விரிச்சியூர் நன்னாகனார்: Difference between revisions
No edit summary |
(Changed incorrect text: {{ready for review}}) |
||
Line 21: | Line 21: | ||
* [https://www.tamilvu.org/ta/library-l1280-html-l12802e8-126861 விரிச்சியூர் நன்னாகனார்: tamilvu] | * [https://www.tamilvu.org/ta/library-l1280-html-l12802e8-126861 விரிச்சியூர் நன்னாகனார்: tamilvu] | ||
{{ | {{Ready for review}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 13:12, 14 April 2024
விரிச்சியூர் நன்னாகனார் சங்ககாலத் தமிழ்ப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய படல் ஒன்று புறநானூற்றில் உள்ளது.
வாழ்க்கைக் குறிப்பு
விரிச்சியூர் நன்னாகனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். விரிச்சியூரில் பிறந்தார். நன்னாகனார் என்பது பெயர்.
இலக்கிய வாழ்க்கை
விரிச்சியூர் நன்னாகனாரின் பாடல் ஒன்று புறநானூற்றில் 292வது பாடலாக அமைந்துள்ளது. வஞ்சித்திணைப்பாடல். பெருஞ்சோற்றுநிலை துறையைச் சேர்ந்தது.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- வேந்தர்க்கு வழங்கும் இனிய குளுமையான நறவக்கள்ளை உரிய முறையில் கலக்கி வரிசையாக வழங்குவர்.
பாடல் நடை
- புறநானூறு: 292 (திணை-வஞ்சி, துறை-பெருஞ்சோற்றுநிலை)
வேந்தற்கு ஏந்திய தீந்தண் நறவம்
யாம்தனக்கு உறுமறை வளாவ, விலக்கி,
வாய்வாள் பற்றி நின்றனென் என்று,
சினவல் ஓம்புமின் சிறுபுல் லாளர்!
ஈண்டே போல வேண்டுவன் ஆயின்,
என்முறை வருக என்னான், கம்மென
எழுதரு பெரும்படை விலக்கி,
ஆண்டு நிற்கும் ஆண்தகை யன்னே.
உசாத்துணை
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.