வீரட்டானேஸ்வரர் கோயில்: Difference between revisions
No edit summary |
No edit summary |
||
Line 1: | Line 1: | ||
[[File:வீரட்டானேஸ்வரர் கோயில் .jpg|thumb|வீரட்டானேஸ்வரர் கோயில் ]] | [[File:வீரட்டானேஸ்வரர் கோயில் .jpg|thumb|வீரட்டானேஸ்வரர் கோயில் ]] | ||
[[File:வீரட்டானேஸ்வரர் கோயில் 1.jpg|thumb|வீரட்டானேஸ்வரர் கோயில் ]] | [[File:வீரட்டானேஸ்வரர் கோயில் 1.jpg|thumb|வீரட்டானேஸ்வரர் கோயில் ]] | ||
வீரட்டானேஸ்வரர் கோயில் திருவதிகையில் உள்ள | வீரட்டானேஸ்வரர் கோயில் திருவதிகையில் உள்ள தேவாரப் பாடல் பெற்ற தலம். இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. | ||
== இடம் == | == இடம் == | ||
வீரட்டானேஸ்வரர் கோயில் கடலூர் மாவட்டம் திருவதிகையில் அமைந்துள்ளது. சென்னை-நெய்வேலி மார்க்கத்திலுள்ள பண்ருட்டி நகரை ஒட்டியவாறு அமைந்துள்ள திருவதிகைக்கு பண்ருட்டி வழியாக செல்லும் பேருந்துகளில் செல்லலாம். கடலூரிலிருந்தும் செல்லலாம். | வீரட்டானேஸ்வரர் கோயில் கடலூர் மாவட்டம் திருவதிகையில் அமைந்துள்ளது. சென்னை-நெய்வேலி மார்க்கத்திலுள்ள பண்ருட்டி நகரை ஒட்டியவாறு அமைந்துள்ள திருவதிகைக்கு பண்ருட்டி வழியாக செல்லும் பேருந்துகளில் செல்லலாம். கடலூரிலிருந்தும் செல்லலாம். | ||
[[File:வீரட்டானேஸ்வரர் கோயில்2.jpg|thumb|வீரட்டானேஸ்வரர் கோயில்]] | [[File:வீரட்டானேஸ்வரர் கோயில்2.jpg|thumb|வீரட்டானேஸ்வரர் கோயில்]] | ||
== வரலாறு == | == வரலாறு == | ||
வீரட்டானேஸ்வரர் கோயில் பொ.யு 6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. பல்லவர்களுக்கும் முற்பட்டது. | வீரட்டானேஸ்வரர் கோயில் பொ.யு. 6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. பல்லவர்களுக்கும் முற்பட்டது. | ||
===== திருநாவுக்கரசர் ===== | ===== திருநாவுக்கரசர் ===== | ||
திருநாவுக்கரசர் சமணசமயத்தை தழுவியிருந்த போது சூலை நோயால் பாதிக்கப்பட்டார். அவருடைய நோய் தீர சமண முனிவர்கள் முயன்றும் தோற்றனர். சிவபக்தையாயிருந்த தம் தங்கை திலகவதியாரிடம் சென்று தன் நோய் தீர வேண்டினார். தமக்கையாரும் வீரட்டானத்துறை சிவன்கோயிலுக்கு அழைத்துச் சென்றபோது திருநாவுக்கரசர் சிவனை நோக்கி கூற்றாயினவாறு விலக்ககலீர் என்னும் பதிகத்தைப் பாடினார். நோயும் தணிந்தது. இறைவன் அவருடைய பதிகப்பாடலின் நா வன்மை கேட்டு மகிழ்வுற்று நாவுக்கரசர் | [[திருநாவுக்கரசர்]] சமணசமயத்தை தழுவியிருந்த போது சூலை நோயால் பாதிக்கப்பட்டார். அவருடைய நோய் தீர சமண முனிவர்கள் முயன்றும் தோற்றனர். சிவபக்தையாயிருந்த தம் தங்கை திலகவதியாரிடம் சென்று தன் நோய் தீர வேண்டினார். தமக்கையாரும் வீரட்டானத்துறை சிவன்கோயிலுக்கு அழைத்துச் சென்றபோது திருநாவுக்கரசர் சிவனை நோக்கி 'கூற்றாயினவாறு விலக்ககலீர்' என்னும் பதிகத்தைப் பாடினார். நோயும் தணிந்தது. இறைவன் அவருடைய பதிகப்பாடலின் நா வன்மை கேட்டு மகிழ்வுற்று நாவுக்கரசர் என்று அழைத்தார். மருள்நீக்கியார் என்ற இயற்பெயர் கொண்டவர் திருநாவுக்கரசர் ஆனார். திருநாவுக்கரசர் தம் வாழ்நாளில் சிவத்தலங்கள் யாவும் சென்று உழவாரப் பணி செய்து முக்தியடைந்தார். | ||
== தொன்மம் == | == தொன்மம் == | ||
தாருகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி ஆகிய மூன்று அசுரர்களும் சிவனை நோக்கி தவம் செய்து எவராலும் வெல்லமுடியாத வரத்தினைப் பெற்றனர். அவர்கள் தங்கம், வெள்ளி, செம்பு ஆகியவற்றால் ஆன கோட்டைகளை கட்டி வாழ்ந்து மனிதர்களுக்கும் தேவர்களுக்கும் எண்ணிறந்த துன்பங்களை விளைவித்தனர். தேவர்கள் சிவனிடம் முறையிட சிவபெருமான் பூமியைத் தேராகவும், சூரிய சந்திரர்களை தேர்ச்சக்கரங்களாகவும், பிரம்மனை தேரோட்டியாகவும் கொண்டு கையில் மேருமலையை வில்லாகவும், வாசுகியை நாணாகவும், திருமாலினை அம்பாகவும் கொண்டு புறப்பட்டார். அவருடன் தேவர்படையும் புறப்பட்டது. தேவர்கள் தம்மால் அசுரர்கள் அழிவர் என்று ஆணவம் கொண்டிருந்தனர். சிவபெருமான் அசுரர்கள் மீது எவ்வித கருவியையும் பயன்படுத்தாமல் தன் சிரிப்பால் எழுந்த தீப்பிழம்பால் முப்புரத்தையும் அழித்து தேவர்களின் ஆணவத்தை அழித்தார். இவ்வாறு சிவபெருமான் அசுரர்களின் ஆணவத்தையும், தேவர்களின் ஆணவத்தையும் அழித்தார். மேலும் அந்த மூன்று அசுரர்களில் இருவரை தனது வாயிற் காப்பாளாராகவும், ஒருவனை குடமுழா இசைப்பவனாகவும் இருத்திக் கொண்டார். | தாருகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி ஆகிய மூன்று அசுரர்களும் சிவனை நோக்கி தவம் செய்து எவராலும் வெல்லமுடியாத வரத்தினைப் பெற்றனர். அவர்கள் தங்கம், வெள்ளி, செம்பு ஆகியவற்றால் ஆன கோட்டைகளை கட்டி வாழ்ந்து மனிதர்களுக்கும் தேவர்களுக்கும் எண்ணிறந்த துன்பங்களை விளைவித்தனர். தேவர்கள் சிவனிடம் முறையிட சிவபெருமான் பூமியைத் தேராகவும், சூரிய சந்திரர்களை தேர்ச்சக்கரங்களாகவும், பிரம்மனை தேரோட்டியாகவும் கொண்டு கையில் மேருமலையை வில்லாகவும், வாசுகியை நாணாகவும், திருமாலினை அம்பாகவும் கொண்டு புறப்பட்டார். அவருடன் தேவர்படையும் புறப்பட்டது. தேவர்கள் தம்மால் அசுரர்கள் அழிவர் என்று ஆணவம் கொண்டிருந்தனர். சிவபெருமான் அசுரர்கள் மீது எவ்வித கருவியையும் பயன்படுத்தாமல் தன் சிரிப்பால் எழுந்த தீப்பிழம்பால் முப்புரத்தையும் அழித்து தேவர்களின் ஆணவத்தை அழித்தார். இவ்வாறு சிவபெருமான் அசுரர்களின் ஆணவத்தையும், தேவர்களின் ஆணவத்தையும் அழித்தார். மேலும் அந்த மூன்று அசுரர்களில் இருவரை தனது வாயிற் காப்பாளாராகவும், ஒருவனை குடமுழா இசைப்பவனாகவும் இருத்திக் கொண்டார். | ||
Line 22: | Line 22: | ||
[[File:வீரட்டானேஸ்வரர் கோயில்4.jpg|thumb|வீரட்டானேஸ்வரர் கோயில்]] | [[File:வீரட்டானேஸ்வரர் கோயில்4.jpg|thumb|வீரட்டானேஸ்வரர் கோயில்]] | ||
== சிற்பங்கள் == | == சிற்பங்கள் == | ||
பல்லவர் கால கற்றளி சிதிலமடைந்த பின்பு சோழர்காலத்தில் திருப்பணி செய்யப்பட்டது. பின் மீண்டும் பழுதடைந்த நிலையில் கருவறையைச் சுற்றி உள்ள கோட்டச் சிற்பங்கள் அனைத்தும் சுதைச் சிற்பங்களாக அமைக்கப்பட்டது. கங்காளர், பிச்சையேற்கும் பெருமான், காலனை வதைக்கும் காலாரி, சந்திரசேகரர், உமை, விநாயகர், இராமர் சீதை, ஆனையுரித்த பிரான், முப்புரம் எரித்த பெருமான், வீரபத்திரர், கங்கையை சடையில் கொண்ட பிரான், இராவணனுக்கு அருள்பாலித்த இறைவன் ஆகிய சுதைச் சிற்பங்களும், அண்ணாமலையார் சோழர்கால கற்சிற்பம் மேற்குக் கோட்டத்திலும் காணப்படுகின்றன. | பல்லவர் கால கற்றளி சிதிலமடைந்த பின்பு சோழர்காலத்தில் திருப்பணி செய்யப்பட்டது. பின் மீண்டும் பழுதடைந்த நிலையில் கருவறையைச் சுற்றி உள்ள கோட்டச் சிற்பங்கள் அனைத்தும் சுதைச் சிற்பங்களாக அமைக்கப்பட்டது. கங்காளர், பிச்சையேற்கும் பெருமான், காலனை வதைக்கும் காலாரி, சந்திரசேகரர், உமை, விநாயகர், இராமர் சீதை, ஆனையுரித்த பிரான், முப்புரம் எரித்த பெருமான், வீரபத்திரர், கங்கையை சடையில் கொண்ட பிரான், இராவணனுக்கு அருள்பாலித்த இறைவன் ஆகிய சுதைச் சிற்பங்களும், அண்ணாமலையார் சோழர்கால கற்சிற்பம் மேற்குக் கோட்டத்திலும் காணப்படுகின்றன. புத்தர் சிற்பம் ஒன்று இக்கோயிலில் உள்ளது. திருநாவுக்கரசரின் புடைப்புச்சிற்பமும் உள்ளது. தூண்களில் அரசதிருவுருவங்கள் உள்ளன. நந்தி கல் சிற்பம் உள்ளது. கோபுரத்தின் நுழைவுவாயிலின் உட்புறம் ஆடல் கரணங்கள் நூற்றியெட்டு வகையும் ஆடல் மகள் ஆடுவதான புடைப்புச் சிற்பங்களும் அமைந்துள்ளன. | ||
== ஓவியங்கள் == | == ஓவியங்கள் == | ||
பதினாறு தூண்கள் உள்ள முகமண்டபத்தின் விதானத்தில் ஆடல்வல்லான், கங்கையை சடைமேல் தாங்கும் கங்காதரர், கலைமகள், கணபதி, முருகன், ஆலமர்க்கடவுள் முதலிய ஓவியங்கள் உள்ளன. | பதினாறு தூண்கள் உள்ள முகமண்டபத்தின் விதானத்தில் ஆடல்வல்லான், கங்கையை சடைமேல் தாங்கும் கங்காதரர், கலைமகள், கணபதி, முருகன், ஆலமர்க்கடவுள் முதலிய ஓவியங்கள் உள்ளன. | ||
Line 56: | Line 56: | ||
{{First review completed}} | |||
{{ | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 10:22, 16 July 2023
வீரட்டானேஸ்வரர் கோயில் திருவதிகையில் உள்ள தேவாரப் பாடல் பெற்ற தலம். இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இடம்
வீரட்டானேஸ்வரர் கோயில் கடலூர் மாவட்டம் திருவதிகையில் அமைந்துள்ளது. சென்னை-நெய்வேலி மார்க்கத்திலுள்ள பண்ருட்டி நகரை ஒட்டியவாறு அமைந்துள்ள திருவதிகைக்கு பண்ருட்டி வழியாக செல்லும் பேருந்துகளில் செல்லலாம். கடலூரிலிருந்தும் செல்லலாம்.
வரலாறு
வீரட்டானேஸ்வரர் கோயில் பொ.யு. 6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. பல்லவர்களுக்கும் முற்பட்டது.
திருநாவுக்கரசர்
திருநாவுக்கரசர் சமணசமயத்தை தழுவியிருந்த போது சூலை நோயால் பாதிக்கப்பட்டார். அவருடைய நோய் தீர சமண முனிவர்கள் முயன்றும் தோற்றனர். சிவபக்தையாயிருந்த தம் தங்கை திலகவதியாரிடம் சென்று தன் நோய் தீர வேண்டினார். தமக்கையாரும் வீரட்டானத்துறை சிவன்கோயிலுக்கு அழைத்துச் சென்றபோது திருநாவுக்கரசர் சிவனை நோக்கி 'கூற்றாயினவாறு விலக்ககலீர்' என்னும் பதிகத்தைப் பாடினார். நோயும் தணிந்தது. இறைவன் அவருடைய பதிகப்பாடலின் நா வன்மை கேட்டு மகிழ்வுற்று நாவுக்கரசர் என்று அழைத்தார். மருள்நீக்கியார் என்ற இயற்பெயர் கொண்டவர் திருநாவுக்கரசர் ஆனார். திருநாவுக்கரசர் தம் வாழ்நாளில் சிவத்தலங்கள் யாவும் சென்று உழவாரப் பணி செய்து முக்தியடைந்தார்.
தொன்மம்
தாருகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி ஆகிய மூன்று அசுரர்களும் சிவனை நோக்கி தவம் செய்து எவராலும் வெல்லமுடியாத வரத்தினைப் பெற்றனர். அவர்கள் தங்கம், வெள்ளி, செம்பு ஆகியவற்றால் ஆன கோட்டைகளை கட்டி வாழ்ந்து மனிதர்களுக்கும் தேவர்களுக்கும் எண்ணிறந்த துன்பங்களை விளைவித்தனர். தேவர்கள் சிவனிடம் முறையிட சிவபெருமான் பூமியைத் தேராகவும், சூரிய சந்திரர்களை தேர்ச்சக்கரங்களாகவும், பிரம்மனை தேரோட்டியாகவும் கொண்டு கையில் மேருமலையை வில்லாகவும், வாசுகியை நாணாகவும், திருமாலினை அம்பாகவும் கொண்டு புறப்பட்டார். அவருடன் தேவர்படையும் புறப்பட்டது. தேவர்கள் தம்மால் அசுரர்கள் அழிவர் என்று ஆணவம் கொண்டிருந்தனர். சிவபெருமான் அசுரர்கள் மீது எவ்வித கருவியையும் பயன்படுத்தாமல் தன் சிரிப்பால் எழுந்த தீப்பிழம்பால் முப்புரத்தையும் அழித்து தேவர்களின் ஆணவத்தை அழித்தார். இவ்வாறு சிவபெருமான் அசுரர்களின் ஆணவத்தையும், தேவர்களின் ஆணவத்தையும் அழித்தார். மேலும் அந்த மூன்று அசுரர்களில் இருவரை தனது வாயிற் காப்பாளாராகவும், ஒருவனை குடமுழா இசைப்பவனாகவும் இருத்திக் கொண்டார்.
கோயில் பற்றி
- மூலவர் பெயர்: வீரட்டானேஸ்வரர்
- அம்மன் பெயர்: பெரியநாயகி, திரிபுரசுந்தரி
- தலமரம்: சரங்கொன்றை
- தீர்த்தம்: சூலத்தீர்த்தம், கிணறு தீர்த்தம், சக்கர தீர்த்தம், கெடிலநதி
கோயில் அமைப்பு
வீரட்டானேஸ்வரர் கோயில் முழுவதும் புனரமைக்கப்பட்டது. பல்லவர் காலத்தில் கற்றளியாக்கப்பட்ட இக்கோயில் அதற்கு முன்னரே மண்டளியாக இருந்தது. இங்குள்ள் அண்ணாமலையார் சிற்பம் சோழர்காலத்தைச் சேர்ந்தது. தற்போது கருவறை விமானம் சுவரிலிருந்து கலசம் வரை சுதையால் செய்யப்பட்டுள்ளது. விமானம் திராவிட பாணியில் எட்டுப்பட்டைகளைக் கொண்ட எண்கரமாக உள்ளது. ஐந்து தளங்களை உடையதாக உள்ளது. தளங்களில் சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம், இராஜகோபுரம், பதினாறுகால் மண்டபம், அம்மன் திருமுன் ஆகிய கட்டடப் பரிமாணங்களைப் பெற்றது. மகாமண்டபம் கூட்டுத்தூண்களைப் பெற்றுள்ளது. இக்கோயிலில் பல்லவர் கால யாளித்தூண்கள் உள்ளன. பதினாறு கால் மண்டபத் தூண்களில் புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. காஞ்சி கைலாசநாதர் கோயிலைப் போன்று கருவறைத் திருச்சுற்றுக்களைப் பெற்றுள்ளது.
சிற்பங்கள்
பல்லவர் கால கற்றளி சிதிலமடைந்த பின்பு சோழர்காலத்தில் திருப்பணி செய்யப்பட்டது. பின் மீண்டும் பழுதடைந்த நிலையில் கருவறையைச் சுற்றி உள்ள கோட்டச் சிற்பங்கள் அனைத்தும் சுதைச் சிற்பங்களாக அமைக்கப்பட்டது. கங்காளர், பிச்சையேற்கும் பெருமான், காலனை வதைக்கும் காலாரி, சந்திரசேகரர், உமை, விநாயகர், இராமர் சீதை, ஆனையுரித்த பிரான், முப்புரம் எரித்த பெருமான், வீரபத்திரர், கங்கையை சடையில் கொண்ட பிரான், இராவணனுக்கு அருள்பாலித்த இறைவன் ஆகிய சுதைச் சிற்பங்களும், அண்ணாமலையார் சோழர்கால கற்சிற்பம் மேற்குக் கோட்டத்திலும் காணப்படுகின்றன. புத்தர் சிற்பம் ஒன்று இக்கோயிலில் உள்ளது. திருநாவுக்கரசரின் புடைப்புச்சிற்பமும் உள்ளது. தூண்களில் அரசதிருவுருவங்கள் உள்ளன. நந்தி கல் சிற்பம் உள்ளது. கோபுரத்தின் நுழைவுவாயிலின் உட்புறம் ஆடல் கரணங்கள் நூற்றியெட்டு வகையும் ஆடல் மகள் ஆடுவதான புடைப்புச் சிற்பங்களும் அமைந்துள்ளன.
ஓவியங்கள்
பதினாறு தூண்கள் உள்ள முகமண்டபத்தின் விதானத்தில் ஆடல்வல்லான், கங்கையை சடைமேல் தாங்கும் கங்காதரர், கலைமகள், கணபதி, முருகன், ஆலமர்க்கடவுள் முதலிய ஓவியங்கள் உள்ளன.
சிறப்புகள்
- அட்டவீரட்டானத் தலங்களில் இத்தலம் முதன்மையானது.
- திரிபுரத்தை எரித்த இறைவனது கோலம் இங்குள்ளது.
- அட்ட வீரட்டத் தலங்களில் அதிகப் பாடல் பெற்ற தலம் இது.
- தேவார மூவரோடு மாணிக்க வாசகரும், அருணகிரிநாதரும் இத்தலத்தைப் பாடினர்.
- திருநாவுக்கரசரால் உழவாரப்பணி இங்குதான் முதன் முதலில் செய்யப்பட்டது.
- சிதறுகாய் உடைக்கும் வழக்கும் இத்தலத்திலிருந்துதான் தொடங்கியது.
- இக்கோயிலில் அதிக திருமணங்கள் நடைபெறுகின்றன.
- பன்னிரு திருமுறைகளில் இறைவன் முப்புரத்தை எரித்த நிகழ்ச்சி அதிகமாக கூறப்பட்டுள்ளது.
அன்றாடம்
- காலை 7-12
- மாலை 4-8
வழிபாடு
- பூசைக்காலம்: விச்வரூபம், திருவனந்தல், காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம்
விழாக்கள்
- சித்திரை 10 நாட்கள் திருவிழா
- சித்திரை சதயம் அப்பர் முக்திப்பேறு
- கைலாயக் காட்சி
- வைகாசிப் பெருவிழா 10 நாட்கள் திருத்தேர் உலா
- ஆடிப்பூரம் உற்சவம் 10 நாட்கள்
- கார்த்திகை சோமவாரம்
- மார்கழி மாதம் மாணிக்கவாசகர் விழா 10 நாட்கள்
- மார்கழி திருவதிகை நடராசர் தீர்த்தவாரி
- மாசி மகாசிவராத்திரி
- பங்குனி திலகவதியார் குருபூஜை
உசாத்துணை
- 69 Famous Temples To Visit In Mayiladuthurai: Dharisanam
- அருள்மிகு திருவதிகை வீரட்டானேஸ்வரர் திருக்கோயில்: tamilvu
- திருவதிகை வீரட்டானேசுவரர்: vastushastram
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.