மௌனி: Difference between revisions
NVKalpakam (talk | contribs) |
NVKalpakam (talk | contribs) |
||
Line 11: | Line 11: | ||
=== இலக்கிய படைப்புகள் === | === இலக்கிய படைப்புகள் === | ||
கும்பகோணத்தில் நடந்த ஒரு மகாமகம் விழாவில் மௌனியை தற்செயலாக சந்தித்த மணிக்கொடி ஆசிரியர் பி.எஸ். ராமையா, அவரை கதை எழுத சொன்னதாக மௌனியே பதிவு செய்திருக்கிறார். அதன் பின், மௌனியின் முதல் கதை 'ஏன்?', 1936ம் ஆண்டு பிப்ரவரி மாத மணிக்கொடி இதழில் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து குடும்பத்தேர், பிரபஞ்ச கானம் என்ற கதைகள் மணிக்கொடியில் வெளியாயின. | |||
புத்திர சோகம் சூழ்ந்த அவரது வாழ்க்கை, வாழ்வின் நிச்சயமின்மை குறித்து அவரை எழுத தூண்டியிருக்கலாம். மரணம், ஆண் - பெண் உறவு, வாழ்வின் நிச்சயமின்மை ஆகியவையே மௌனியின் பெரும்பாலான கதைக்களங்கள். | புத்திர சோகம் சூழ்ந்த அவரது வாழ்க்கை, வாழ்வின் நிச்சயமின்மை குறித்து அவரை எழுத தூண்டியிருக்கலாம். மரணம், ஆண் - பெண் உறவு, வாழ்வின் நிச்சயமின்மை ஆகியவையே மௌனியின் பெரும்பாலான கதைக்களங்கள். | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 16:58, 30 January 2022
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.
Work in process, being created by User:Kalpakam
மௌனி (ஜூலை 27, 1907 - ஜூலை 6, 1985) மணிக்கொடி இதழில் எழுதிய தமிழ் எழுத்தாளர். மொத்தம் 24 கதைகளே எழுதியிருக்கும் மௌனி, தன் கதைகளில் மனிதர்களின் அகப் பிரச்சினையையே அதிகம் எழுதியுள்ளார். மனதின் தறிக்கெட்ட தன்மையை தேர்ந்த மொழியில், தத்துவ சாயலுடன் வெளிப்படுத்திய எழுத்தாளர்.
பிறப்பு, கல்வி
எஸ். மணி ஐயர் என்கின்ற இயற் பெயருடைய மௌனி, 1907ம் ஆண்டு, ஜூலை 27, தஞ்சாவூர் மாவட்டம், செம்மங்குடியில் பிறந்தார். உயர் நிலைக் கல்வி வரை கும்பகோணத்தில் பயின்றார். பின் 1929ம் ஆண்டு, திருச்சி, பிஷப் ஹீபர் கல்லூரியில் கணிதத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். இசையிலும் தத்துவத்திலும் தீவிர ஈடுபாடு கொண்டவர். இவருக்கு மௌனி என்ற புனைபெயரை சூட்டியது மணிக்கொடி ஆசிரியர் பி.எஸ். ராமையா.
தனி வாழ்க்கை
திருமணமாகி 14 வருடங்கள் மௌனி கும்பகோணத்தில் வசித்தார். பின், தன் குடும்ப தொழில் மற்றும் சொத்துக்களை பராமரிக்க சிதம்பரம் சென்று, இறுதி வரை சிதம்பரத்திலேயே வாழ்ந்தார். மௌனிக்கு, நான்கு மகன்களும் ஒரு மகளுமாக மொத்தம் ஐந்து குழந்தைகள். மௌனியின் முதல் மகனும் மூன்றாவது மகனும் விபத்துக்களில் மரணமடைந்து விட்டனர். தத்துவத்தில் உயர் படிப்பு படித்த இரண்டாவது மகன் மன நிலை சரியில்லாமல் இருந்து 2004ல் காலமானார். மௌனி, தன் இறுதிக் காலத்தில் மகளுடன் சிதம்பரத்தில் வாழ்ந்தார்.
இலக்கிய படைப்புகள்
கும்பகோணத்தில் நடந்த ஒரு மகாமகம் விழாவில் மௌனியை தற்செயலாக சந்தித்த மணிக்கொடி ஆசிரியர் பி.எஸ். ராமையா, அவரை கதை எழுத சொன்னதாக மௌனியே பதிவு செய்திருக்கிறார். அதன் பின், மௌனியின் முதல் கதை 'ஏன்?', 1936ம் ஆண்டு பிப்ரவரி மாத மணிக்கொடி இதழில் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து குடும்பத்தேர், பிரபஞ்ச கானம் என்ற கதைகள் மணிக்கொடியில் வெளியாயின.
புத்திர சோகம் சூழ்ந்த அவரது வாழ்க்கை, வாழ்வின் நிச்சயமின்மை குறித்து அவரை எழுத தூண்டியிருக்கலாம். மரணம், ஆண் - பெண் உறவு, வாழ்வின் நிச்சயமின்மை ஆகியவையே மௌனியின் பெரும்பாலான கதைக்களங்கள்.