under review

நல்லூர்ச் சிறுமேதாவியார்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 26: Line 26:
*[https://noolaham.net/project/10/962/962.pdf பாவலர் சரித்திர தீபகம்: அ. சதாசிவம்பிள்ளை: கொழும்பு தமிழ்ச்சங்கம்]
*[https://noolaham.net/project/10/962/962.pdf பாவலர் சரித்திர தீபகம்: அ. சதாசிவம்பிள்ளை: கொழும்பு தமிழ்ச்சங்கம்]


{{Being created}}
{{ready for review}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 11:09, 25 August 2023

நல்லூர்ச் சிறுமேதாவியார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்க இலக்கியம் தொகுப்பில் இவரது பாடல் ஒன்று உள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

நல்லூர்ச் சிறுமேதாவியார் சங்க காலத்தைச் சேர்ந்த புலவர்.

இலக்கிய வாழ்க்கை

நல்லூர்ச் சிறுமேதாவியார் பாடிய பாடல் ஒன்று நற்றிணையில் 282வது பாடலாக உள்ளது.

அகில் மரம்

பாடல் வழி அறிய வரும் செய்திகள்

  • வளையல்கள் தளர்தல், அல்குல் வரிப்பு வாடுதல், நெற்றி அழகை இழத்தல் ஆகியவை காதல் நோயின் ஆறிகுறிகளாக கூறப்பட்டுள்ளன.
  • முகவாட்டம் அல்லது உடல் வாட்டம் ஒரு தீய நிமித்தமாகக் கருது வேலனை அழைத்து கழங்கை உருட்டி குறி கேட்கும் போக்கு இருந்துள்ளது.
  • உவமை: கானவன் மலைச்சாரலில் அகில் மரத்தை சுடுவதால் உருவாகும் மணக்கும் புகை மழை பொழியக் காத்திருக்கும் மேகம் போல இருக்கும்.

பாடல் நடை

  • நற்றிணை 282

தோடு அமை செறிப்பின் இலங்கு வளை ஞெகிழ,
கோடு ஏந்து அல்குல் அவ் வரி வாட,
நல் நுதல் சாய, படர் மலி அரு நோய்
காதலன் தந்தமை அறியாது, உணர்த்த,
அணங்குறு கழங்கின் முது வாய் வேலன்
கிளவியின் தணியின், நன்றுமன் சாரல்
அகில் சுடு கானவன் உவல் சுடு கமழ் புகை,
ஆடு மழை மங்குலின், மறைக்கும்
நாடு கெழு வெற்பனொடு அமைந்த, நம் தொடர்பே?

உசாத்துணை


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.