சிதம்பர பாரதியார்: Difference between revisions
Logamadevi (talk | contribs) No edit summary |
|||
Line 26: | Line 26: | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* [https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt2kupd#book1/3 தமிழ்ப்புலவர் வரிசை: சு.அ. ராமசாமிப்புலவர்] | * [https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt2kupd#book1/3 தமிழ்ப்புலவர் வரிசை: சு.அ. ராமசாமிப்புலவர்] | ||
{{ | |||
{{first review completed}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 10:12, 10 April 2022
சிதம்பர பாரதியார் (பொ.யு. 1893) தமிழ்ப்புலவர். சிற்றிலக்கியப்புலவர். சிவபெருமான் மீது இசைப்பாடல்கள் இயற்றியுள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு
சிவகங்கை மாவட்டம், புவனேகவீரபாண்டியபுரம் எனும் மழவாபுரியில் சுப்பிரமணிய பாரதியாருக்கு 1893-ல் மகனாகப் பிறந்தார். வேறுபெயர் சின்னச்சாமி பாரதியார். அண்ணன் சுப்பராமர். தந்தையிடமும், பிற அறிஞர்களிடமும் இயல், இசை, நாடகம் கற்றார். மகன் ராமசாமி ஐயரும் புலவராக இருந்தார். இறுதிக்காலங்களில் துறவறம் மேற்கொண்டு சிவதொண்டு செய்தார்.
இலக்கிய வாழ்க்கை
திரிபு, யமகம், சிலேடை பாடல்களை இயற்றினார். செல்வர்கள், பெரு நிலக்கிழார்கள் மீது செய்யுள்கள் பாடி நன்கொடை பெற்றார். இசைப்பாடல்கள் பல பாடினார். விருத்தப்பாக்கள் பலவும் இயற்றினார். சிற்றிலக்கிய வகைமைகளைக் கொண்டு பாடல்கள் இயற்றினார்.
பாடல் நடை
ஆசையதனாலே அலையுமென் பாலே
பாசம்வருங் காலே பதந்தாமென் மேலே
நூல் பட்டியல்
- ஞானானந்த பேரின்பக் கீர்த்தனம்
- மதுரைக்கும்மி
- கோகரணக்கும்மி
- குன்றக்குடி குமரன் வண்ணம்
- பெரியபுராணக் கீர்த்தனை
- ருக்குமணி கல்யாணம்
- துருவ சரித்திரம்
- குசேல சரித்திரம்
- அம்பரீஷ மகாராச சரித்திரம்
உசாத்துணை
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.