under review

உலகநாதர்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "உலகநாதர்")
 
No edit summary
Line 1: Line 1:
உலகநாதர்
உலகநாதர் (பொ.யு. 16ஆம் நூற்றாண்டு) சைவப் புலவர். உலகநீதி என்ற நூலை இயற்றியவர்.
== வாழ்க்கைக் குறிப்பு ==
சிவனை வழிபட்டவர். வடமொழியில் ஈடுபாடுடையவர். [[உலகநீதி]] என்ற நீதிநூல் இறுதிவரிகள் இயற்றிய புலவரின் பெயரைத் தருகின்றன. ஒவ்வொரு பாடலும் முருகனை வாழ்த்தி முடிவதாக அமைந்துள்ளதால் முருக பக்தர் என்பதை அறிய முடிகிறது.
== இலக்கிய வாழ்க்கை ==
சைவ சித்தாந்த நூல்கள் வெளிவர முயற்சி மேற்கொண்டார். உலக நீதியை இயற்றியவர்.  பதின்மூன்று ஆசிரிய விருத்தப்பாக்களைக் கொண்ட இந்த நூலின் நோக்கம், உலக மக்களுக்குப் பொதுவான நீதிகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பது. பாக்களின் ஒவ்வொரு அடியும் ஒரு நீதியை அறிவுறுத்துகிறது. இந்நூல் கூறும் அறிவுரைகள் எதனைச் செய்ய வேண்டாம் என்று எதிர்மறையாக அமைந்துள்ளன. மிகச் சுருக்கமாக உலகநாதர் உலகிற்கு சொல்ல விரும்பபிய நீதிகள் அனைத்தும் இவற்றுள் சொல்லப்பட்டுவிடுகின்றன.
== பாடல் நடை ==
<poem>
ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் (1)
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் (2)
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம் (3)
வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம் (4)
போகாத இடந்தனிலே போக வேண்டாம் (5)
போகவிட்டுப் புறம் சொல்லித் திரிய வேண்டாம் (6)
நெஞ்சாரப் பொய் தன்னைச் சொல்ல வேண்டாம்  (9)
நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம் (10)
நஞ்சுடனே ஒருநாளும் பழக வேண்டாம் (11)
நல் இணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம் (12)
அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம் (13)
அடுத்தவரை ஒருநாளும் கெடுக்க வேண்டாம் (14)
மனம்போன போக்கு எல்லாம் போக வேண்டாம் (17)
மாற்றானை உறவு என்று நம்ப வேண்டாம் (18)
தனம் தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம் (19)
தருமத்தை ஒரு நாளும் மறக்க வேண்டாம் (20)
</poem>
== நூல்கள் பட்டியல் ==
* உலகநீதி
== உசாத்துணை ==
* [https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt1lJY2#book1/5 தமிழ் இலக்கிய வரலாறு: பதினாறாம் நூற்றாண்டு: பாகம் 2: 2005: மு. அருணாசலம்]
* http://siragu.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF/
 
{{ready for review}}
[[Category:Tamil Content]]

Revision as of 07:46, 10 July 2022

உலகநாதர் (பொ.யு. 16ஆம் நூற்றாண்டு) சைவப் புலவர். உலகநீதி என்ற நூலை இயற்றியவர்.

வாழ்க்கைக் குறிப்பு

சிவனை வழிபட்டவர். வடமொழியில் ஈடுபாடுடையவர். உலகநீதி என்ற நீதிநூல் இறுதிவரிகள் இயற்றிய புலவரின் பெயரைத் தருகின்றன. ஒவ்வொரு பாடலும் முருகனை வாழ்த்தி முடிவதாக அமைந்துள்ளதால் முருக பக்தர் என்பதை அறிய முடிகிறது.

இலக்கிய வாழ்க்கை

சைவ சித்தாந்த நூல்கள் வெளிவர முயற்சி மேற்கொண்டார். உலக நீதியை இயற்றியவர். பதின்மூன்று ஆசிரிய விருத்தப்பாக்களைக் கொண்ட இந்த நூலின் நோக்கம், உலக மக்களுக்குப் பொதுவான நீதிகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பது. பாக்களின் ஒவ்வொரு அடியும் ஒரு நீதியை அறிவுறுத்துகிறது. இந்நூல் கூறும் அறிவுரைகள் எதனைச் செய்ய வேண்டாம் என்று எதிர்மறையாக அமைந்துள்ளன. மிகச் சுருக்கமாக உலகநாதர் உலகிற்கு சொல்ல விரும்பபிய நீதிகள் அனைத்தும் இவற்றுள் சொல்லப்பட்டுவிடுகின்றன.

பாடல் நடை

ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் (1)
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் (2)
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம் (3)
வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம் (4)
போகாத இடந்தனிலே போக வேண்டாம் (5)
போகவிட்டுப் புறம் சொல்லித் திரிய வேண்டாம் (6)
நெஞ்சாரப் பொய் தன்னைச் சொல்ல வேண்டாம் (9)
நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம் (10)
நஞ்சுடனே ஒருநாளும் பழக வேண்டாம் (11)
நல் இணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம் (12)
அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம் (13)
அடுத்தவரை ஒருநாளும் கெடுக்க வேண்டாம் (14)
மனம்போன போக்கு எல்லாம் போக வேண்டாம் (17)
மாற்றானை உறவு என்று நம்ப வேண்டாம் (18)
தனம் தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம் (19)
தருமத்தை ஒரு நாளும் மறக்க வேண்டாம் (20)

நூல்கள் பட்டியல்

  • உலகநீதி

உசாத்துணை



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.