இரணியமுட்டத்து பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்: Difference between revisions
No edit summary |
|||
Line 12: | Line 12: | ||
</poem> | </poem> | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* பாடினோர் வரலாறு: tamilvu | * [https://www.tamilvu.org/slet/l1100/l1100pd1.jsp?bookid=20&auth_pub_id=68&pno=691 பாடினோர் வரலாறு: tamilvu] | ||
{{Being created}} | {{Being created}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 10:03, 27 October 2023
இரணியமுட்டத்து பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். பத்துப்பாட்டில் ஒன்றான மலைபடுகடாமை இயற்றினார்.
வாழ்க்கைக் குறிப்பு
இரணியமுட்டமென்பது மதுரையைச் சார்ந்த யானைமலை முதலிய இடங்களைத் தன்பாற் கொண்டதாகிய ஒரு சிறியநாடென்பர். இவர் பெருமையும் பிறவும் மலைபடுகடாத்தின் 145-ஆம் அடியின் விசேடவுரையால் விளங்கும். இவர் சாதியால் அந்தணர்; இதனை `உறையூர் ஏணிச்சேரி முடமோசி, பெருங்குன்றூர்ப்பெருங்கௌசிகன், கடியலூர் உருத்திரங்கண்ணனாரென்பன அந்தணர்க்குரியன' (தொல். மரபு, சூ. 74, பேர்.) என்பதனாலறிக. இந்நூலன்றி நற்றிணையில் இரண்டு (44,139) செய்யுட்களும் இவர் செய்தனவாகத் தெரிகின்றன. கௌசிகனாரென்று ஒரு நல்லிசைப் புலவர் பெயர் பழைய நூல்களிற் காணப்படுகின்றது; அவரும் இவரும் ஒருவரோ வேறோ தெரியவில்லை. இவர் பாடியவற்றுள், ஆகுளி, எல்லரி, குழல், குறும்பரந்தூம்பு, சிறுபறை, சீறியாழ், தட்டை, தண்ணுமை, துடி, தூம்பு, பதலை, பன்றிப்பறை, பாண்டில், பேரியாழ், முழவென்னும் இசைக்கருவிகளைப்பற்றிய செய்திகளும், குறிஞ்சி, படுமலை, மருதமென்னும் பண்களைப்பற்றிய செய்திகளும், யாழ்வருணனையும், காட்டுவழியிடையே செல்லுகையில் இசைக் கருவிகளுக்கு நேரும் இடையூறுகளும், அவற்றை நீக்கிக் கொள்ளும் உபாயங்களும் காணப்படுதலின், இவர் இசைக்கருவிகளைப் பற்றியும் பண்புகளைப்பற்றியும் நன்கறிந்தவரென்பது பெறப்படும். "திருமழை தலைஇய விருணிற விசும்பின், விண்ணதி ரிமிழிசை கடுப்பப் பண்ணமைத்துத், திண்வார் விசித்த முழவு" (மலைபடு.1-3), "மழையெதிர் படுகண் முழவுக ணிகுப்ப" (மலைபடு. 532)என முழவின் ஒலிக்கு மேகத்தின் முழக்கத்தை மலைபடு கடாத்தில் உவமை கூறியதை ஒட்டி "எழிலி ...... முழவின் மண்ணார் கண்ணி னிம்மெனவிமிரூஉ" (நற்.139) என மழை முழக்கத்திற்கு முழவின் ஒலியை இவர் உவமித்திருத்தல் அறியத்தக்கது.
இலக்கிய வாழ்க்கை
இரணியமுட்டத்து பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் பத்துப்பாட்டில் ஒன்றான மலைபடுகடாமை இயற்றினார்.
பாடல் வழி அறிய வரும் செய்திகள்
பாடல் நடை
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.