ஆதவன்: Difference between revisions
No edit summary |
|||
Line 1: | Line 1: | ||
{{Read English|Aadhavan|Aadhavan|Name of target article=Aadhavan|Title of target article=Aadhavan}} | |||
[[File:Aadhavan.jpg|thumb|எழுத்தாளர் ஆதவன்]] | [[File:Aadhavan.jpg|thumb|எழுத்தாளர் ஆதவன்]] | ||
ஆதவன் (1942-1987). அறுபதுகளுக்கு பின் எழுதத்துவங்கி, பெருநகர வாழ்வின் நுணுக்கங்களை எழுதிய தமிழ் எழுத்தாளர். இந்திய பெருநகர வாழ்வையும் அங்கு மனித அகங்கள் அணிந்திருக்கும் முகமூடிகளையும் எழுதிய முக்கியமான படைப்பாளி. ‘முதலில் இரவு வரும்’ என்ற சிறுகதை தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர். | ஆதவன் (1942-1987). அறுபதுகளுக்கு பின் எழுதத்துவங்கி, பெருநகர வாழ்வின் நுணுக்கங்களை எழுதிய தமிழ் எழுத்தாளர். இந்திய பெருநகர வாழ்வையும் அங்கு மனித அகங்கள் அணிந்திருக்கும் முகமூடிகளையும் எழுதிய முக்கியமான படைப்பாளி. ‘முதலில் இரவு வரும்’ என்ற சிறுகதை தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர். | ||
== வாழ்க்கை குறிப்பு == | == வாழ்க்கை குறிப்பு == | ||
இயற்பெயர் கே.எசு.சுந்தரம். 21-3-1942 பிறந்ததேதி.சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் கள்ளிடைக்குறிச்சி. டெல்லியில் தன் கல்லூரி படிப்பை படித்தார்.இந்திய ரயில்வேயில் ஏழு ஆண்டுகாலம் வேலை.1975 லிருந்து நேஷ்னல் புக் டிரஸ்ட் நிறுவனத்தின் தமிழ் பிரிவில் துணையாசிரியராக டெல்லியிலும் அடுத்து 1984 பின் பெங்களூரிலும் பணி புரிந்தார்.1976 ல் திருமணம்.மனைவி ஹேமா.இவர் ஆதவனின் மறைவுக்கு பின் நேசனல் புக் டிரஸ்ட் நிறுவனத்தில் தனக்கு கிடைத்த பணியை தொடர்ந்தார்.பிள்ளைகள் சாருமதி, நீரசா. | இயற்பெயர் கே.எசு.சுந்தரம். 21-3-1942 பிறந்ததேதி. சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் கள்ளிடைக்குறிச்சி. டெல்லியில் தன் கல்லூரி படிப்பை படித்தார்.இந்திய ரயில்வேயில் ஏழு ஆண்டுகாலம் வேலை.1975 லிருந்து நேஷ்னல் புக் டிரஸ்ட் நிறுவனத்தின் தமிழ் பிரிவில் துணையாசிரியராக டெல்லியிலும் அடுத்து 1984 பின் பெங்களூரிலும் பணி புரிந்தார். | ||
1976 ல் திருமணம்.மனைவி ஹேமா.இவர் ஆதவனின் மறைவுக்கு பின் நேசனல் புக் டிரஸ்ட் நிறுவனத்தில் தனக்கு கிடைத்த பணியை தொடர்ந்தார்.பிள்ளைகள் சாருமதி, நீரசா. | |||
== மறைவு == | == மறைவு == | ||
Line 55: | Line 55: | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
http://santhoshguru.blogspot.com/2005/09/blog-post.html | * நவீனத் தமிழிலக்கிய அறிமுகம் - எழுத்தாளர் ஜெயமோகன் | ||
http://santhoshguru.blogspot.com/2005/09/blog-post_19.html | * [http://santhoshguru.blogspot.com/2005/09/blog-post.html காகித மலர்கள் - ஒரு மதிப்பீடு தி.க.சிவசங்கரன்] | ||
http://santhoshguru.blogspot.com/2005/09/blog-post_112714420206142566.html[[Category:Tamil Content]] | * [http://santhoshguru.blogspot.com/2005/09/blog-post_19.html தவிர்க்க முடியவில்லை -ஆதவன் & ஆதவன் - அசோகமித்திரன்] | ||
* [http://santhoshguru.blogspot.com/2005/09/blog-post_112714420206142566.html அகவுலக ஆய்வாளன் - பா. ராகவன் ; ஆதவன் வீட்டுக்குச் சென்று வந்தேன் - ஆர்.வெங்கடேஷ்; அன்பு மயமான ஆதவன்... - திருப்பூர் கிருஷ்ணன்] | |||
{{ready for review}} | |||
[[Category:Tamil Content]] |
Revision as of 23:32, 9 February 2022
To read the article in English: Aadhavan.
ஆதவன் (1942-1987). அறுபதுகளுக்கு பின் எழுதத்துவங்கி, பெருநகர வாழ்வின் நுணுக்கங்களை எழுதிய தமிழ் எழுத்தாளர். இந்திய பெருநகர வாழ்வையும் அங்கு மனித அகங்கள் அணிந்திருக்கும் முகமூடிகளையும் எழுதிய முக்கியமான படைப்பாளி. ‘முதலில் இரவு வரும்’ என்ற சிறுகதை தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்.
வாழ்க்கை குறிப்பு
இயற்பெயர் கே.எசு.சுந்தரம். 21-3-1942 பிறந்ததேதி. சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் கள்ளிடைக்குறிச்சி. டெல்லியில் தன் கல்லூரி படிப்பை படித்தார்.இந்திய ரயில்வேயில் ஏழு ஆண்டுகாலம் வேலை.1975 லிருந்து நேஷ்னல் புக் டிரஸ்ட் நிறுவனத்தின் தமிழ் பிரிவில் துணையாசிரியராக டெல்லியிலும் அடுத்து 1984 பின் பெங்களூரிலும் பணி புரிந்தார்.
1976 ல் திருமணம்.மனைவி ஹேமா.இவர் ஆதவனின் மறைவுக்கு பின் நேசனல் புக் டிரஸ்ட் நிறுவனத்தில் தனக்கு கிடைத்த பணியை தொடர்ந்தார்.பிள்ளைகள் சாருமதி, நீரசா.
மறைவு
24.7.1987 அன்று தனது 45-வது வயதில் சிருங்கேரியில் துங்கபத்ரா நதியின் சுழலில் உயிர் இழந்தார்.
இலக்கிய வாழ்க்கை
பள்ளி பருவத்தில் கல்வி, விளையாட்டு என்று எதிலும் தன்னுடைய தனித்தன்மையை வெளிகாட்ட முடியாதமையால் உருவான தனிமையை போக்கிக்கொள்ள ஏழாம் வகுப்பு படிக்கும்பொழுது நண்பன் ஒருவனோடு இணைந்து “அணுகுண்டு” என்ற கையெழுத்து பத்திரிக்கை நடத்தியுள்ளார்.
‘சிங்கராஜ குமாரி’ ‘கானகத்தின் நடுவே’ ஆகிய சிறுகதை தொகுப்புகள் சிறார் இலக்கிய பங்களிப்பு.1962 ல் கல்லூரி காலகட்டத்தில் எழுத்தாளராக அறிமுகம் ஆகிறார்.ஆனந்த விகடனில் எழுதிய கதைகள் தொடர்ந்து முத்திரை கதைகளாக வெளிவந்தன.அதை தொடர்ந்து நா.பார்த்தசாரதி ஆசிரியத்துவத்தில் வெளிவந்த தீபம் இதழிலும் கதைகள் வெளிவந்தன. முதல் நாவலான காகித மலர்கள் தீபம் இதழில் வெளிவந்த நாவல் தொடர். எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி மற்றும் எழுத்தாளர் அசோகமித்திரன் இவருக்கு அணுக்கமான மூத்த படைப்பாளிகள்.
இலக்கிய அழகியல்
இந்திய பெருநகர வாழ்க்கை சூழலை கதைக்களமாக கொண்ட இவரது படைப்புகள் உயர்குடி பண்பாட்டில் உள்ள அபத்தங்களை நுணுக்கமாக சித்தரிக்ககூடியது. வாழ்க்கையில் மனித அகம் செய்யும் பாவனைகள் சுயஏமாற்றுகளை பகுத்தாயும் விதத்தில் உளவியல் அணுகுமுறையோடு விவரித்து காட்டிய படைப்பாளி. நகர் வாழ்க்கையின் நவீனத்திற்க்குள் தங்களை முழுவதும் பொருத்திகொள்ளமுடியாமல் மரபின் ஆச்சாரத்துக்குள்ளும் இருந்துவிடமுடியாத மத்தியதர இளைஞர்கள் மற்றும் மனிதர்களின் உள்முரண்கள் பதிவானது இவருடைய படைப்புலகம். ‘காகித மலர்கள’, ‘என் பெயர் ராமசேஷன்’ ஆகிய முக்கியமான நாவல்கள் இரண்டும் டெல்லியை கதைகளமாக கொண்டவை. ‘ஒரு பழைய கிழவரும் புதிய உலகமும்’, ‘முதலில் இரவு வரும்’, ‘சிவப்பாய் உயரமாய் மீசை வச்சுக்காமல், ‘லேடி’ போன்ற சிறுகதைகள் விமர்சகர்களால் முதன்மையாக பரிந்துரைக்கபடும் படைப்புகள்.
அசோகமித்திரன் - “அது 1967ஆம் ஆண்டு. மிகக் குறுகிய இடைவெளியில் 'இண்டர்வியூ' 'அப்பர் பெர்த்' என அவருடைய இரு பக்குவமிக்க சிறுகதைகளைப் படித்து, இவ்வளவு துல்லியமாகவும், சத்தியம் தொனிக்கவும் தற்கால இந்தியாவின் படித்த இளைஞர் மனத்தைச் சித்தரிக்க முடியுமா என்று வியந்திருக்கிறேன். அந்த முதல் சந்திப்புக்குப் பிறகு இந்த இருபது ஆண்டுகளில் அவர் மனிதனாகவும், எழுத்தாளனாகவும் ஒருமுறைகூட என் வியப்பையும் மதிப்பையும் பெறாமலிருந்ததில்லை.”
விருது
மறைவுக்கு பின் 1987ல் 'முதலில் இரவு வரும்' என்ற சிறுகதை தொகுப்புக்காக சாகித்திய அகடாமி விருது.
படைப்புகள்/நூல்கள்
சிறுகதை தொகுப்பு
- கனவுக்குமிழிகள் [1975]
- கால் வலி [1975]
- ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் [1980]
- புதுமைப்பித்தனின் துரோகம் [1981]
- முதலில் இரவு வரும் [1985]
- நிழல்கள்
- ஆதவன் சிறுகதைகள்- முழுதொகுப்பு
நாடகம்
- புழுதியில் வீணை
குறுநாவல்
- இரவுக்கு முன்பு வருவது மாலை
- சிறகுககள்
- மீட்சியைத் தேடி
- கணபதி ஒரு கீழ்மட்டத்து ஊழியன்
- நதியும் மலையும்
- பெண்,தோழி,தலைவி
நாவல்
- காகித மலர்கள் [1977]
- என் பெயர் ராமசேஷன்[1980]
மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்
- என் பெயர் ராமசேஷன்- ரசிய மொழி- Vitaliy Furnika
உசாத்துணை
- நவீனத் தமிழிலக்கிய அறிமுகம் - எழுத்தாளர் ஜெயமோகன்
- காகித மலர்கள் - ஒரு மதிப்பீடு தி.க.சிவசங்கரன்
- தவிர்க்க முடியவில்லை -ஆதவன் & ஆதவன் - அசோகமித்திரன்
- அகவுலக ஆய்வாளன் - பா. ராகவன் ; ஆதவன் வீட்டுக்குச் சென்று வந்தேன் - ஆர்.வெங்கடேஷ்; அன்பு மயமான ஆதவன்... - திருப்பூர் கிருஷ்ணன்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.