி. 10ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்பதைப் பலரும் நிறுவியுள்ளனர். பல்லவருக்கு முந்திய காலத்தவை என்று கருதப்படும் தமிழ் பிராமி கல்வெட்டுகள் ஆழமான ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன. வட்டெழுத்து வடிவம் 6000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்ற அடிகளின் கருத்து கூட விரிவாக மறுக்கப்பட்டுள்ளது.

இலக்கிய இடம்

அடிகளின் ஆராய்ச்சி முடிவுகள் இவரது சமகாலத்திலும் பிற்காலத்திலும் இவரது பெரும்பாலானவை ஒப்புக்கொள்ளப் படவில்லை, தமிழிலக்கிய வரலாற்றாசிரியர்கள் இவரை ஆய்வாளராக அடையாளம் காட்டவில்லை என்று அ.கா. பெருமாள் தமிழறிஞர்கள் புத்தகத்தில் குறிப்பிடுகிறார். சைவப்பற்று, தனித்தமிழில் உறுதி என்பதற்காக இவர் கொண்டாடப்படுகிறார்.

மறைவு

இறுதிக்காலத்தில் பல்லாவரத்தில் காவியுடை அணிந்து துறவுக் கோலத்தில் இருந்தார். செப்டம்பர் 15, 1950-ல் தமது எழுபத்தைந்தாவது வயதில் காலமானார்.

வாழ்க்கை வரலாறுகள், நினைவகங்கள்

மறைமலை அடிகளை பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு மறைமலை அடிகள் பிள்ளைத்தமிழ் பாடப்பட்டுள்ளது. மறைமலையடிகள் 50 ஆண்டுகள் தொடர்ந்து நாட்குறிப்பு எழுதியிருக்கிறார். இதன் அடிப்படையில் இவரது வரலாற்றை இவரது மகன் மறை. திருநாவுக்கரசு எழுதியிருக்கிறார்.

நூல்கள்

மருத்துவம், இயற்கை வாழ்க்கை
  • பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் (1921)
  • மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை, இரு தொகுதிகள் (1933)
  • மனித வசியம் அல்லது மனக்கவர்ச்சி (1927)
  • யோக நித்திரை: அறிதுயில் (1922)
  • தொலைவில் உணர்தல் (1935)
  • மரணத்தின்பின் மனிதர் நிலை (1911)
மொழியாக்கம்
  • சாகுந்தல நாடகம் (சமஸ்கிருதத்தில் இருந்து மொழி பெயர்த்தது) (1907)
சம்ஸ்கிருத ஆராய்ச்சி
  • சாகுந்தல நாடக ஆராய்ச்சி (1934)
தொகுப்பு
  • ஞானசாகரம் மாதிகை (1902)
சைவம்
  • சாதி வேற்றுமையும் போலிச் சைவரும் (1911)
  • முனிமொழிப்ப்ரகாசிகை (1899)
  • மாணிக்க வாசகர் வரலாறு (1952)
  • சோமசுந்தரக் காஞ்சியாக்கம் (1901)
  • சோமசுந்தர நாயகர் வரலாறு (1957)
  • கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா (1968)
  • திருவாசக விரிவுரை (1940)
  • சித்தாந்த ஞான போதம், சதமணிக்கோவை குறிப்புரை (1898)
  • துகளறு போதம், உரை (1898)
  • வேதாந்த மத விசாரம் (1899)
  • வேத சிவாகமப் பிராமண்யம் (1900)
  • Saiva Siddhanta as a Philosophy of Practical Knowledge (1940)
  • சைவ சித்தாந்த ஞானபோதம் (1906)
  • சிவஞான போத ஆராய்ச்சி (1958)
  • பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம் (1958)
  • தமிழர் மதம் (1941)
பழந்தமிழிலக்கிய ஆய்வு
  • முற்கால பிற்காலத் தமிழ்ப் புலவோர் (1936)
  • முல்லைப்பாட்டு- ஆராய்ச்சியுரை (1903)
  • பட்டினப்பாலை-ஆராய்ச்சியுரை (1906)
  • உரைமணிக் கோவை (1972)
  • மாணிக்க வாசகர் மாட்சி (1935)
  • மாணிக்க வாசகர் வரலாறும் காலமும் (இரு தொகுதி) (1930)
  • முதற்குறள் வாத நிராகரணம் (1898)
  • திருக்குறள் ஆராய்ச்சி (1951)
மரபிலக்கியப்படைப்புகள்
  • மறைமலையடிகள் பாமணிக் கோவை (பாடல்கள்) (1977)
  • அம்பிகாபதி அமராவதி (நாடகம்) (1954)
  • திருவொற்றி முருகர் மும்மணிக்கோவை (1900)
நாவல்
  • கோகிலாம்பாள் கடிதங்கள் (1921)
  • குமுதவல்லி: அல்லது நாகநாட்டரசி (1911
பொது
  • மறைமலை அடிகள் கடிதங்கள் (1957)
  • அறிவுரைக் கொத்து (1921)
  • அறிவுரைக் கோவை (1971)
  • கருத்தோவியம் (1976)
  • சிந்தனைக் கட்டுரைகள் (1908)
  • சிறுவற்கான செந்தமிழ் (1934)
  • இளைஞர்க்கான இன்றமிழ் (1957)
  • இந்தி பொது மொழியா ? (1937)
  • தமிழ் நாட்டவரும், மேல்நாட்டவரும் (1936)
  • பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும் (1906)
  • வேளாளர் நாகரிகம் (1923)
ஆங்கிலம்
  • Can Hindi be a lingua Franca of India? (1969)
  • Tamilian and Aryan form of Marriage (1936)
  • Oriental Mystic Myna Bimonthly (1908-1909)
  • Ocean of wisdom, Bimonthly(1935)
  • Ancient and Modern Tamil Poets (1937)
இதழ் தொகுதிகள்
  • அறிவுக்கடல் (ஞானசாகரம்) (1902)
  • ORIENTAL MYSTIC OF MYNA (1908)
  • THE OCEAN OF WISDOM (1935)

உசாத்துணைகள்


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.