பெரும்பற்றப் புலியூர் நம்பி: Difference between revisions
(Created page with "பெரும்பற்றப் புலியூர் நம்பி (பொ.யு. 15ஆம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் முக்கியமான படைப்பு. == வாழ்க்கைக் குறிப்பு == பெரும்பற்றப் புலியூர் ந...") |
No edit summary |
||
| Line 8: | Line 8: | ||
== பாடல் நடை == | == பாடல் நடை == | ||
திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் | |||
<poem> | <poem> | ||
சொக்கனென் றொருகா லோதில் | சொக்கனென் றொருகா லோதில் | ||
Revision as of 22:36, 3 April 2022
பெரும்பற்றப் புலியூர் நம்பி (பொ.யு. 15ஆம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் முக்கியமான படைப்பு.
வாழ்க்கைக் குறிப்பு
பெரும்பற்றப் புலியூர் நம்பி சிவகங்கை மாவட்டம் வேம்பத்தூரில் பொ.யு. 15ஆம் நூற்றாண்டில் பிறந்தார். தமிழ், வட மொழி இலக்கண இலக்கியங்களைக் கற்றார். திருத்தில்லையில் கூத்தியற்றும் இறைவனிடம் பக்தி கொண்டதால் பெரும்பற்றப் புலியூர் நம்பி என வழங்கப்பட்டிருக்கலாம் என அறிஞர்களால் நம்பப்படுகிறது.
இலக்கிய வாழ்க்கை
பழநி மாம்பழக்கவிச் சிங்க நாவலர் வேம்பத்தூரைப் புகழ்ந்து செய்யுட்கள் பாடியுள்ளார். அறக்கருத்துக்களை செய்யுட்களாக பாடினார். பாண்டிய மன்னனின் வேண்டுகோளுக்கிணங்க திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் நூலை ஆயிரத்தி எழுநூற்றி ஐம்பத்தி மூன்று செய்யுடகளாக இயற்றினார்.
பாடல் நடை
திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம்
சொக்கனென் றொருகா லோதில்
துயர்கெடும் பகையு மாளும்
சொக்கனென் றொருகா லோதில்
தொலைவிலாச் செல்வம் உண்டாம்
சொக்கனென் றொருகா லோதில்
சுருதி செல் யாண்டுஞ் செல்லும்
சொக்கனென் றொருகா லோதில்
சொர்க்கமும் எளிதா மன்றே
நூல் பட்டியல்
- திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம்
உசாத்துணை
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.