ஹரிஹரசுதன் தங்கவேலு: Difference between revisions
No edit summary |
No edit summary |
||
Line 7: | Line 7: | ||
== பிறப்பு, கல்வி & திருமணம் == | == பிறப்பு, கல்வி & திருமணம் == | ||
ஹரிஹரசுதன் தங்கவேலு கோவையில் பிறந்தார். வணிக மேலாண்மையில் முதுநிலை | ஹரிஹரசுதன் தங்கவேலு கோவையில் பிறந்தார். வணிக மேலாண்மையில் முதுநிலை பயின்றார். அதன் பின்னர், கணிப்பொறி ஹேக்கிங் துறையில் நிபுணத்துவம் பெற்றார். தற்போது தகவல் பாதுகாப்பு மற்றும் சைபர் மோசடிகளை கண்டறியும் நிபுணராக தகவல் தொழில்நுட்ப (ஐ.டி) துறையில் பணியாற்றி வருகிறார். தமிழக அரசின் இணைய குற்றங்கள் வாரியத்தின் நடவடிக்கைகளில் பங்களிக்கிறார். | ||
மனைவி ஐஸ்வர்யா நல்லமுத்து. இவர்களுக்கு ஆர்யா என்ற ஒரு மகன் உள்ளார். | |||
== படைப்புலகம் == | == படைப்புலகம் == |
Revision as of 05:32, 26 June 2024
ஹரிஹரசுதன் தங்கவேலு ஓர் எழுத்தாளர், இணைய மோசடிகளை கண்டறியும் தொழில்நுட்ப ஆய்வாளர்.
சர்வதேச மின்னணு வர்த்தக சபையால் அங்கீகரிக்கப்பட்ட ஹேக்கிங் நிபுணர். தகவல் பாதுகாப்பு மற்றும் சைபர் மோசடிகளைக் கண்டறியும் வல்லுநராகத் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றிவருகிறார்.[1] எட்டு ஆண்டுகளாக சமூக வலைதளங்கள் , தினசரி மற்றும் வார இதழ்களில் கதைகள் மற்றும் விழிப்புணர்வுக் கட்டுரைகள் எழுதி வருகிறார். பள்ளி மற்றும் கல்லூரிகளில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் அளிப்பது, கௌரவ விருந்தினராக பங்கேற்பது என தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
சென்னை தமிழ்ச் சங்கத்தின் 2018-ம் ஆண்டிற்கான சேக்கிழார் விருதினை பெற்றவர். இவரது ‘இஸ்ரோவின் கதை’ நூல் 2021-ம் ஆண்டின் தமிழக அரசின் சிறந்த நூலுக்கான விருதினைப் பெற்றது.
பிறப்பு, கல்வி & திருமணம்
ஹரிஹரசுதன் தங்கவேலு கோவையில் பிறந்தார். வணிக மேலாண்மையில் முதுநிலை பயின்றார். அதன் பின்னர், கணிப்பொறி ஹேக்கிங் துறையில் நிபுணத்துவம் பெற்றார். தற்போது தகவல் பாதுகாப்பு மற்றும் சைபர் மோசடிகளை கண்டறியும் நிபுணராக தகவல் தொழில்நுட்ப (ஐ.டி) துறையில் பணியாற்றி வருகிறார். தமிழக அரசின் இணைய குற்றங்கள் வாரியத்தின் நடவடிக்கைகளில் பங்களிக்கிறார்.
மனைவி ஐஸ்வர்யா நல்லமுத்து. இவர்களுக்கு ஆர்யா என்ற ஒரு மகன் உள்ளார்.
படைப்புலகம்
2018-ம் ஆண்டு மின்னம்பலம் இணைய இதழில், நிழல் உலக தாதா ’தாவூத் இப்ராஹிம்’ பற்றி ஹரிஹரசுதன் எழுதிய கட்டுரைத்தொடர் நல்ல வரவேற்பைப்பெற்றதுடன் கணிசமான இணைய வாசகர்களையும் பெற்றுத்தந்தது[2].
இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் (ISRO) வளர்ச்சியைப்பற்றிய ஹரிஹரசுதனின் ‘எங்கள் கனா’ என்ற கட்டுரைத்தொகுப்பு, 2019 ஆம் ஆண்டு அமேசான் இந்தியா நடத்திய எழுத்தாளர்களுக்கான (Pen to Publish) போட்டியில் அமேசான் கிண்டில் பதிப்பாக வெளியாகி வாசகர்களிடையெ நல்ல வரவேற்பை பெற்றது[3]. இதன் விளைவாக, 2021-ம் ஆண்டு 'இஸ்ரோவின் கதை’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டு கிழக்கு பதிப்பகத்தின் மூலம் அச்சுப்பிரதியாக வெளியானது[4]. இந்து திசை இதழின் கவனிக்க வேண்டிய ஐந்து புத்தகங்கள் பட்டியலில் இடம் பெற்றது[5].
ஹரிஹரசுதன் A.I (Artificial intelligence) தொழில்நுட்பம் குறித்து 2023-ம் ஆண்டு குமுதம் வார இதழில் முப்பது வாரமாக எழுதிய 'A.I எனும் ஏழாம் அறிவு‘ கட்டுரைத்தொடர் 2024-ம் ஆண்டு புத்தகத்திருவிழாவையொட்டி வெளியாகி வாசகர்களிடையே நல்ல வரவேற்பைப்பெற்றது[6].
இவர் தற்போது ஆனந்த விகடன் வார இதழில் ‘இருள் வலை வில்லன்கள்’ என்ற பெயரில் தொலைதொடர்பு சாதனங்கள் வழியே நிகழும் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வுக்கட்டுரைகளைத்தொடர்களை எழுதி வருகிறார்.
படைப்புகள்
கட்டுரைத் தொடர்கள்
- 2018 - தாவூத் இப்ராஹிம் - மின்னம்பலம்
- 2023 - A.I எனும் ஏழாம் அறிவு - குமுதம்
- 2024 - இருள் வலை வில்லன்கள் - ஆனந்த விகடன்
புத்தகங்கள்
விருதுகள்
- 2018 - சேக்கிழார் தமிழ் விருது
- 2021 - தொழில்நுட்பவியல் சிறந்த நூல் விருது - இஸ்ரோவின் கதை (2024ம் ஆண்டு பெற்றது)
அடிக்குறிப்புகள்
- ↑ ஜிபே, பேடிஎம் மூலம் பல லட்ச ரூபாய் மோசடி நடந்தது எப்படி? - பிபிசி தமிழ்
- ↑ மின்னம்பலம் - தாவூத் இப்ராஹிம் தொடர்
- ↑ இஸ்ரோவின் கதை - Kindle Edition
- ↑ இஸ்ரோவின் கதை - நூல் வெளியீட்டு விழா
- ↑ கவனிக்க வேண்டிய 5 புத்தகங்கள் (இந்து தமிழ் திசை)
- ↑ AI எனும் ஏழாம் அறிவு - செயற்கை நுண்ணறிவின் விரிவான பார்வை (தினமணி)
- ↑ இஸ்ரோவின் கதை - குட்ரீட்ஸ் (goodreads) இணையதளம்
- ↑ ஜீரோ டிகிரி வெளியீடு - AI எனும் ஏழாம் அறிவு
வெளி இணைப்புகள்
- புதிய கல்வி - அறிவியல் நூல்கள் (இந்து தமிழ் திசை)
- இஸ்ரோவின் கதை - புத்தக விமர்சனம் (காவேரி தொலைக்காட்சி)
- இஸ்ரோவின் கதை - நூல் குறித்து முன்னாள் இஸ்ரோ தலைவர் மயில்சாமி அண்ணாதுரை (காணொளி)
- இஸ்ரோவின் கதை - நூலறிமுகம் (மீடியம்.காம்)
- AI எனும் ஏழாம் அறிவு - நூலறிமுகம் (புக் டே இணையதளம்)
- AI எனும் ஏழாம் அறிவு - நூல் குறித்து பா. ராகவன் (காணொளி)