சமண சமயப் பெண் துறவிகள்: Difference between revisions
(Page created; Para Added.) |
(Para Added) |
||
Line 1: | Line 1: | ||
துறவு நெறியைப் போற்றும் சமயம் சமணம். சமண சமயத் துறவியர்களில் ஆண்களைப் போலவே பெண்களும் இடம்பெற்றுள்ளனர். தமிழ் இலக்கியங்களில் சமணப் பெண் துறவியர் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன. | துறவு நெறியைப் போற்றும் சமயம் சமணம். சமண சமயத் துறவியர்களில் ஆண்களைப் போலவே பெண்களும் இடம்பெற்றுள்ளனர். தமிழ் இலக்கியங்களில் சமணப் பெண் துறவியர் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன. | ||
== சமண சமயப் பெண் துறவியர்களின் பொதுப் பெயர்கள் == | |||
நந்திய பிண்டி வாமன் | |||
நன்னெறி வழாது நோற்பாள் | |||
கந்தியே அவ்வை அம்மை | |||
கன்னியே கெளந்தி என்ப | |||
- எனச் சூடாமணி நிகண்டு பெண் துறவியின் பொதுவான பெயர்களைப் பற்றிக் குறிப்பிடுகிறது. “பைம்மையும் கௌந்தியும் அருந்தவப் பெண் பெயர்” என்கிறது பிங்கல நிகண்டு. சமண சமயப் பெண் துறவிகளுக்கு ஆர்யாங்களை என்னும் பெயரும் உண்டு. ஆர்யாங்கனைகள் அல்லது கந்தியார்கள் ஒழுகவேண்டிய சில முறைகளைப்பற்றி [[நீலகேசி]]யில் குறிப்புகள் காணப்படுகின்றன. ‘குரத்தி' என்ற பெயரும் சமணப் பெண் துறவிகளுக்கு உண்டு. குரு என்பதன் பெண்பாற் பெயரே குரத்தி. | |||
“சாமி குரத்தி பெருமாட்டி ஆசாள் தலைவி ஐயை | |||
நாமங் கவுந்தியும் பைம்மையும் ஆருகதத்துத் தவப்பெண்” | |||
- என்கிறது கயாதர நிகண்டு. | |||
Revision as of 23:14, 23 August 2022
துறவு நெறியைப் போற்றும் சமயம் சமணம். சமண சமயத் துறவியர்களில் ஆண்களைப் போலவே பெண்களும் இடம்பெற்றுள்ளனர். தமிழ் இலக்கியங்களில் சமணப் பெண் துறவியர் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன.
சமண சமயப் பெண் துறவியர்களின் பொதுப் பெயர்கள்
நந்திய பிண்டி வாமன்
நன்னெறி வழாது நோற்பாள்
கந்தியே அவ்வை அம்மை
கன்னியே கெளந்தி என்ப
- எனச் சூடாமணி நிகண்டு பெண் துறவியின் பொதுவான பெயர்களைப் பற்றிக் குறிப்பிடுகிறது. “பைம்மையும் கௌந்தியும் அருந்தவப் பெண் பெயர்” என்கிறது பிங்கல நிகண்டு. சமண சமயப் பெண் துறவிகளுக்கு ஆர்யாங்களை என்னும் பெயரும் உண்டு. ஆர்யாங்கனைகள் அல்லது கந்தியார்கள் ஒழுகவேண்டிய சில முறைகளைப்பற்றி நீலகேசியில் குறிப்புகள் காணப்படுகின்றன. ‘குரத்தி' என்ற பெயரும் சமணப் பெண் துறவிகளுக்கு உண்டு. குரு என்பதன் பெண்பாற் பெயரே குரத்தி.
“சாமி குரத்தி பெருமாட்டி ஆசாள் தலைவி ஐயை
நாமங் கவுந்தியும் பைம்மையும் ஆருகதத்துத் தவப்பெண்”
- என்கிறது கயாதர நிகண்டு.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.