ரமணி சந்திரன்: Difference between revisions
No edit summary |
|||
Line 4: | Line 4: | ||
ரமணிச்சந்திரன் 10 ஜூலை 1938 ல் திருச்செந்தூரில் தினத்தந்தி உரிமையாளர்களான ஆதித்தனாரின் குடும்பத்தில் பிறந்தார். பெரிய கூட்டுக்குடும்பத்தில் வளர்ந்தார். சரவண ஐயர் திண்ணைப் பள்ளியிலும் பின்னர் அரசு தொடக்கப்பள்ளியிலும் பயின்றார். திருச்செந்தூர் பஞ்சாயத்து போர்டு உயர்நிலைப் பள்ளி இருபாலரும் படிக்கும் இடமென்பதனால் ஆரம்பப்பள்ளிக்குப்பின் படிப்பு நிறுத்தப்பட்டது. அதன்பின் அம்மாவுக்கு உடல்நலச் சிக்கல் ஏற்பட்டு திருநெல்வேலியில் குடியேறியபோது சாரா டக்கர் பெண்கள் பள்ளியில் சேர்ந்து பயின்றார். புகுமுக வகுப்பை முடித்து சாரா டக்கர் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்தார். திருமணமானதனால் படிப்பை முடிக்கவில்லை | ரமணிச்சந்திரன் 10 ஜூலை 1938 ல் திருச்செந்தூரில் தினத்தந்தி உரிமையாளர்களான ஆதித்தனாரின் குடும்பத்தில் பிறந்தார். பெரிய கூட்டுக்குடும்பத்தில் வளர்ந்தார். சரவண ஐயர் திண்ணைப் பள்ளியிலும் பின்னர் அரசு தொடக்கப்பள்ளியிலும் பயின்றார். திருச்செந்தூர் பஞ்சாயத்து போர்டு உயர்நிலைப் பள்ளி இருபாலரும் படிக்கும் இடமென்பதனால் ஆரம்பப்பள்ளிக்குப்பின் படிப்பு நிறுத்தப்பட்டது. அதன்பின் அம்மாவுக்கு உடல்நலச் சிக்கல் ஏற்பட்டு திருநெல்வேலியில் குடியேறியபோது சாரா டக்கர் பெண்கள் பள்ளியில் சேர்ந்து பயின்றார். புகுமுக வகுப்பை முடித்து சாரா டக்கர் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்தார். திருமணமானதனால் படிப்பை முடிக்கவில்லை | ||
தனிவாழ்க்கை | == தனிவாழ்க்கை == | ||
1958ல் கல்லூரி படிப்பின்போதே ரமணி தினத்தந்தி திருச்சி பதிப்பில் பணியாற்றியவரும், திருச்செந்தூரைச் சேர்ந்தவருமான பாலசந்திரனை மணந்துகொண்டார் . திருமணத்துக்கு பிறகு பாலசந்திரன் தஞ்சாவூருக்கு மாற்றலானபோது அங்கே மூன்று ஆண்டுகள் வாழ்ந்தார். | 1958ல் கல்லூரி படிப்பின்போதே ரமணி தினத்தந்தி திருச்சி பதிப்பில் பணியாற்றியவரும், திருச்செந்தூரைச் சேர்ந்தவருமான பாலசந்திரனை மணந்துகொண்டார் . திருமணத்துக்கு பிறகு பாலசந்திரன் தஞ்சாவூருக்கு மாற்றலானபோது அங்கே மூன்று ஆண்டுகள் வாழ்ந்தார். | ||
இலக்கியவாழ்க்கை | == இலக்கியவாழ்க்கை == | ||
ரமணி சந்திரனின் சகோதரியின் கணவர் ராணி வாராந்தரி இதழின் ஆசிரியர் [[அ.மா.சாமி]] ரமணி சந்திரன் ராணி இதழில் ஒரு போட்டிக்கு கதை எழுதி பரிசு பெற்றார். அதன்பின் ராணி இதழில் தொடர்ச்சியாக கதைகளும் தொடர்கதைகளும் எழுதினார். ராணி இதழ் உருவாக்கியிருந்த எளிமையான சொற்றொடர்களும், குறைவான சொற்களும் கொண்ட நடையை தானும் பயின்றார். அந்த நடை கீழ்நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த, குறைவாக வாசிக்கும் பெண்களுக்கு எளிதாக வாசிக்கும்படி அமைக்கப்பட்டது. ஆகவே அவர் புகழ்பெற்ற எழுத்தாளராக ஆனார். | |||
ரமணி சந்திரனின் சகோதரியின் கணவர் ராணி வாராந்தரி இதழின் ஆசிரியர் [[அ.மா.சாமி]] ரமணி சந்திரன் ராணி இதழில் ஒரு போட்டிக்கு கதை எழுதி பரிசு பெற்றார். அதன்பின் ராணி இதழில் தொடர்ச்சியாக கதைகளும் தொடர்கதைகளும் எழுதினார். ராணி இதழ் உருவாக்கியிருந்த எளிமையான சொற்றொடர்களும், குறைவான சொற்களும் கொண்ட நடையை தானும் பயின்றார். அந்த நடை கீழ்நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த, குறைவாக வாசிக்கும் பெண்களுக்கு எளிதாக வாசிக்கும்படி அமைக்கப்பட்டது. ஆகவே அவர் புகழ்பெற்ற எழுத்தாளராக ஆனார். | |||
நாவல்கள் | இவருடைய முதல் நாவல் ‘ஜோடிப் புறாக்கள்’. ரமணி சந்திரன் இருநூறு நாவல்கள் எழுதியிருக்கலாம் என்று சி.சரவணக்கார்த்திகேயன் சொல்கி[https://tamizhini.in/2020/05/16/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF/ றார்]. காமன்ஃபோக்ஸ் பதிப்பகப் பக்கம் 183 நாவல்களை பட்டியலிடுகிறது. பெண்களின் வாழ்க்கைச்சிக்கல்களையே ரமணி சந்திரன் எழுதினார். பெரும்பாலும் சிறுநகர்களைச் சேர்ந்த உயர்நடுத்தர, உயர்வர்க்க குடும்பச்சூழலை கொண்ட கதைகள் அவை | ||
== நாவல்கள் == | |||
# வாழ்வு என் பக்கம் | # வாழ்வு என் பக்கம் | ||
# ஆசை ஆசை ஆசை | # ஆசை ஆசை ஆசை | ||
Line 112: | Line 111: | ||
* http://www.omnibusonline.in/2013/02/blog-post_26.html | * http://www.omnibusonline.in/2013/02/blog-post_26.html | ||
* [https://www.thamizhdna.org/%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/ https://www.thamizhdna.org/%ரமணி] சந்திரன் | * [https://www.thamizhdna.org/%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/ https://www.thamizhdna.org/%ரமணி] சந்திரன் | ||
*[https://tamizhini.in/2020/05/16/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF/ தமிழினி சி.சரவணக்கார்த்திகேயன் பக்கம்] |
Revision as of 10:04, 31 March 2022
ரமணி சந்திரன் (10 ஜூலை 1938 ) தமிழ் எழுத்தாளர். பொதுவாசிப்புக்குரிய நாவல்களை எழுதியவர். பெண்களின் வாழ்க்கையைப் பேசுபொருளாகக் கொண்ட இக்கதைகள் பெண்களை வாசகிகளாக எதிர்நோக்கி எழுதப்படுபவை. தமிழில் புகழ்பெற்ற பெண் எழுத்தாளர்களில் ஒருவர்.
பிறப்பு, கல்வி
ரமணிச்சந்திரன் 10 ஜூலை 1938 ல் திருச்செந்தூரில் தினத்தந்தி உரிமையாளர்களான ஆதித்தனாரின் குடும்பத்தில் பிறந்தார். பெரிய கூட்டுக்குடும்பத்தில் வளர்ந்தார். சரவண ஐயர் திண்ணைப் பள்ளியிலும் பின்னர் அரசு தொடக்கப்பள்ளியிலும் பயின்றார். திருச்செந்தூர் பஞ்சாயத்து போர்டு உயர்நிலைப் பள்ளி இருபாலரும் படிக்கும் இடமென்பதனால் ஆரம்பப்பள்ளிக்குப்பின் படிப்பு நிறுத்தப்பட்டது. அதன்பின் அம்மாவுக்கு உடல்நலச் சிக்கல் ஏற்பட்டு திருநெல்வேலியில் குடியேறியபோது சாரா டக்கர் பெண்கள் பள்ளியில் சேர்ந்து பயின்றார். புகுமுக வகுப்பை முடித்து சாரா டக்கர் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்தார். திருமணமானதனால் படிப்பை முடிக்கவில்லை
தனிவாழ்க்கை
1958ல் கல்லூரி படிப்பின்போதே ரமணி தினத்தந்தி திருச்சி பதிப்பில் பணியாற்றியவரும், திருச்செந்தூரைச் சேர்ந்தவருமான பாலசந்திரனை மணந்துகொண்டார் . திருமணத்துக்கு பிறகு பாலசந்திரன் தஞ்சாவூருக்கு மாற்றலானபோது அங்கே மூன்று ஆண்டுகள் வாழ்ந்தார்.
இலக்கியவாழ்க்கை
ரமணி சந்திரனின் சகோதரியின் கணவர் ராணி வாராந்தரி இதழின் ஆசிரியர் அ.மா.சாமி ரமணி சந்திரன் ராணி இதழில் ஒரு போட்டிக்கு கதை எழுதி பரிசு பெற்றார். அதன்பின் ராணி இதழில் தொடர்ச்சியாக கதைகளும் தொடர்கதைகளும் எழுதினார். ராணி இதழ் உருவாக்கியிருந்த எளிமையான சொற்றொடர்களும், குறைவான சொற்களும் கொண்ட நடையை தானும் பயின்றார். அந்த நடை கீழ்நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த, குறைவாக வாசிக்கும் பெண்களுக்கு எளிதாக வாசிக்கும்படி அமைக்கப்பட்டது. ஆகவே அவர் புகழ்பெற்ற எழுத்தாளராக ஆனார்.
இவருடைய முதல் நாவல் ‘ஜோடிப் புறாக்கள்’. ரமணி சந்திரன் இருநூறு நாவல்கள் எழுதியிருக்கலாம் என்று சி.சரவணக்கார்த்திகேயன் சொல்கிறார். காமன்ஃபோக்ஸ் பதிப்பகப் பக்கம் 183 நாவல்களை பட்டியலிடுகிறது. பெண்களின் வாழ்க்கைச்சிக்கல்களையே ரமணி சந்திரன் எழுதினார். பெரும்பாலும் சிறுநகர்களைச் சேர்ந்த உயர்நடுத்தர, உயர்வர்க்க குடும்பச்சூழலை கொண்ட கதைகள் அவை
நாவல்கள்
- வாழ்வு என் பக்கம்
- ஆசை ஆசை ஆசை
- அவள் எங்கே பிறந்திருக்கிறாளோ
- அடிவாழை
- அமுதம் விளையும்
- அன்பின் தன்மையை அறிந்த பின்னே
- அதற்கொரு நேரமுண்டு
- அவனும் அவளும்
- அழகு மயில் ஆடும்
- சந்தினி
- எல்லாம் உனக்காக
- என் உயிர் நீதானே
- எனது சிந்தனை மயங்குதடி
- என்னை யாரென்று எண்ணி எண்ணி
- என்னுளே நிறைந்தவளே
- கான மழை நீ எனக்கு
- இடைவெளி அதிகமில்லை
- இனி எல்லாம் நீ அல்லவா
- இறைவன் கொடுத்த வரம்
- இருளுக்கு பின்வரும் ஜோதி
- இது ஒரு உதயம்
- காதல் கொண்ட மனது
- காதல் என்னும் சோலையிலே
- காக்கும் இமை நான் உனக்கு
- கல்யாணத்தின் கதை
- கண்ணிலே இருப்பதென்ன
- கண்ணால் பார்த்த வேளை
- கண்ணன் மனம் என்னவோ
- கண்ணே கண்மனியே
- கண்ணின் மணி போன்றவளே
- கண்ணும் கண்ணும் கலந்து
- காத்திருக்கிறேன் ராஜகுமாரா
- காற்று வெளியிடை கண்ணம்மா
- காவியமோ ஓவியமோ
- கிழக்கு வெளுத்ததம்மா
- கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு
- லாவண்யா
- மானே மானே மானே
- மதுமதி
- மைவிழி மயக்கம்
- மாலை மயங்குகின்ற நேரம்
- மயங்குகிறாள் ஒரு மாது
- மெல்ல திறந்தது கதவு
- நாள் நல்ல நாள்
- நான் உன்னை நீங்க மாட்டேன்
- நான் என்பதும் நீ என்பதும்
- நந்தினி
- நாத சுர ஓசையிலே
- நெஞ்சே நீ வாழ்க
- நெஞ்சோடு நெஞ்சம்
- நேச நதி கரையில்
- நேசம் மறக்கவில்லை நெஞ்சம்
- நிலா காயும் நேரம்
- நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
- நின்னையே ரதி என்று
- ஒன்று பட்ட உள்ளங்கள்
- ஒன்று சேர்ந்த அன்பு மாறுமோ
- ஒரு சின்ன ரகசியம்
- பால் நிலா
- பக்கத்தில் ஒரு பத்தினி பெண்
- பாலை பசுங்கிளியே
- பார்க்கும் விழி நான் உனக்கு
- பார்த்த இடத்தில் எல்லாம்
- பொன் மானை தேடி
- பொங்கட்டும் இன்ப இரவு
- பூங்காற்று
- பிரிய மனம் கூடுதில்லையே
- புன்னகையில் புது உலகம்
- சிவப்பு ரோஜா
- சொந்தம் என்னாளும் தொடர்கதைதான்
- சுகம் தரும் சொந்தங்களே
- தண்ணீர் தணல் போல் தெரியும்
- தந்துவிட்டேன் என்னை
- தவம் பண்ணிடவில்லையடி
- தென்றல்வீசி வர வேண்டும்
- உன் முகம் கண்டேனடி
- உறங்காத கண்கள்
- வாணியை சரண் அடைந்தேன்
- வாழும் முறைமையடி
- வாரிசு
- வைர மலர்
- வலை ஓசை
- வல்லமை தந்துவிடு
- வந்து போகும் மேகம்
- வீடு வந்த வெண்ணிலவு
- வெண்மையில் எத்தனை நிறங்கள்
- வெண்ணிலவு சுடுவதென்ன
- விடியலை தேடும் பூபாளம்
- யாருக்கு மாலை
- ஏற்றம் புரிய வந்தாய்
- பொன் மகள் வந்தாள்