தம்பிரான் வணக்கம்: Difference between revisions
No edit summary |
|||
Line 1: | Line 1: | ||
[[File:thambiran_vanakkam.jpg|right]] | [[File:thambiran_vanakkam.jpg|right]] | ||
தம்பிரான் வணக்கம் ( 1578) தமிழில் அச்சிடப்பட்ட முதல் புத்தகம். 1578-ல் [[ஹென்ரிக் ஹென்ரிக்கஸ்|ஹென்ரிக் ஹென்ரிகஸ்]] ((Henrique Henriques) என்ற போர்த்துகீசிய மதபோதகர் இந்தப் புத்தகத்தை வெளியிட்டார். கிறிஸ்தவ வழிபாட்டு நூல். | |||
== | == நூல் உருவாக்கம் == | ||
தம்பிரான் வணக்கம் | [[ஹென்ரிக் ஹென்ரிக்கஸ்]] அல்லது அண்டிரிக் அடிகளால் இந்நூல் 20 அக்டோபர் 1578 ல் அச்சிடப்பட்டது. 1577ல் கோவாவில் தமிழ் எழுத்துக்கள் வார்க்கப்பட்டன என்று சொல்லப்படுகிறது. ஆனால் அவர்கள் அச்சிட்டநூல்கள் பற்றி செய்திகள் இல்லை. 1578ல் கொல்லத்தில் தமிழ் எழுத்துருக்கள் வார்க்கப்பட்டன. கான்ஸ்லாவஸ் என்னும் கருமான் இவ்வெழுத்துக்களை வார்த்தார். இவர் மதம் மாறிய ஓர் இந்தியர், தமிழை தாய்மொழியாகக் கொண்டவர். அவ்வெழுத்துக்களைக் கொண்டு கொல்லத்திலேயே தம்பிரான் வணக்கம் அச்சிடப்பட்டது. | ||
ஜோர்ஜ் மார்க்கோஸ் பாதிரியார் போர்ச்சுக்கல் மொழியில் எழுதிய கிறிஸ்தவத்தின் அடிப்படைகள், டாக்ட்ரினா கிறிஸ்தம் ([https://blackwells.co.uk/bookshop/product/Doctrina-Christam-Ordenada-A-Maneira-De-Dialogo-Para-Ensinar-Os-Meninos-1592-by-Marcos-Jorge-author-Inacio-Martins-author/9781166232580 Doctrina Christam Ordenada A Maneira De Dialogo, Para Ensinar Os Meninos] (1592)) என்ற நூலின் மொழியாக்கம் இது. இந்நூல் போர்ச்சுக்கல் கத்தோலிக்கத்தின் அடிப்படை கல்விநூல். இந்தியாவில் இதன் பல வடிவங்கள் மொழியாக்கத்திலும் மறு ஆக்கத்திலும் வெளிவந்துள்ளன. என்ரிக்கஸ் இந்நூலை பீட்டர் மானுவல் என்னும் துறவியுடன் இணைந்து மொழியாக்கம் செய்திருக்கிறார். முத்துக்குளித்துறை வட்டார வழக்கிலேயே இந்நூல் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது | |||
இந்தப் புத்தகம் <strong>Doctrina Christam</strong> என்ற வினாவிடை வடிவத்தில் உள்ள கத்தோலிக்க வழிபாட்டு (catechism) புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு. 24 பக்கங்களும், ஒவ்வொரு பக்கத்திலும் 16 வரிகளும் கொண்ட புத்தகம். 10x14 சென்டிமீட்டர் நீள அகலம் கொண்டது. போர்ச்சுக்கலில் இருந்து கொண்டு வரப்பட்டு கொல்லத்தில் நிறுவப்பட்ட அச்சு எந்திரத்தினால் பதிக்கப்பட்டது. இதற்கு தேவையான காகிதம் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. | இந்தப் புத்தகம் <strong>Doctrina Christam</strong> என்ற வினாவிடை வடிவத்தில் உள்ள கத்தோலிக்க வழிபாட்டு (catechism) புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு. 24 பக்கங்களும், ஒவ்வொரு பக்கத்திலும் 16 வரிகளும் கொண்ட புத்தகம். 10x14 சென்டிமீட்டர் நீள அகலம் கொண்டது. போர்ச்சுக்கலில் இருந்து கொண்டு வரப்பட்டு கொல்லத்தில் நிறுவப்பட்ட அச்சு எந்திரத்தினால் பதிக்கப்பட்டது. இதற்கு தேவையான காகிதம் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. | ||
இன்று ஒரே ஒரு பிரதி மட்டுமே உள்ளது. அது ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் ஹவ்ட்டன் (Houghton) நூலகத்தில்<ref>[https://library.harvard.edu/libraries/houghton ஹார்வர்டு பல்கலைக்கழகம்-ஹ்யூட்டன் நூலகம்]</ref> இருக்கிறது. மின்பிரதி<ref>[https://digitalcollections.library.harvard.edu/catalog/990057347240203941 மின்பிரதி-Doctrina Christam]</ref> கிடைக்கிறது. | இன்று ஒரே ஒரு பிரதி மட்டுமே உள்ளது. அது ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் ஹவ்ட்டன் (Houghton) நூலகத்தில்<ref>[https://library.harvard.edu/libraries/houghton ஹார்வர்டு பல்கலைக்கழகம்-ஹ்யூட்டன் நூலகம்]</ref> இருக்கிறது. மின்பிரதி<ref>[https://digitalcollections.library.harvard.edu/catalog/990057347240203941 மின்பிரதி-Doctrina Christam]</ref> கிடைக்கிறது. | ||
Revision as of 19:58, 4 May 2022
தம்பிரான் வணக்கம் ( 1578) தமிழில் அச்சிடப்பட்ட முதல் புத்தகம். 1578-ல் ஹென்ரிக் ஹென்ரிகஸ் ((Henrique Henriques) என்ற போர்த்துகீசிய மதபோதகர் இந்தப் புத்தகத்தை வெளியிட்டார். கிறிஸ்தவ வழிபாட்டு நூல்.
நூல் உருவாக்கம்
ஹென்ரிக் ஹென்ரிக்கஸ் அல்லது அண்டிரிக் அடிகளால் இந்நூல் 20 அக்டோபர் 1578 ல் அச்சிடப்பட்டது. 1577ல் கோவாவில் தமிழ் எழுத்துக்கள் வார்க்கப்பட்டன என்று சொல்லப்படுகிறது. ஆனால் அவர்கள் அச்சிட்டநூல்கள் பற்றி செய்திகள் இல்லை. 1578ல் கொல்லத்தில் தமிழ் எழுத்துருக்கள் வார்க்கப்பட்டன. கான்ஸ்லாவஸ் என்னும் கருமான் இவ்வெழுத்துக்களை வார்த்தார். இவர் மதம் மாறிய ஓர் இந்தியர், தமிழை தாய்மொழியாகக் கொண்டவர். அவ்வெழுத்துக்களைக் கொண்டு கொல்லத்திலேயே தம்பிரான் வணக்கம் அச்சிடப்பட்டது.
ஜோர்ஜ் மார்க்கோஸ் பாதிரியார் போர்ச்சுக்கல் மொழியில் எழுதிய கிறிஸ்தவத்தின் அடிப்படைகள், டாக்ட்ரினா கிறிஸ்தம் (Doctrina Christam Ordenada A Maneira De Dialogo, Para Ensinar Os Meninos (1592)) என்ற நூலின் மொழியாக்கம் இது. இந்நூல் போர்ச்சுக்கல் கத்தோலிக்கத்தின் அடிப்படை கல்விநூல். இந்தியாவில் இதன் பல வடிவங்கள் மொழியாக்கத்திலும் மறு ஆக்கத்திலும் வெளிவந்துள்ளன. என்ரிக்கஸ் இந்நூலை பீட்டர் மானுவல் என்னும் துறவியுடன் இணைந்து மொழியாக்கம் செய்திருக்கிறார். முத்துக்குளித்துறை வட்டார வழக்கிலேயே இந்நூல் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது
இந்தப் புத்தகம் Doctrina Christam என்ற வினாவிடை வடிவத்தில் உள்ள கத்தோலிக்க வழிபாட்டு (catechism) புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு. 24 பக்கங்களும், ஒவ்வொரு பக்கத்திலும் 16 வரிகளும் கொண்ட புத்தகம். 10x14 சென்டிமீட்டர் நீள அகலம் கொண்டது. போர்ச்சுக்கலில் இருந்து கொண்டு வரப்பட்டு கொல்லத்தில் நிறுவப்பட்ட அச்சு எந்திரத்தினால் பதிக்கப்பட்டது. இதற்கு தேவையான காகிதம் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. இன்று ஒரே ஒரு பிரதி மட்டுமே உள்ளது. அது ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் ஹவ்ட்டன் (Houghton) நூலகத்தில்[1] இருக்கிறது. மின்பிரதி[2] கிடைக்கிறது.
இந்தப் புத்தகத்திலிருந்து சில வரிகள்:
ஆகாசமும் பூமியும் படச்சவன் சர்வமும் ஆனவனே, பிதாவே தம்பிரானே விசுவாசம். அவ்வண்ணம் என்னடே கர்த்தாவே யேசு கிறிஸ்து அவ்வனடே புத்ரனே ஒருவனே. சுத்தமான சித்தத்தினொடெய கருணே கொண்டு கெற்பம் ஆயி: கன்னியாஸ்திரி மரியத்தில் பெறந்தவன்: போஞ்சியு பிலாத்து விதித்த விதிகொண்டு வெசனப்பட்டு: குருசினில் தூக்கிச் செத்தான்: குழில் வைத்து...
முந்தைய முயற்சிகள்
இதற்கு முன்பும் ஒரு தமிழ் புத்தகம் 1554-ல் வெளிவந்திருக்கிறது, ஆனால் அது போர்ச்சுக்கீசிய வரி வடிவத்தில் பதிக்கப்பட்டிருக்கிறது. புத்தகத்தின் பெயர் Carthila e lingoa Tamul e Portugues. இன்று இந்தப் புத்தகத்தின் ஒரே ஒரு பிரதி மட்டும் போர்த்துகலில் பெலம் (லிஸ்பன்) நகர அருங்காட்சியகத்தில் உள்ளது.
ஹென்றிகஸ் 1520-ல் பிறந்தவர். 1546-ல் இந்தியா வந்தார். ஃப்ரான்சிஸ் சேவியரின் கீழே பணி புரிந்திருக்கிறார். முதலில் கோவாவிலும் பிறகு தூத்துக்குடியிலும் பணி. தம்பிரான் வணக்கத்துக்குப் பிறகு 1579-ல் கிறிஸ்தியானி வணக்கம் என்று வழிபாட்டு நூலையும் பிறகு கிறிஸ்துவப் புனிதர்களின் வாழ்க்கை வரலாற்றையும் (அடியார் வரலாறு, 1586) தமிழில் புத்தகங்களாகக் கொண்டு வந்திருக்கிறார். மதமாற்றப் பணி வெற்றிகரமாக நடக்க உள்ளூர் மொழியில் பேசுவதும் வழிபடுவதும் முக்கியம் என்று கருதி இருக்கிறார், அதுவே இந்த முயற்சிகளுக்கு தூண்டுகோலாக இருந்தது. தமிழுக்கு ஒரு இலக்கணமும், அகராதியும் எழுதியதாகச் சொல்லப்படுகிறது, அவை தொலைந்துவிட்டன. 1600-ல் மறைந்தார். அவரது கல்லறையை இன்றும் தூத்துக்குடியில் காணலாம்.
தொடர்புடைய சுட்டிகள்
- சிலிகன்ஷெல்ஃப் தளத்தில் ஒரு பதிவு
- மோ. நேவிஸ் விக்டோரியா எழுதிய புத்தகம் - தம்பிரான் வணக்கம் - தமிழ் மொழியின் முதல் அச்சு புத்தகம் (2012), பாவை அச்சகம் வெளியீடு
அடிக்குறிப்புகள்
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.