தம்பிரான் வணக்கம்: Difference between revisions
Line 6: | Line 6: | ||
ருஷ்யா (1563), ஆபிரிக்கா (1624), கிரீஸ் (1821) நாடுளின் முதல் அச்சு நூல்களை விட முந்தையது இந்நூல் என்று [[ஆ. சிவசுப்ரமணியம்]] கூறுகிறார். இந்திய மொழிகளில் முதலில் அச்சுவடிவில் வந்த நூல் இதுவே என்பது முழுமையாக ஏற்கப்பட்டுள்ளது. 1574 இறுதியில் புன்னக்காயலில் இருந்து கோவாவுக்கு தற்காலிக மாற்றம் பெற்றுச் சென்ற ஹென்ரிக் ஹென்ரிக்கஸ் அங்கே நிகழ்ந்துகொண்டிருந்த அச்சுப்பணிகளில் ஆர்வம் கொண்டு தன் நூல்களையும் அச்சிட்டு பரவலாக வெளியிட முனைந்தார். கேரள நம்பூதிரியாக இருந்து மதம் மாறி 1562 ஆம் ஆண்டு ஏசு சபையில் இணைந்தவர் எனப்படும் அருட்தந்தை பெரோ லூயிஸ் அவருக்கு உதவினார். கொல்லத்தில் இருந்த அருட்தந்தை யோவான் த ஃபாரியாவின் மேற்பார்வையில் கோவாவில் யோவான் கோன்சால்வஸ் 1577ல் முதல் தமிழ் எழுத்து அச்சுகளை வடித்தார் எனப்படுகிறது. ஆனால் கோவாவில் தம்பிரான் வணக்கம் அச்சிடப்பட்டது என்பது ஐயமின்றி நிரூபிக்கப்படவில்லை. கோன்சால்வஸ் உருவாக்கிய எழுத்துருக்களால் 1578 ஆம் ஆண்டு கொல்லத்தில் அச்சிடப்பட்ட நூல் வடிவமே முதல் தமிழ் அச்சுநூல் என்று ஆய்வாளர்களால் கொள்ளப்படுகிறது. | ருஷ்யா (1563), ஆபிரிக்கா (1624), கிரீஸ் (1821) நாடுளின் முதல் அச்சு நூல்களை விட முந்தையது இந்நூல் என்று [[ஆ. சிவசுப்ரமணியம்]] கூறுகிறார். இந்திய மொழிகளில் முதலில் அச்சுவடிவில் வந்த நூல் இதுவே என்பது முழுமையாக ஏற்கப்பட்டுள்ளது. 1574 இறுதியில் புன்னக்காயலில் இருந்து கோவாவுக்கு தற்காலிக மாற்றம் பெற்றுச் சென்ற ஹென்ரிக் ஹென்ரிக்கஸ் அங்கே நிகழ்ந்துகொண்டிருந்த அச்சுப்பணிகளில் ஆர்வம் கொண்டு தன் நூல்களையும் அச்சிட்டு பரவலாக வெளியிட முனைந்தார். கேரள நம்பூதிரியாக இருந்து மதம் மாறி 1562 ஆம் ஆண்டு ஏசு சபையில் இணைந்தவர் எனப்படும் அருட்தந்தை பெரோ லூயிஸ் அவருக்கு உதவினார். கொல்லத்தில் இருந்த அருட்தந்தை யோவான் த ஃபாரியாவின் மேற்பார்வையில் கோவாவில் யோவான் கோன்சால்வஸ் 1577ல் முதல் தமிழ் எழுத்து அச்சுகளை வடித்தார் எனப்படுகிறது. ஆனால் கோவாவில் தம்பிரான் வணக்கம் அச்சிடப்பட்டது என்பது ஐயமின்றி நிரூபிக்கப்படவில்லை. கோன்சால்வஸ் உருவாக்கிய எழுத்துருக்களால் 1578 ஆம் ஆண்டு கொல்லத்தில் அச்சிடப்பட்ட நூல் வடிவமே முதல் தமிழ் அச்சுநூல் என்று ஆய்வாளர்களால் கொள்ளப்படுகிறது. | ||
== நூல் பிரதியும் மறுபதிப்பும் == | |||
கர்ட் எர்சிங்கர் 1951 இல் ஹார்வார்டு பல்க்கைக்கழகத்துக்கு ‘தம்பிரான் வணக்கம்’ பிரதி ஒன்றை அன்பளிப்பாக அளித்தார். அது இன்றும் பார்வைக்கு உள்ளது. தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்திலும் ஹைதராபாத் அமெரிக்க கல்வி மையத்திலும் இதன் நகல் பிரதிகள் உள்ளன. தம்பிரான் வணக்கம், கிரிசித்தியானி வணக்கம் இரண்டையும் ஒரே நூலாக தூத்துக்குடி தமிழ் இலக்கியக் கழகம் வழியாக 1963இல் ச. இராசமாணிக்கம் பதிப்பித்து வெளியிட்டார். [[தமிழ்நாடன்]] மூல நூலின் ஒளிப்பிரதியாக ‘தம்பிரான் வணக்கம்’ நூலை இருமுறை பதிப்பித்துள்ளார். | கர்ட் எர்சிங்கர் 1951 இல் ஹார்வார்டு பல்க்கைக்கழகத்துக்கு ‘தம்பிரான் வணக்கம்’ பிரதி ஒன்றை அன்பளிப்பாக அளித்தார். அது இன்றும் பார்வைக்கு உள்ளது. தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்திலும் ஹைதராபாத் அமெரிக்க கல்வி மையத்திலும் இதன் நகல் பிரதிகள் உள்ளன. தம்பிரான் வணக்கம், கிரிசித்தியானி வணக்கம் இரண்டையும் ஒரே நூலாக தூத்துக்குடி தமிழ் இலக்கியக் கழகம் வழியாக 1963இல் ச. இராசமாணிக்கம் பதிப்பித்து வெளியிட்டார். [[தமிழ்நாடன்]] மூல நூலின் ஒளிப்பிரதியாக ‘தம்பிரான் வணக்கம்’ நூலை இருமுறை பதிப்பித்துள்ளார். | ||
ஆய்வாளர் கால சுப்ரமணியம் ‘கோவா அச்சுப் புத்தகங்களின் பட்டியல் பற்றி பியரி தெசாம்ப் கூறும்போது 1577இல் தமிழில் ஒரு புத்தகம் அங்கு அச்சிடப்பட்டதாகக் குறிப்பிடுகிறார். அதன் பிரதி ஒன்று லெய்டன் பல்கலைக்கழகத்தில் இருந்ததாகக் கூறுகிறார். அண்ட்ரிக், வாலக்னானோ இருவருக்கும் நடந்த கடிதப் பரிவர்த்தனையில் இந்நூல் பற்றி உறுதிசெய்யப்படுவதாக விக்கி ஜோசபஸ் கூறுகிறார். கிரஹாம் ஷா இந்நூல் பற்றி உறுதி செய்கிறார். ஜோசப் காலிகர் என்பவர் 1893இல் லெய்டன் பல்கலைக் கழகத்துக்கு அன்பளிப்பாக அளித்த நூல்களில் இதுவும் ஒன்று. லெய்டன் பல்கலைக்கழகத்தின் குறிப்புகள் கூறும் இத்தமிழ்நூல் 1716 முதல் அங்கிருந்து காணாமல் போய்விட்டது. அது கிடைத்தால் அதுவே முதல் அச்சுத் தமிழ் நூலாக அமையும். அதுவரை ‘தம்பிரான் வணக்கம்’ தான் முதல் அச்சுத் தமிழ்நூலாக விளங்கிநிற்கும்’ என்று கூறுகி[https://kaalasubramaniam.wordpress.com/2014/10/19/%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/ றார்.] | ஆய்வாளர் கால சுப்ரமணியம் ‘கோவா அச்சுப் புத்தகங்களின் பட்டியல் பற்றி பியரி தெசாம்ப் கூறும்போது 1577இல் தமிழில் ஒரு புத்தகம் அங்கு அச்சிடப்பட்டதாகக் குறிப்பிடுகிறார். அதன் பிரதி ஒன்று லெய்டன் பல்கலைக்கழகத்தில் இருந்ததாகக் கூறுகிறார். அண்ட்ரிக், வாலக்னானோ இருவருக்கும் நடந்த கடிதப் பரிவர்த்தனையில் இந்நூல் பற்றி உறுதிசெய்யப்படுவதாக விக்கி ஜோசபஸ் கூறுகிறார். கிரஹாம் ஷா இந்நூல் பற்றி உறுதி செய்கிறார். ஜோசப் காலிகர் என்பவர் 1893இல் லெய்டன் பல்கலைக் கழகத்துக்கு அன்பளிப்பாக அளித்த நூல்களில் இதுவும் ஒன்று. லெய்டன் பல்கலைக்கழகத்தின் குறிப்புகள் கூறும் இத்தமிழ்நூல் 1716 முதல் அங்கிருந்து காணாமல் போய்விட்டது. அது கிடைத்தால் அதுவே முதல் அச்சுத் தமிழ் நூலாக அமையும். அதுவரை ‘தம்பிரான் வணக்கம்’ தான் முதல் அச்சுத் தமிழ்நூலாக விளங்கிநிற்கும்’ என்று கூறுகி[https://kaalasubramaniam.wordpress.com/2014/10/19/%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/ றார்.] | ||
== நூல் அமைப்பு == | == நூல் அமைப்பு == |
Revision as of 17:51, 5 May 2022
தம்பிரான் வணக்கம் ( 1578) தமிழில் அச்சிடப்பட்ட முதல் புத்தகம். 1578-ல் ஹென்ரிக் ஹென்ரிகஸ் ((Henrique Henriques) என்ற போர்த்துகீசிய மதபோதகர் இந்தப் புத்தகத்தை வெளியிட்டார். கிறிஸ்தவ வழிபாட்டு நூல்.
நூல் உருவாக்கம்
ஹென்ரிக் ஹென்ரிக்கஸ் அல்லது அண்டிரிக் அடிகளால் இந்நூல் 20 அக்டோபர் 1578 ல் அச்சிடப்பட்டது. ஜோர்ஜ் மார்க்கோஸ் பாதிரியார் போர்ச்சுக்கல் மொழியில் எழுதிய கிறிஸ்தவத்தின் அடிப்படைகள், டாக்ட்ரினா கிறிஸ்தம் (Doctrina Christam Ordenada A Maneira De Dialogo, Para Ensinar Os Meninos (1592)) என்ற நூலின் மொழியாக்கம் இது. இந்நூல் போர்ச்சுக்கல் கத்தோலிக்கத்தின் அடிப்படை கல்விநூல். இந்தியாவில் இதன் பல வடிவங்கள் மொழியாக்கத்திலும் மறு ஆக்கத்திலும் வெளிவந்துள்ளன. புனித சேவியர் இந்நூலை தழுவி ஒரு நூல் எழுதியிருக்கிறார். என்ரிக்கஸ் இந்நூலை பீட்டர் மானுவல் என்னும் துறவியுடன் இணைந்து மொழியாக்கம் செய்திருக்கிறார். முத்துக்குளித்துறை வட்டார வழக்கிலேயே இந்நூல் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.
ருஷ்யா (1563), ஆபிரிக்கா (1624), கிரீஸ் (1821) நாடுளின் முதல் அச்சு நூல்களை விட முந்தையது இந்நூல் என்று ஆ. சிவசுப்ரமணியம் கூறுகிறார். இந்திய மொழிகளில் முதலில் அச்சுவடிவில் வந்த நூல் இதுவே என்பது முழுமையாக ஏற்கப்பட்டுள்ளது. 1574 இறுதியில் புன்னக்காயலில் இருந்து கோவாவுக்கு தற்காலிக மாற்றம் பெற்றுச் சென்ற ஹென்ரிக் ஹென்ரிக்கஸ் அங்கே நிகழ்ந்துகொண்டிருந்த அச்சுப்பணிகளில் ஆர்வம் கொண்டு தன் நூல்களையும் அச்சிட்டு பரவலாக வெளியிட முனைந்தார். கேரள நம்பூதிரியாக இருந்து மதம் மாறி 1562 ஆம் ஆண்டு ஏசு சபையில் இணைந்தவர் எனப்படும் அருட்தந்தை பெரோ லூயிஸ் அவருக்கு உதவினார். கொல்லத்தில் இருந்த அருட்தந்தை யோவான் த ஃபாரியாவின் மேற்பார்வையில் கோவாவில் யோவான் கோன்சால்வஸ் 1577ல் முதல் தமிழ் எழுத்து அச்சுகளை வடித்தார் எனப்படுகிறது. ஆனால் கோவாவில் தம்பிரான் வணக்கம் அச்சிடப்பட்டது என்பது ஐயமின்றி நிரூபிக்கப்படவில்லை. கோன்சால்வஸ் உருவாக்கிய எழுத்துருக்களால் 1578 ஆம் ஆண்டு கொல்லத்தில் அச்சிடப்பட்ட நூல் வடிவமே முதல் தமிழ் அச்சுநூல் என்று ஆய்வாளர்களால் கொள்ளப்படுகிறது.
நூல் பிரதியும் மறுபதிப்பும்
கர்ட் எர்சிங்கர் 1951 இல் ஹார்வார்டு பல்க்கைக்கழகத்துக்கு ‘தம்பிரான் வணக்கம்’ பிரதி ஒன்றை அன்பளிப்பாக அளித்தார். அது இன்றும் பார்வைக்கு உள்ளது. தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்திலும் ஹைதராபாத் அமெரிக்க கல்வி மையத்திலும் இதன் நகல் பிரதிகள் உள்ளன. தம்பிரான் வணக்கம், கிரிசித்தியானி வணக்கம் இரண்டையும் ஒரே நூலாக தூத்துக்குடி தமிழ் இலக்கியக் கழகம் வழியாக 1963இல் ச. இராசமாணிக்கம் பதிப்பித்து வெளியிட்டார். தமிழ்நாடன் மூல நூலின் ஒளிப்பிரதியாக ‘தம்பிரான் வணக்கம்’ நூலை இருமுறை பதிப்பித்துள்ளார். ஆய்வாளர் கால சுப்ரமணியம் ‘கோவா அச்சுப் புத்தகங்களின் பட்டியல் பற்றி பியரி தெசாம்ப் கூறும்போது 1577இல் தமிழில் ஒரு புத்தகம் அங்கு அச்சிடப்பட்டதாகக் குறிப்பிடுகிறார். அதன் பிரதி ஒன்று லெய்டன் பல்கலைக்கழகத்தில் இருந்ததாகக் கூறுகிறார். அண்ட்ரிக், வாலக்னானோ இருவருக்கும் நடந்த கடிதப் பரிவர்த்தனையில் இந்நூல் பற்றி உறுதிசெய்யப்படுவதாக விக்கி ஜோசபஸ் கூறுகிறார். கிரஹாம் ஷா இந்நூல் பற்றி உறுதி செய்கிறார். ஜோசப் காலிகர் என்பவர் 1893இல் லெய்டன் பல்கலைக் கழகத்துக்கு அன்பளிப்பாக அளித்த நூல்களில் இதுவும் ஒன்று. லெய்டன் பல்கலைக்கழகத்தின் குறிப்புகள் கூறும் இத்தமிழ்நூல் 1716 முதல் அங்கிருந்து காணாமல் போய்விட்டது. அது கிடைத்தால் அதுவே முதல் அச்சுத் தமிழ் நூலாக அமையும். அதுவரை ‘தம்பிரான் வணக்கம்’ தான் முதல் அச்சுத் தமிழ்நூலாக விளங்கிநிற்கும்’ என்று கூறுகிறார்.
நூல் அமைப்பு
இந்நூல் 24 பக்கங்களும், ஒவ்வொரு பக்கத்திலும் சராசரியாகப் 16 வரிகளும் கொண்டது.. 10x14 சென்டிமீட்டர் நீள அகலம் கொண்டது. தமிழ் நூலின் முகப்புப் பக்கத்தில் மேலே ‘Doctrina Christam en Lingua Malauar Tamul’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பக்கத்தின் நடுவில் கிறிஸ்தவத் திரித்துவ தேவன் (Trinity) வடிவம் மரச்செதுக்கு ஓவியமாக பதிக்கப்பட்டுள்ளது. பக்க்த்தின் நான்கு ஓரங்களிலும் சிலுவைகளும் அலங்கார கோலங்களும் வரையப்பட்டுள்ளன. கீழே அக்கால வழக்கிலிருந்த தமிழ் எழுதும் முறையில் தமிழ்த் தலைப்பு தரப்பட்டுள்ளது. இக்காலகட்டத்தில் தமிழில் அரைப்புள்ளிகள் நிறுத்தற்புள்ளிகள் போன்றவை வரவில்லை. சுவடிகளில் காணப்படும் சொற்கள் பிரிக்கப்படாமல் எழுதும் முறையே இதிலும் உள்ளது. 18 உள்தலைப்புகள் போர்த்துகீசிய மொழியில் இருக்கின்றன. இது அச்சிடப்பட்ட காகித சீன வணிகர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டது என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்
நடை
இந்தப் புத்தகத்திலிருந்து சில வரிகள்:
ஆகாசமும் பூமியும் படச்சவன் சர்வமும் ஆனவனே, பிதாவே தம்பிரானே விசுவாசம். அவ்வண்ணம் என்னடே கர்த்தாவே யேசு கிறிஸ்து அவ்வனடே புத்ரனே ஒருவனே. சுத்தமான சித்தத்தினொடெய கருணே கொண்டு கெற்பம் ஆயி: கன்னியாஸ்திரி மரியத்தில் பெறந்தவன்: போஞ்சியு பிலாத்து விதித்த விதிகொண்டு வெசனப்பட்டு: குருசினில் தூக்கிச் செத்தான்: குழில் வைத்து...
இந்நூலின் மொழிநடை பிற்கால பைபிள் மொழிநடையில் எவ்வண்ணம் மாறுபட்டுள்ளது என்பதை ஆ. சிவசுப்ரமணியம் இவ்வாறு ஒப்பிட்டுக் காட்டுகிறார்.
தம்பிரான் வணக்கம் : முதலாவது எல்லாத்திரும் பார்க்க தம்பிரானை நேசித்திருப்பது
பிற்கால மொழியாக்கம் : உனக்கு கர்த்தாவான சர்வேசுவரன் நானே. நம்மைத்தவிர சர்வேசுவரன் உனக்கு இல்லாமல் போவதாக
தம்பிரான் வணக்கம் : இரண்டாவது தம்பிரான் திருநாமத்தைக் கொண்டு வீணே சத்தியம் செய்யாமலிருப்பது.
பிற்கால மொழியாக்கம் : சர்வேசுவரனுடைய திருப்பெயரை வீணே சொல்லாமலிருப்பாயாக
இலக்கிய இடம்
தம்புரான் வணக்கம் தமிழில் அச்சிடப்பட்ட முதல் நூல் என்ற வகையில் மிகுந்த பண்பாட்டு முக்கியத்துவம் கொண்டது. இதன் உரைநடை வடிவம் அக்கால பேச்சுமொழி எப்படி இருந்தது என்பதற்கான சான்று. தமிழ் உரைநடை உருவான தொடக்கப்புள்ளி இது. பேச்சுமொழியை கொண்டு அடிப்படைக் கருத்துக்களை எழுதமுற்படும்போது உருவாவது உரைநடை. இந்நூல் மதக்கொள்கையின் நுண்ணிய விவாதத்தை பேச்சுமொழியில் எழுத முற்படுவதனால் உரைநடை உருவாக்கத்தின் அறைகூவலை முதலிலேயே எடுத்துக்கொண்டுவிட்டது. அதன் எல்லா சிக்கல்களும் இதில் உள்ளன. கலைச்சொல்லாக்கம், சொற்றொடரமைப்பு ஆகியவற்றில் தமிழ் உரைநடையில் என்றுமுள்ள அறைகூவல்களை இந்நூலே எதிர்கொண்டிருக்கிறது. ஆகவே தமிழ் உரைநடை குறித்த எந்த ஆய்வும் இந்நூலில் இருந்தே தொடங்கப்படவேண்டும்.
தொடர்புடைய சுட்டிகள்
- சிலிகன்ஷெல்ஃப் தளத்தில் ஒரு பதிவு
- மோ. நேவிஸ் விக்டோரியா எழுதிய புத்தகம் - தம்பிரான் வணக்கம் - தமிழ் மொழியின் முதல் அச்சு புத்தகம் (2012), பாவை அச்சகம் வெளியீடு
- https://www.hindutamil.in/news/literature/1771-.html
- https://www.heritagevembaru.in/2017/08/
- https://kaalasubramaniam.wordpress.com/2014/1தம்புரான் வணக்கம் காலசுப்ரமணியம்/
அடிக்குறிப்புகள்
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.