தத்துவராயர்: Difference between revisions
Tamizhkalai (talk | contribs) No edit summary |
Tamizhkalai (talk | contribs) |
||
Line 4: | Line 4: | ||
தத்துவநாதர் சோழநாட்டின் வீரை மாநகரில் பிறந்தவர். அவரது மாமன் பெயர் சொரூபானந்தர். | தத்துவநாதர் சோழநாட்டின் வீரை மாநகரில் பிறந்தவர். அவரது மாமன் பெயர் சொரூபானந்தர். | ||
சிறுவயதிலேயே இவரும் சொருபானந்தரும் ஞான குருவைத் தேடி அலைந்தார்கள். வடக்கும் தெற்குமாகப் பிரிந்து குருவைத் தேடுவது எனவும் முதலில் குருவைக் காண்பவர் அக்குருவினிடத்தில் கற்ற வித்தையை மற்றவருக்கு | சிறுவயதிலேயே இவரும் சொருபானந்தரும் ஞான குருவைத் தேடி அலைந்தார்கள். வடக்கும் தெற்குமாகப் பிரிந்து குருவைத் தேடுவது எனவும் முதலில் குருவைக் காண்பவர் அக்குருவினிடத்தில் கற்ற வித்தையை மற்றவருக்கு கற்றுக் கொடுக்கலாம் என தீர்மானித்தனர்., சொரூபானந்தர் திருப்பைஞ்ஞீலி அருகே கோவர்த்தனம் என்ற ஊரில், ஒரு புதரில் சிவப்பிரகாசர் என்ற குருவைக் கண்டார் சொரூபானந்தர். அவரிடம் ஞான உபதேசம் பெற்றார். தத்துவநாதருக்கு சொரூபானந்தரே குருவானார். | ||
== ஆன்மிக வாழ்க்கை == | |||
குரு மீதும், குருவினுடைய குரு மீதும் துதிப்பாடல்களாக சிவப்பிரகாச வெண்பா, திருத்தாலாட்டு, பிள்ளை திருநாமம், மும்மணிக்கோவை, நான்மணிமாலை, கலிப்பா, சிலேடையுலா, கலிமடல், அஞ்ஞவதைப்பரணி, மோகவதைப்பரணி போன்ற 18 சிற்றிலக்கியங்களைப் பாடினார். | |||
எளிய மக்கள் இவரை `பாடுதுரை' என்றும் அழைத்து வந்துள்ளனர். எளிய நாட்டுப்புறப் பாடல் பாணியில் தன்னுடைய பாடல்களை இயற்றியவர் இவர். இவர் வடலூர் வள்ளல் ராமலிங்க சுவாமிக்கும் முன்பே, சேத்தியாத் தோப்பு அருகே எறும்பூர் என்ற இடத்தில் ஒரு ஆடி மாத சதய நட்சத்திர நாளில் ஒளி யாய்ப் பிரிந்தார் (சுத்த தேகஸித்தி). | எளிய மக்கள் இவரை `பாடுதுரை' என்றும் அழைத்து வந்துள்ளனர். எளிய நாட்டுப்புறப் பாடல் பாணியில் தன்னுடைய பாடல்களை இயற்றியவர் இவர். இவர் வடலூர் வள்ளல் ராமலிங்க சுவாமிக்கும் முன்பே, சேத்தியாத் தோப்பு அருகே எறும்பூர் என்ற இடத்தில் ஒரு ஆடி மாத சதய நட்சத்திர நாளில் ஒளி யாய்ப் பிரிந்தார் (சுத்த தேகஸித்தி). | ||
Line 11: | Line 14: | ||
இவர் தத்துவத்தின் வழியே ஆன்மிகத்தை விளக்கியதால் `தத்துவராயர்' எனப் பெயர் பெற்றார். இவர் சுத்த தேக ஸித்தி எனும் சித்து முறையைக் கைக்கொண்டதாகக் கூறப்படுகிறது. | இவர் தத்துவத்தின் வழியே ஆன்மிகத்தை விளக்கியதால் `தத்துவராயர்' எனப் பெயர் பெற்றார். இவர் சுத்த தேக ஸித்தி எனும் சித்து முறையைக் கைக்கொண்டதாகக் கூறப்படுகிறது. | ||
Revision as of 05:34, 1 May 2024
தத்துவராயர் (Tattuvarayar) (பொ.யு. 15 -ம் நூற்றாண்டு) சைவ தத்துவ ஞானி. வடமொழி வேதாந்த நெறிக்குத் தமிழில் இலக்கணம் கண்டவர். அவர் பாடிய நூல்கள் 'அடங்கன்முறை' என அறியப்படுகின்றன. பக்தி மரபில் நின்று சஙரரின் அத்வைதத்தைப் பாடியவர். இவர் வேதாந்தி. தம் வேதாந்தக் கொள்கைகளை நிறுவுவதற்காகத் தேவாரப்பாடல்களைத் தன் கோணத்திற்கேற்பத் திரட்டி வெளியிட்டார். அவரது தேவாரத் திரட்டு இரண்டு நூல்களாக உள்ளது
வாழ்க்கைக் குறிப்பு
தத்துவநாதர் சோழநாட்டின் வீரை மாநகரில் பிறந்தவர். அவரது மாமன் பெயர் சொரூபானந்தர்.
சிறுவயதிலேயே இவரும் சொருபானந்தரும் ஞான குருவைத் தேடி அலைந்தார்கள். வடக்கும் தெற்குமாகப் பிரிந்து குருவைத் தேடுவது எனவும் முதலில் குருவைக் காண்பவர் அக்குருவினிடத்தில் கற்ற வித்தையை மற்றவருக்கு கற்றுக் கொடுக்கலாம் என தீர்மானித்தனர்., சொரூபானந்தர் திருப்பைஞ்ஞீலி அருகே கோவர்த்தனம் என்ற ஊரில், ஒரு புதரில் சிவப்பிரகாசர் என்ற குருவைக் கண்டார் சொரூபானந்தர். அவரிடம் ஞான உபதேசம் பெற்றார். தத்துவநாதருக்கு சொரூபானந்தரே குருவானார்.
ஆன்மிக வாழ்க்கை
குரு மீதும், குருவினுடைய குரு மீதும் துதிப்பாடல்களாக சிவப்பிரகாச வெண்பா, திருத்தாலாட்டு, பிள்ளை திருநாமம், மும்மணிக்கோவை, நான்மணிமாலை, கலிப்பா, சிலேடையுலா, கலிமடல், அஞ்ஞவதைப்பரணி, மோகவதைப்பரணி போன்ற 18 சிற்றிலக்கியங்களைப் பாடினார்.
எளிய மக்கள் இவரை `பாடுதுரை' என்றும் அழைத்து வந்துள்ளனர். எளிய நாட்டுப்புறப் பாடல் பாணியில் தன்னுடைய பாடல்களை இயற்றியவர் இவர். இவர் வடலூர் வள்ளல் ராமலிங்க சுவாமிக்கும் முன்பே, சேத்தியாத் தோப்பு அருகே எறும்பூர் என்ற இடத்தில் ஒரு ஆடி மாத சதய நட்சத்திர நாளில் ஒளி யாய்ப் பிரிந்தார் (சுத்த தேகஸித்தி).
வடலூர் ராமலிங்க வள்ளலார், இவரை ஞான குருவாக ஏற்று, அவரிடத்தில் சூட்சும மாகப் பல வித்தைகளை... குறிப்பாக ஒளி தேகம் பெறும் வித்தையை அறிந்ததாக நம்பப் படுகிறது.
இவர் தத்துவத்தின் வழியே ஆன்மிகத்தை விளக்கியதால் `தத்துவராயர்' எனப் பெயர் பெற்றார். இவர் சுத்த தேக ஸித்தி எனும் சித்து முறையைக் கைக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
பாடல்கள்
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.